Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது அறிவு கூட அற்றவர்கள் எமது படைத்தரப்பினர்: சாடுகிறார் ரணில்

Featured Replies

[திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2007, 05:18 ஈழம்] [க.திருக்குமார்]

எம்மிடம் இந்திரா - 2D ரக ராடார்கள் மூன்று உள்ளன. இந்த வகை ராடார்களையே இந்தியாவும் பயன்படுத்தி வருகின்றது. அவை முன்னேற்றகரமான வகையைச் சேர்ந்த ராடார்கள். எனினும் அவற்றைப் புறக்கணித்த பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வான்படைத் தளபதி ஆகியோர் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு இந்தியாவின் ராடார்களே பொறுப்பு எனக் கூறியுள்ளனர்.

கட்டுநாயக்கவில் வான் தாக்குதல் இடம்பெற்ற சமயம் எல்லா ராடார்களும் ஓய்விலேயே வைக்கப்பட்டிருந்தன. இது எமது படைத்தரப்பினரின் அறிவற்ற தன்மையைக் காட்டுகின்றது. ராடார்கள் சூழற்சி முறையில் இயக்கப்பட வேண்டும் என்ற பொது அறிவு கூட அவர்களுக்கு இல்லை என நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசும் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்திரா - 2D ரக ராடார்கள் தொடர்பாக அரசாங்கம், இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு உடன்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. அது இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை. அவற்றில் இரு ராடார்கள் 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குறிப்பிடப்பட்ட ஓரிடத்தில் நிறுவப்பட்டன (பாதுகாப்பு காரணங்களுக்காக இடங்கள் மறைக்கப்பட்டுள்ளன), மூன்றாவது ராடார் கடந்த ஜனவரி மாதம் கிழக்குப் பகுதியில் (பாதுகாப்பு காரணங்களுக்காக இடங்கள் மறைக்கப்பட்டுள்ளன) நிறுவப்பட்டது.

புரிந்துணர்வு உடன்பாட்டின் பிரகாரம் சிறிலங்காப் படையினருக்கு முழு அளவிலான பயிற்சிகளும் வழங்கப்படுவதுடன், ராடார்களும் பின்னர் 3D தொழில்நுட்பத்திற்கு தரமுயர்த்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் அரசாங்கம், இந்தியாவின் திட்டத்தை புறக்கணித்தது விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு வசதியாகி விட்டது. ராடார்களை இயக்குவதற்கு வசதியாக 240 பேரை பயிற்றுவிக்க இந்தியா திட்டமிட்டிருந்தது. அவற்றில் 40 எலக்ரோனிக் பொறியியலாளர்களும், ஏனைய தொழில்நுட்பவியலாளர்களும் அடங்குவர்.

முதலில் பயிற்சிக்காக 30 பேர் அழைக்கப்படடிருந்தனர், ஆனால் பாதுகாப்பு அமைச்சு இருவரையே அனுப்பியிருந்தது. தாக்குதல் இடம்பெற்ற சமயம் ராடார்கள் ஓய்வில் வைக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கபட்டுள்ளதாக வவுனியாவில் இருந்து தகவல் கிடைத்த பின்னரும் அவை இயக்கப்படவில்லை, தகவல்களை அவர்கள் முக்கியமாக எடுக்கவில்லை.

எம்மிடம் உள்ள ராடார்கள் 8 - 4 -8 என்னும் அமைப்புடைய தொகுதியாகும். அதாவது 8 மணிநேரம் இயங்கினால் 4 மணிநேரம் ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தாக்குதல் இடம்பெற்ற சமயம் எல்லா ராடார்களும் ஓய்வில் வைக்கப்பட்டிருந்துள்ளன. ஒரு ராடார் ஓய்வில் உள்ள போது ஏனையவை இயக்கத்தில் இருத்தல் வேண்டும். ஆனால் தாக்குதல் இடம்பெற்ற சமயம் எல்லா ராடார்களும் ஓய்விலேயே வைக்கப்பட்டிருந்தன. இது எமது படைத்தரப்பினரின் அறிவற்ற தன்மையை காட்டுகின்றது. ராடார்கள் சூழற்சி முறையில் இயக்கப்பட வேண்டும் என்ற பொது அறிவு கூட அவர்களுக்கு இல்லை.

எமது வான்படையினரிடம் இரவில் தொழிற்படும் வல்லமை இல்லை. ஆகவே, விடுதலைப் புலிகளுக்கும் அந்த வல்லமை இல்லை என அவர்கள் எண்ணியிருந்தனர். எனவே தான் இரவில் ராடார்கள் ஓய்வில் வைக்கப்பட்டிருந்தன. இது எமது புலனாய்வுத்துறையின் தோல்வியாகும், சில பாதுகாப்புச் சாதனங்கள் இயங்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தனர், ஆனால் அவை சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதே உண்மை.

கண்காணிப்பு நிலைகளை அமைப்பதிலும் பாதுகாப்பு அமைச்சு கோட்டை விட்டுள்ளது. உயரம் குறைந்த பறப்பை அவதானிப்பதற்கு 30 கி.மீ சுற்றளவிற்கும், அதி உயர பறப்பை அவதானிப்பதற்கு 150 கி.மீ சுற்றளவுக்கும் கண்காணிப்பு நிலைகளை ஏற்படுத்தலாம். 30 கி.மீ சுற்றளவு வீச்சில் மரவிலவில் இருந்து கட்டுநாயக்க வரை கண்காணிக்க முடியும்.

இரண்டாவது உலகப் போரில் அமைக்கப்பட்டது போன்ற கண்காணிப்பு நிலைகள் எமக்கு தேவை. அமெரிக்கா, இந்தியா போன்றவற்றில் இருந்து நாம் அதனை பெற்றுக் கொள்ளலாம். ராடார்களால் கண்காணிக்க முடியாத பகுதிகளில் கண்காணிப்பு நிலைகள் அந்த பணியை செய்யும். ஆனால் எம்மிடம் அவை இல்லை என்றார் அவர்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாகலா ரட்னாயக்கா தெரிவித்ததாவது:

படையினரின் ஒருங்கமைப்பில் மிகப்பெரும் தவறுகள் இடம்பெற்றுள்ளன. ராடார்களுக்கு இடையிலான ஹொட்லைன் செயலிழந்திருந்தது. வவுனியாவில் உள்ள சிறப்பு அதிரடிப்படையினர் தமது செல்லிடத் தொலைபேசிகளின் மூலமே வானூர்தி தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர்.

ராடாரால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கண்டறியப்பட்டிருந்தாலும் படைத்தரப்பினரால் எதுவுமே செய்திருக்க முடியாது.

ஏனெனில் அவர்களிடம் தரைத் தாக்குதல் வானூர்திகளே உள்ளன. எம்மிடம் பழைமையான இரண்டு இடைமறித்து தாக்கும் வானூர்திகளே உண்டு. வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகள் இருந்தாலே அவற்றால் தாக்குதலை நடாத்த முடியும். படையினரிடம் வானில் இருந்து வானுக்குப் பாயும் ஏவுகணைகளும் இல்லை.

தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்ததும் ஹிங்குராங்கொடவில் உள்ள எம்.ஐ - 24 உலங்குவானூர்திப் பிரிவினர் ஏன் வானில் எழுந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை? அப்படி அவர்கள் முயற்சி எடுத்திருந்தால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வன்னிக்கு திரும்பிச் செல்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டிருப்பர் என்றார் அவர்.

இந்த கூட்டத்தில் ரணில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வந்து தாக்குதலை நடத்திவிட்டுச் சென்ற பாதைகள் தொடர்பான வரைபடத்தையும் உறுப்பினர்களுக்கு காண்பித்து விளக்கமளித்தார்.

நன்றி : புதினம்

தெரிந்தோ தெரியாமலோ சில நேரங்களில் இந்த்க் கோமாளியும் உண்மைகளை வெளிவிடும்..

ஒரு புலி பிரமுகர் ஒருவர் சொன்னார். புலி காற்றுப்போகாத இடத்துக்குள் எல்லாம் போவார்கள் என்று. அதோட விட்டாரா சொன்னார்.

வானவேடிக்கை நடக்கும் போது எமக்கு சொல்லமாட்டார்கள் எப்படி என்ன மாதிரி எல்லாம் வாணவேடிக்கைகளில் வெடிகள் கலர் கலராக எந்தெந்த டிசைனில் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. முதலாவது வெடித்ததும் ஆங்....என்று வாயைப்பிளப்போம்...பின்பு அடுத்தாக என்னும் சிறந்த வெடி ஒன்று விள அடடா என்போம். அதன் பின்பு என்னும் சிறந்த வெடி ஏறி வெடிக்கும் போது ஐயய்யோ என்று சொல்லி....வாய்பிளப்பது போல தான் புலிகளின் தாக்குதல்களும் இருக்கும் என்று.

அவர் சொன்னதினை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இவவளவு காலம் பொருத்தது என்ன சும்மா சம்பியன் பட்டாசு கொளுத்தவா? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு புலி பிரமுகர் ஒருவர் சொன்னார்.

இது வேறையாரோ பாவிக்கிற சொல் மாதிரி இருக்கே..! <_< :angry:

இவ்வளவு விலாவாரியாக புட்டுவைக்கும் அணில் விக்கிரமாதித்தன் தனது ஆட்சியில் கட்டுநாயாக்கா விமான நிலையம் துவம்சம் செய்யப்பட்டதை மறந்து போனார் போல இருக்கு...

புலிகள் தொடர்ந்தும் ஒரே மாதிரியான தாக்குதல் முறைகளை கையாள்வதில்லை, சிங்கிளப் பேரினவாதிகள் எல்லோரும் புலிகள் திரும்பவும் விரைவில் வானத்திலிருந்து வருவார்கள் என ஆவென்று பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும்போது, புலிகள் வேறு ரூபங்களில் போய் எதிர்பாராத அதிர்ச்சிகளைக் கொடுக்கக்கூடும்!

அடுத்த அடி எங்கே? எப்போது? எப்படி? அவன் ஒருவனுக்குத்தான் இது வெளிச்சம் ...

இரவில் தொழிற்படும் வல்லமை இலங்கைக் வான்படயினிடம் இல்லை என்ற உண்மையை ரணில், சிங்கள மக்கள்முன் போட்டு உடைத்துவிட்டார். இனி இரவில் வானில் சத்தங்கள் கேட்டும்போதெல்லாம் சிங்களவருக்கு திகில்தான்.

<_<:lol:

இப்பத்தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது படையை பற்றி விளங்கியிருக்குங்கோ

:P :P

இவ்வளவு விலாவாரியாக புட்டுவைக்கும் அணில் விக்கிரமாதித்தன் தனது ஆட்சியில் கட்டுநாயாக்கா விமான நிலையம் துவம்சம் செய்யப்பட்டதை மறந்து போனார் போல இருக்கு...

புலிகள் தொடர்ந்தும் ஒரே மாதிரியான தாக்குதல் முறைகளை கையாள்வதில்லை, சிங்கிளப் பேரினவாதிகள் எல்லோரும் புலிகள் திரும்பவும் விரைவில் வானத்திலிருந்து வருவார்கள் என ஆவென்று பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும்போது, புலிகள் வேறு ரூபங்களில் போய் எதிர்பாராத அதிர்ச்சிகளைக் கொடுக்கக்கூடும்!

அடுத்த அடி எங்கே? எப்போது? எப்படி? அவன் ஒருவனுக்குத்தான் இது வெளிச்சம் ...

முதலாவது கட்டுநாயக்காதாக்குதல் ரணிலின் காலத்தில் நடைபெறவில்லை மாப்பு

மன்னிக்கவும், பிழையாக ஏதோ எழுதிவிட்டேன் போல இருக்கின்றது... செய்தியை மீளவும் பரிசோதிக்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கட்டுநாயக்காதாக்குதல் ரணிலின் காலத்தில் நடைபெறவில்லை மாப்பு

அது சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் நடை பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கம் ஒரு பழமொழி இருக்கு

ஆடத்தெரியாதவள்

மேடை கோணல் என்றாளாம்???

முதலாவது கட்டுநாயக்காதாக்குதல் ரணிலின் காலத்தில் நடைபெறவில்லை மாப்பு

ஆம் நீங்கள் சொல்வது சரி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.