Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இடமாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 18, 2018

Nishantha.jpg?zoom=0.8099999785423279&re
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறைப் பரிசோதகர் நிஷாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை நிஷாந்த சில்வாவே முன்னெடுத்து வந்திருந்தார்.  இந்தநிலையில் உடனும் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது

இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட 60 குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் செய்து, பல சந்தேகநபர்களை கைதுசெய்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகளை முன்னெடுத்ததும் நிஷாந்த சில்வா தலைமையிலான இரகசியப் காவல்துறைக் குழு என்பதுடன், கொழும்பில் 11 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவருக்கு பாதுகாப்பு பிரதானியொருவர் பாதுகாப்பு வழங்கியமை தொடர்பான விசாரணைகளையும் நிஷாந்த சில்வா முன்னெடுத்து வந்திருந்தார்.

அவர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து நீர்கொழும்பு பிரிவின் சாதாரண கடமைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/103764/

படைப் புலனாய்வு அதிகாரிகளை நீதிமன்றில் நிறுத்திய சீ.ஐ.டி நிஷாந்த சில்வா அதிரடிாக இடமாற்றம்

சிறிலங்காவில் பிரதமர் யார் என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில் வெள்ளை வான் கடத்தல், ஊடகவியலாளர் படுகொலை,சித்திரவதைகள் உள்ளிட்ட கொடூரங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவம், கடற்படை உள்ளிட்ட அரச படைப் பலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட படைப் புலனாய்வாளர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்த சீ.ஐ.டி யின் பாரிய கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்து பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வாவை சீ.ஐ.டி என்ற குறு:றுபு:புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றார்.

புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 11 இளைஞர்கள் கடத்தல், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மற்றும் தி நேசன் பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஆகியன தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான குற்றப்புலனாய்வு பிரிவினரே, கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உட்பட 20 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்களை கைதுசெய்தனர். இவர்களில் சிலர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை தலைநகர் கொழும்பின் கொட்டாஞ்சேசனை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் வைதது தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 இளைஞர்களை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன் கமாண்டர் ஹெட்டியாராச்சிக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் தற்போதைய முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தொடர்புபட்டிருப்பதையும் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு நிஷாந்த சில்வா தலைமையிலான சீ.ஐ.டி யினர் அறிவித்திருந்தனர்.

இதற்கமைய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அட்மிரல் விஜேகுணரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தமாறு உத்தரவிட்டும் உள்ளது. இதற்கு பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான சீ.ஐ.டி யினருக்கு அனுமதி மறுத்துவரும் சிறிலங்கா அரச தலைமை, அவர்களை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்தும் இருந்ததாக கொழும்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை மீண்டும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரியுடன் கூட்டு சேர்ந்துள்ள மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியினரும் படைப் புலனாய்வாளர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கும்,அட்மிரல் விஜேகுணரத்னவை கைதுசெய்ய எடுத்துவரும் முயற்சிக்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததிருந்தனர்.

அதேவேளை தாங்கள் ஆட்சியை கைப்பற்றினால் படைப் புலனாய்வாளர்கள் உட்பட படை அதிகாரிகளை கைதுசெய்யும் படலத்தை தடுத்து நிறுத்துவதாகவும் சூளுரைத்து வந்தனர்.

இந்த நிலையிலேயே ஒக்டோபர் 26 ஆம் திகதி மைத்ரியுடன் இணைந்து ரணில் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியுள்ள மஹிந்த ராஜபக்ச தரப்பினர் சீ.ஐ.டி பொலி்ஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை அதிரடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிற்கு அழுத்தங்களை கொடுத்தே மஹிந்த தரப்பு இந்த இடமாற்றத்தை செய்திரப்பதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் கூறுகின்றன.

அதெவேளை எந்தவித அச்சுறுத்தல்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது தமது கடமையை நிறைவேற்றிவந்த பொலிஸ் அதிகாரியான நிஸாந்த சில்வாவை இடமாற்றியது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இடையே கடும் விசனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெயரைக் குறிப்பிட விரும்பாத தலைமை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்கு 11 இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட வழக்கு உள்ளிட்ட பாரதுஸரமான குற்றங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்றும் சட்டத்தரணிகளும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பத்தினரும் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

https://www.ibctamil.com/security/80/109434?ref=rightsidebar

9 hours ago, போல் said:

எந்தவித அச்சுறுத்தல்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது தமது கடமையை நிறைவேற்றிவந்த பொலிஸ் அதிகாரியான நிஸாந்த சில்வாவை இடமாற்றியது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இடையே கடும் விசனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெயரைக் குறிப்பிட விரும்பாத தலைமை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்?
இன்னொரு ஆட்டத்தை தமிழர் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.