Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை விழுந்து பெண் பயணி காயம்

Featured Replies

1538195379-1378.jpg

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை மற்றும் கண்ணாடி விழுந்து நொறுங்குவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. கண்ணாடி விழுந்து நொறுங்குவதில் சதம் அடிக்க சென்னை விமான நிலையம் காத்திருக்கும் நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதே அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று பயணி மீது விழுந்ததில் கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்த பெண் பயணி உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்முறையாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுமாதிரியான விபத்து நடந்துள்ளது. இதனால் சென்னை விமானம் நிலையம் போல் தொடர்கதை ஆகாமல் உடனடியாக இதுமாதிரி இன்னொரு விபத்து நடக்காவண்ணம் மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/roof-tiles-broken-at-chennai-metro-rail-station-one-injured-118092900008_1.html

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für chennai lic 

அட... சென்னை  விமான நிலையத்தில் தான்,  கூரை  கண்ணாடி   99  தரம், உடைந்து விழுந்தது என்றால்....
மெட்ரொ  ரயிலுமா...?  ஒரு பாடம்.. போதாதா?  இந்த, மக்களுக்கு?  ?
 

தமிழ் நாட்டு...  எஞ்ஜினியர்   எல்லாரையும்,   "கிடுகு"  பின்னுகிற வேலைக்கு...அனுப்பி விடுங்கள்.  ?
அத்துடன்..   அந்த அரசியல் வாதிகளை,   L I C  கட்டிடத்தின்  உச் சியில்,  இருந்து... கீழே தள்ளி விடுங்கள்.?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில்  ஊழல் மட்டும் இல்லையெண்டால்  இந்தியாவை நடத்தும் வல்லமை அதற்குத்தான் ஆரியம் செய்த திருட்டு வேலை எல்லாபக்கமும் ஊழல் இப்ப கூட தமிழ்நாட்டில் கொலை கொள்ளை சாமி சிலை கடத்தல் எல்லாம் வடமாநிலத்தவர் தொடர்பு இருக்கும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für chennai lic 

அட... சென்னை  விமான நிலையத்தில் தான்,  கூரை  கண்ணாடி   99  தரம், உடைந்து விழுந்தது என்றால்....
மெட்ரொ  ரயிலுமா...?  ஒரு பாடம்.. போதாதா?  இந்த, மக்களுக்கு?  ?
 

தமிழ் நாட்டு...  எஞ்ஜினியர்   எல்லாரையும்,   "கிடுகு"  பின்னுகிற வேலைக்கு...அனுப்பி விடுங்கள்.  ?
அத்துடன்..   அந்த அரசியல் வாதிகளை,   L I C  கட்டிடத்தின்  உச் சியில்,  இருந்து... கீழே தள்ளி விடுங்கள்.?

ஒழுங்காய் படிச்சு தராதரம் பெற்ற எஞ்சினியரெல்லாம் துபாய் அமெரிக்கா லண்டனிலை வேலை செய்யினம்.. :cool:
லஞ்சம் குடுத்து படிச்ச எஞ்சினியர் முகட்டுக்கு பிளான் போட்டால் இடிஞ்சு விழாமல் வேறை என்ன செய்யும்?

நல்லாய் வருது வாயிலை :grin:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் சர்ச்சையில் சிக்கிய சென்னை விமான நிலைய மேற்கூரை.. இடிஞ்சு விழலை.. ஆனா...!

chennai-airport455-1521174932-1543033027

சென்னை: சென்னை விமான நிலையம் மழை காரணமாக பல இடங்களில் ஒழுகியதால் பயணிகள் அசௌகரியம் அடைந்தனர்.சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாடு என உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

எனவே, பயணிகளின் நலன் கருதி இந்த விமான நிலையம் 2013-ம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உலக தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு வசதிகளுடன் சென்னை விமான நிலையம் பார்ப்பதற்கு பிரமாண்டமாக உருவானது.

ஆனால் ஒய்யாரமா தாழம்பூ என பழமொழிக்கேற்ப, அவ்வப்போது அங்கு மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.இதனால் விமான நிலையத்திற்குள் செல்பவர்கள் பாதுகாப்பிற்கு தலையில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு ஆனது.

இரண்டு நாள் மழைக்கே:

இந்நிலையில், சென்னை விமான நிலைய மேற்கூரை இரண்டு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள் பெய்த மழையில் விமான நிலையத்துக்கு பயணிகள் வந்து போகும் இடங்களில் கூரையில், பல இடங்களில் தண்ணீர் ஒழுகியதால்  அதிர்ச்சி அடைந்தனர்.

ஒழுகிய மழைநீர்:

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக செல்லும் 2-வது மாடியின் மேற்கூரை மற்றும் முதல் தளத்தில் காலியாக உள்ள இடத்திலும் மழைநீர் கொட்டியது. இதேபோல், பயணிகளை பரிசோதனை செய்யும் இடத்தில் பக்கவாட்டு சுவர் வழியாக மழைநீர் பயணிகள் நிற்கும் பகுதிக்குள் புகுந்தது. இதனால் பயணிகள் அசௌகரியம் அடைந்தனர்.

உடனடி நடவடிக்கை:

உடனடியாக இது குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக கூரையில் இருந்து மழைநீர் கொட்டிய 3 இடங்களையும் சரி செய்ய முயற்சி நடந்தது. ஆனாலும், அது பலனளிக்கவில்லை. எனவே, மழை நீர் ஒழுகிய இடங்களில் பிளாஸ்டிக் பாத்திரங்கள் வைக்கப்பட்டது.

அதில் நிறையும் நீரை அவ்வப்போது விமான நிலைய ஊழியர்கள் பிடித்து வெளியே ஊற்றினர்.

பயணிகள் அதிர்ச்சி:

சர்வதேச தரம் கொண்ட சென்னை விமான நிலைய மேற்கூரை 2 நாள் மழையைக்கூட தாங்க முடியாத அளவிற்கு ஒழுகுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு நாள் மழைக்கே இப்படியென்றால், தொடர்ச்சியாக மழை பெய்தால் விமான நிலையத்திற்குள் படகில் தான் செல்ல வேண்டும் போலயே என பலர் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தபடிச் சென்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/roof-of-chennai-airport-turns-leaky-334935.html

டிஸ்கி :

இனி தவறாமல் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் . .

images?q=tbn:ANd9GcSvwWd0L28t5DC20boFj5Q87282061-bucket-and-spade-put-together-pumbrella-rain.png

 

?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ஏர் போர்ட்டில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டமார் டமார்.. இது 83 வது முறை !

chennai-airportt-600-1544275304.jpg

சென்னை: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நேரத்தில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டம் டம்மென்று உடைந்து நொறுங்கியதால், பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தில் கண்ணாடிகள், மேற்கூரைகள் விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படியே 6 வருஷம் ஓடிவிட்டது. ஆனாலும் இதற்கு ஒரு முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பயணிகள், வழியனுப்ப வந்தவர்கள் என கிட்டத்தட்ட 16 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை 82 முறை சுவர் கண்ணாடிகள், தானியங்கி கதவு கண்ணாடிகள், என உடைந்து நொறுங்கி வருகின்றன. இப்போது நொறுங்கியது 83-வது முறையாகும். 3-வது நுழைவு வாயில் மேல் பகுதியில் உள்ள 4 கண்ணாடிகளும் ஒரே நேரத்தில் சுக்குநூறாக உடைந்து விழுந்தது. இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அலறி ஓடினார்கள்.

உடைந்த கண்ணாடிகள் 8 அடி நீளம், 4 அடி அகலம் கொண்டது. யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அங்கிருந்த எல்லோரும் பதட்டமாகி விட்டார்கள. இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/breaking-glass-continues-chennai-airport-336063.html

டிஸ்கி :

799097_900x768.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பயணிகள், வழியனுப்ப வந்தவர்கள் என கிட்டத்தட்ட 16 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை 82 முறை சுவர் கண்ணாடிகள், தானியங்கி கதவு கண்ணாடிகள், என உடைந்து நொறுங்கி வருகின்றன. இப்போது நொறுங்கியது 83-வது முறையாகும். 3-வது நுழைவு வாயில் மேல் பகுதியில் உள்ள 4 கண்ணாடிகளும் ஒரே நேரத்தில் சுக்குநூறாக உடைந்து விழுந்தது. இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அலறி ஓடினார்கள்.

உடைந்த கண்ணாடிகள் 8 அடி நீளம், 4 அடி அகலம் கொண்டது. யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அங்கிருந்த எல்லோரும் பதட்டமாகி விட்டார்கள. இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எத்தனையோ தரம் மேற் கூரைகள், கண்ணாடிகள் உடைந்து விழுந்தும்...
விமானப் பயணம் செய்ய வந்த பயணிகள்.... பாதிக்கப் பட்டிருந்தால்,
அதனால் ஏற்படும் சிரமங்கள் பல என்பதனை இந்த அரசு நினைத்துப் பார்க்கவில்லை எனும் போது கவலையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எத்தனையோ தரம் மேற் கூரைகள், கண்ணாடிகள் உடைந்து விழுந்தும்...
விமானப் பயணம் செய்ய வந்த பயணிகள்.... பாதிக்கப் பட்டிருந்தால்,
அதனால் ஏற்படும் சிரமங்கள் பல என்பதனை இந்த அரசு நினைத்துப் பார்க்கவில்லை எனும் போது கவலையாக உள்ளது.

NB-M3x12.jpg

எல்லாம் ஊழல் .. யாராவது இறந்தால் "நெட்" வாங்கியது உங்க ஆட்சி "போல்ற்" வாங்கியது எங்க ஆட்சி ..  என்று நாடி நரம்பு புடைக்க ரீவியில் (விவாதம்) கத்துவார்கள் ..😢

டிஸ்கி :

ramasubramani.jpg

"விமான நிலைய மேற்கூரை கண் காணிப்பாளர்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.