Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¤à¯ à®à®°à®¿à®¯à®¾ à®°à®à®¿à®©à®¿ à®à®¾à®°à¯

எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்!

ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நன்றாகவே தெரியும். அட வரலாறு தெரியலன்னா கூட கடந்த 2 நாட்களாக தினசரி செய்தித்தாள் படிச்சிருந்தாலாவது யார் இந்த 7 பேர் என்ற விஷயம் தெரிந்திருக்கும்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு 2016ம் ஆண்டு அனுப்பப்பட்டது. அந்த மனுவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பவே இல்லை என்ற உண்மை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது.

முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த 7 பேரின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தமிழக அரசியலில் தொடர்ந்து பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது 7 பேரின் விடுதலை விவகாரம்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த 7 பேர் என்று கேட்டிருக்கிறார். ராஜீவ் கொலை குற்றவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரைவிடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையே அது பற்றிய உங்களது கருத்து என்று கேட்டதற்கு நான் இப்போது தான் வருகிறேன் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.

அதான் சொன்னேன்ல தெரியாதுன்னு:  மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர் மீண்டும் இது பற்றி இன்னொரு செய்தியாளர் கேட்டார். அதான் தெரியாதுன்னு சொன்னேனே என்று கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கோபத்தை காட்டினார் ரஜினி.

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தெரியாது என்று சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், எந்த 7 பேர் விவகாரம் என்று கேட்டதை தான் எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.

தமிழகத்தில் சிறு பிள்ளைக்குக் கூட தெரியும் 7 பேர் விடுதலை என்றால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களைத் தான் சொல்கிறார்கள் என்று. ஆனால் தமிழகத்தில் நல்ல தலைவர் இல்லை, தலைவருக்கு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் ரஜினி இதைத் தெரியாது என்று சொல்கிறாரே. அரசியல் தலைவராக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் ரஜினிக்கு அது தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை, தமிழகத்தின் முதலமைச்சராக வர நினைப்பவர் இப்படி இருந்தால் எதிர்காலத்தில் இது யாருக்கு ஆபத்தாக இருக்கும்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-about-rajiv-assasination-convicts-release-334046.html

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

அதுதானே ஐயா வேறு கிரகத்திலிருந்தெல்லே குதித்திருக்கார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு எந்த 7 பேர் என்று கேட்டிருக்கிறார். ராஜீவ் கொலை குற்றவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரைவிடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லையே அது பற்றிய உங்களது கருத்து என்று கேட்டதற்கு நான் இப்போது தான் வருகிறேன் எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.

இதுகளையெல்லாம் தமிழ்நாட்டுச்சனம் தலையிலை வைச்சு கொண்டாடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

symbol-of-rajinikanth-political-party-fa

இறை நிலையில்  இருந்து நிகழ்காலத்திற்கு வர ரைம் எடுக்கும் கண்டியளோ ..அதற்குள் மைக்கை நீட்டி அலப்பறை செய்யப்படாது.. ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை கதற விடும் பவர் ஸ்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் கௌதமன்... ரஜனியை  பற்றிய கருத்தை தெரிவிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடும் சனத்திற்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®®à¯à®à®¿à®¤à®¾à®©à¯ பலà®à®¾à®²à®¿

ரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்!

ராஜிவ் காந்தி கொலையாளிகள் மற்றும் பாஜக குறித்த தனது பிரஸ் மீட்டுக்கு இன்று செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் குறித்தும், பாஜக குறித்தும் ரஜினிகாந்த் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.

7 பேர் என்றால் யார் என்று கேட்ட ரஜினிகாந்த், எதிர்க்கட்சிகள், பாஜகவை ஆபத்தான கட்சி என்று கூறினால், அப்படித்தானே இருக்கும் என்று கிண்டலாக பதில் அளித்தார்.

இதனிடையே, போயஸ் இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அவர் கூறியதாவது: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் பற்றி ரஜினிகாந்த்துக்கு தெரியாது என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர். தெரியும் என்றால் தெரியும் என்பேன், தெரியாது என்றால் தெரியாது என்பேன். இதில் வெட்கம் இல்லை. பேரறிவாளனிடம் 10 நிமிடம் போனில் பேசி ஆறுதல் கூறியவன்தான் இந்த ரஜினிகாந்த். இந்த வழக்கு பல நீதிமன்றங்களுக்கு சென்று வந்துள்ளது. 27 ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டனர். போதும். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

எல்லா கட்சிகளும் பாஜகவை தோற்கடிக்க ஒன்றாக சேர்ந்துள்ளார்களே, அந்த கட்சி அவ்வளவு ஆபத்தான கட்சியா என்று கேட்டனர். எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்து கொண்டுள்ளார்கள். அப்படியானால் பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே? பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.

இப்போது எல்லாம் வீடியோவாக எடுக்கிறார்கள். எனவே திரித்து செய்தி வெளியிடாதீர்கள். பாஜக ஆபத்தான கட்சியா இல்லையா என்ற எனது கருத்தை நான் இப்போது சொல்ல முடியாது. நான் முழுமையாக இன்னும் அரசியலில் இறங்கவில்லை. அன்றாட நிகழ்வுகளுக்கு நான் கருத்து கூற முடியாது. அதை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். இதே கேள்வி-பதிலை சொல்லி கொண்டிருந்தால் மக்கள் கடுப்பாகிவிடுவார்கள்.

10 பேர் எதிர்த்துக்கொண்டு ஒருவருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றால், யார் பலசாலி? அந்த 10 பேரா, அல்லது ஒருவரா? இதைவிட கிளியராக நான் எதையும் சொல்ல முடியாது? ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டுப்போனது என அமைச்சர் கூறியுள்ளார். அவர் பதவிக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும். பதிலுக்கு நான் அதே போன்ற கேள்வியை கேட்டால் நன்றாக இருக்காது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் நடித்த 2.O மற்றும் பேட்ட ஆகிய இரு திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ள நிலையில், சர்ச்சைகளை தவிர்க்க அவர் முற்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-meet-the-press-clarification-334094.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க பார்க்கிறாரே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க பார்க்கிறாரே?

 ரஜனிகாந்த் சுய சிந்தனை இல்லாதவர்.

யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை ஊடகங்கள்  பள்ளிகளுக்கு சென்று படிக்க வேண்டும்.

குரங்கிட்டை மூத்திரம் கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம்....:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 ரஜனிகாந்த் சுய சிந்தனை இல்லாதவர்.

யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை ஊடகங்கள்  பள்ளிகளுக்கு சென்று படிக்க வேண்டும்.

குரங்கிட்டை மூத்திரம் கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பாயுமாம்....:grin:

வாவ்....  ரஜனிக்கு  ஏற்ற நல்ல அருமையான பழமொழி. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.