Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 25, 2018

maithripala-sirisena.png?zoom=1.10249994

பிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல், அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2015 ஜனவரி 08ஆம் திகதி இலங்கை மக்கள் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் தூய்மையான அரச முகாமைத்துவத்திற்காகவேயாகும் என தெரிவித்த ஜனாதிபதி ;, அதனை கருத்திற்கொண்டு தான் மிகவும் அறவழியில் பயணத்தை மேற்கொண்டுள்ளபோதிலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்து 03 மாதங்களாகும் போதே மத்திய வங்கி நிதி மோசடி இடம்பெற்றதன் காரணமாக அந்தப் பயணம் தோல்வியடைந்தது என்றும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் முன்னாள் பிரதமரின் தொலைநோக்கற்றதும் தன்னிச்சையானதுமான நடவடிக்கைகளால் பிரதமரை மாற்றிவிட்டு மக்களுக்கான அறவழியை தேர்ந்தெடுப்பதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ; தெரிவித்தார்.

தன்னை கொலை செய்வதற்கு முயற்சித்தவர்களுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றால் நாட்டின் நலனை விட தனது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ளும் ஊழல் அரசியல்வாதியாக தன்னால் செயற்பட நேர்ந்திருக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி தனது கொள்கை அவ்வாறானதல்ல என்றும் தெரிவித்தார்.

முற்றுமுழுதாக ஊழலுக்கு எதிராக செயற்படுபவன் என்ற வகையில் தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயகத்திற்கு மரியாதையளித்து அரசியலமைப்பிற்கு அமைய செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிலையியல் கட்டளைகளுக்கு அமைவானது அல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி அரசாங்கத்தை நியமித்தல், அரசாங்கத்தை மாற்றியமைத்தல் போன்ற மிக முக்கிய விடயங்களுக்கான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்போது குரல் மூலமான வாக்கெடுப்புகளை மேற்கொள்வது உகந்ததல்ல என்றும் இலத்திரனியல் வாக்கெடுப்பு அல்லது பெயர் மூலமான வாக்கெடுப்பு போன்ற முறையான நடைமுறைகளை கையாள வேண்டும் என்றும் அது தொடர்பில் தான் சபாநாயகர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அதற்கமைய செயற்பட்டமைக்காக தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவ்வாறு செயற்பட்டமைக்கு நன்றியையும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் அது தொடர்பாக தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தபோது அதாவது 2015 முதல் 2018 ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வரை அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி நிதி மோசடி போன்ற ஊழல், மோசடிகள், முறைக்கேடுகள் தொடர்பில் கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் மூலம் குறித்த ஊழல், மோசடி, முறைக்கேடுகள் தொடர்பில் மக்களுக்கு அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்

http://globaltamilnews.net/2018/104565/

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஊழல்பேர்வழி- விசாரணை செய்ய ஆணைக்குழு- கண்ணீர்விட்டழுதார் சிறிசேன

 பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை  மீண்டும் ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிகாரப்போட்டியை தீவிரப்படுத்தியுள்ளார் 

வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க மோசமான ஊழல்பேர்வழி எனவும் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சிக்கு பெரும்பான்மையிருந்தால் கூட அவர்களை ரணில் விக்கிரமசிங்கவை என்முன்னால் நிறுத்தவேண்டாம் நான் அவரை பிரதமராக்க மாட்டேன் என ஐக்கியதேசிய கட்சியினரிடம் தெரிவித்துள்ளேன் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எனது வாழ்நாளில் அவரை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

2015ற்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைகுழுவொன்றை அமைக்கப்போவதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் ஊழல்மிகுந்தவர்,அவரது பொருளாதார கொள்கைகள் உள்ளுர் தொழில்துறைக்கு பொருத்தமானவையில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.

எங்கள் கலாச்சாரத்திற்கு பொருத்தமில்லாத தீவிரதாரளமயவாத கொள்கையை ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்த முயன்றார் எனவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைந்தவேளை ரணில் விக்கிரமசிங்கவை  பதவிவிலகுமாறு எவ்வாறு மன்றாடினேன் என விபரித்துள்ள சிறிசேன செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீர் சிந்தியுள்ளார்.

srisena_no25_11.jpg

அவரது பொருளாதார கொள்கைகள் காரணமாகவே நாங்கள் தேர்தலில் தோற்றோம் என அவரிற்கு தெரிவித்தேன்,இந்த அறையில் வைத்து அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டேன் அவர் அதனை ஏற்க மறுத்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் 100 தடவைக்களிற்கு மேல் வெளிப்படையாக மோதியிருப்போம் எங்கள் மத்தியிலான அதிகாரப்போட்டி குறித்து அமைச்சரவை வெளிப்படையாக அறிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக நியமிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற பாரம்பரியமுள்ளது என தெரிவித்துள்ள சிறிசேன என்னால் ரணிலுடன் இணைந்து பணியாற்ற முடியாது ஐக்கியதேசிய கட்சி வேறு எவரையாவது நியமிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.virakesari.lk/article/45167

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.