Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 கொலையாளிகள் விடுதலை .. 7 தமிழர் விடுதலை ஏன் இல்லை ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3  கொலையாளிகளை விடுதலை செய்ய என்ன ஒரு அக்கறை, வேகம்.. 7 தமிழர்கள் விடுதலை ஏன் இல்லை ?

perarivalan-santhan-murugan-nalini-s-jay

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யாத நிலையில், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக்கொலை செய்த அதிமுகவை சேர்ந்த தண்டனை குற்றவாளிகளை அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருமே 25 வருடங்களை சிறையில் கழித்தவர்கள். சுமார், இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் கழித்துள்ளனர்.ஆனால், அவர்கள் விடுதலை என்பது தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த 3 பேரை தெரிந்த ஆளுநருக்கு இந்த 7 பேரை தெரியுமா? இவர்களையும் விடுதலை செய்வாரா? கொடூர சம்பவம் 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கோவையை சேர்ந்த, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த, நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பீதியில் மக்கள்

டான்சி ஊழல் வழக்கில், தங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா, தண்டனை பெற்று, சிறை சென்றதற்காக, 3 மாணவிகளை உயிரோடு எரித்து அதிமுகவை சேர்ந்தவர்கள் கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் அச்சத்தையும், பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

மக்கள் நம்பிக்கை

உயிரோடு எரித்து கொலை செய்த மூவருக்கும், நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தபோதுதான், மக்கள் மத்தியில் இருந்த பீதி ஓரளவுக்கு குறைந்தது. இது போன்ற தண்டனைகள் வருங்காலங்களில் இப்படியான பஸ் எரிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கு பாடமாக இருக்கும், இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று மக்கள் நம்பினர்.

விடாமல் முயற்சி

ஆனால் அந்த நம்பிக்கையின் மீது பெரும் இடி இறங்கியுள்ளது. இந்த மூவருமே உள்நோக்கத்தோடு குற்ற செயலில் ஈடுபடவில்லை என்று கூறி அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தற்போதைய தமிழக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பரிந்துரை அளித்திருந்தது.இந்த பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுனர் அதை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆனால், அப்படியும் விடாத தமிழக அரசு, மீண்டும் வலியுறுத்தி ஆளுநருக்கு அறிக்கை அனுப்பியது.

கிடப்பில் போட்டனர்

அரசு இரண்டாவது முறையாக பரிந்துரை செய்த பிறகு மரபுப்படி ஆளுநர், அரசின் பரிந்துரையை ஏற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் மூவரையும் விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளார் ஆளுநர். ஆனால் தமிழக அரசு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருவருமே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றவில்லை.

7 பேர் விடுதலை

அமைச்சரவையை கூட்டி பரிந்துரை செய்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதோடு சரி. அதன் பிறகு இந்த மூன்று பேர் விடுதலை தொடர்பாக எடுக்கப்பட்ட அக்கறையை அதில் அரசு காட்டவில்லை. இந்த மூவருமே, உயிரோடு கல்லூரி மாணவிகளை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் என்பது பல்வேறு ஆதாரங்களை கொண்டு நிரூபிக்கப்பட்டது.

மாணவிகளின் பஸ் எரிப்பு காட்சிகள், வீடியோக்களாக பதிவாகி அப்போது டிவி சேனல்களில் பரபரப்பாக ஒளிபரப்பாகியது. ஆனால் ஏழு தமிழர்களை பொறுத்த அளவில், எதற்கு என்று தெரியாமல், பேட்டரி வாங்கிக் கொடுத்தது மட்டுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்தில் நேரடி தொடர்பில்லை என்ற பிறகும் கூட இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்தாலும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

https://tamil.oneindia.com/news/chennai/3-person-who-burn-collage-students-alive-death-near-dharmapuri-freed-from-jail-334553.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தருமபுரி பஸ் எரிப்பு: தண்டனை பெற்ற 3 அதிமுகவினர் விடுதலை - வழக்கின் பின்னணி

மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பு ஒன்றால் தண்டிக்கப்பட்டபோது, கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தினை அதிமுக தொண்டர்கள் தீ வைத்து எரித்ததில் மூன்று மாணவிகள் கருகி இறந்த வழக்கில், மரண தண்டனை பெற்று, பிறகு அதை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பெற்ற மூன்று அதிமுக-வினரை தமிழக அரசு முன்கூட்டி விடுவித்துள்ளது.

தருமபுரி பேருந்து எரிப்பு - மூன்று பேரும் விடுதலைபடத்தின் காப்புரிமை unknown

முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று, பத்தாண்டுகளை நிறைவுசெய்திருக்கும் கைதிகளை விடுவிக்கப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி சுமார் 1800 ஆயுள் தண்டனைக் கைதிகள் தமிழகச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்டபோது, அதனைக் கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்தினை அதிமுக தொணடர்கள் தீ வைத்துக் கொளுத்தியதில் மூன்று மாணவிகள் உடல் கருகி இறந்தனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இது தொடர்பான கோப்பு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பப்பட்டபோது, அதனை அவர் மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, இந்த கொலைகளில் எந்த வித சதியோ, உள்நோக்கமோ இல்லை என்பதால் அரசமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின்படி அவர்களை விடுவிக்கலாம் எனக் கூறி அந்தக் கோப்பை நவம்பர் முதல் வாரத்தில் தமிழக அரசு மீண்டும் ஆளுனருக்கு அனுப்பியது.

பிறகு ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டது. இந்த ஆணைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சிறைத் துறை தலைமையகத்திலிருந்து வேலூர் சிறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் இன்று பிற்பகல் பன்னிரண்டே கால் மணியளவில் வேலூர் சிறையிலிருந்து மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக மூன்று பேருக்கும் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் (1991-96) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள பிளஸன்ட் ஸ்டே என்ற ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி 7 தளங்களை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 1996ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் எச்.எம். பாண்டே, ஹோட்டலின் செயல் இயக்குனர் ராகேஷ் மிட்டல், நிர்வாக இயக்குனர் பாளை சண்முகம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கில் 2000-வது ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு வெளியானதும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் வன்முறையில் இறங்கினர். 50 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 5 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்தத் தருணத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு பேருந்துகளில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை தர்மபுரி மாவட்டத்தில் தடுத்தி நிறுத்திய வன்முறைக் கும்பல், மாணவிகள் முழுமையாக பேருந்தை விட்டு இறங்குவதற்கு முன்பாக பேருந்தில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தது.

இதில் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருதாசலத்தைச் சேர்ந்த வி. காயத்ரி, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி ஆகிய மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 16 மாணவிகள் காயமடைந்தனர். இந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2007 டிசம்பர் 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-46258678

  • கருத்துக்கள உறவுகள்

உயிரோட ஆட்களை கொளுத்தினவர்கள் எல்லாம் ஜெயிலில் இருந்து விடுதலை...சூப்பர் இந்தியா...வாழ்க ஜனநாயகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.