Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பதவிக்கும், கடற்படைக்கும் துக்கமான நாள்’ – சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி

Featured Replies

 

Admiral-Ravindra-Wijegunaratne-court-300பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக்  கோவைக்கும் துக்கமான நாள் இது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில்,  நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி  அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம  தனது கீச்சகப் பக்கத்தில், நேற்று பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக்  கோவைக்கும் துக்கமான நாள்” என்று கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/29/news/34982

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து பாடசாலைச் சிறுவர்கள் உற்பட குறைந்தது 11 பேரைக்  கடத்திக் கொன்றது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜெயகுணரத்ன கடந்த புதனன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

தனது பூரண ராணுவ உடையில் நீதிமன்றுக்குச் சமூகமளித்திருந்த அட்மிரல் ரவீன்ந்திரவை, எதிர்வரும் 5 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்த்திரேட் நீதவான் ரங்க திசாநாயக்கா உத்தரவிட்டார்.

அட்மிரலின் கைதினைத் தடுக்கும் முகமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையான அழுத்தங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதித்துறையின் மேல் பிரயோகித்திருந்தபோதிலும் கூட, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவின் பல ராணுவ அதிகாரிகள் இறுதி யுத்தத்தின்போது பாரிய அளவிலான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை இழைத்திருந்தபோதிலும்கூட, வரலாற்றில் சட்டத்திற்குப் புறம்பான கடத்துதல்கள் மற்றும் கொலைகளுக்காக முதன் முதலாகக் கைதுசெய்யப்பட்டிருக்கும் மிகவுயர் ராணுவ அதிகாரி அட்மிரல் ரவீந்திரதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடத்தப்பட்டு காணாமல்ப் போகெச் செய்யப்பட்ட 11 சிறுவர்களில் 7 பேர் தமிழர்கள் என்பதோடு மீதி நால்வரும் சிங்களம் மற்றும் முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் விடுதலைக்காக இவர்களது பெற்றோர்கள் பல லட்சங்களை கப்பமாகச் செலுத்தியிருந்தபோதிலும்கூட, தங்களது பிள்ளைகளைக் காப்பாற்ற முடியவில்லை. 

இந்தக் கடத்தல்கள் தொடர்பாக 2010 இலிருந்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார், கொழும்புக் கோட்டை கடற்படை முகாமிலிருந்தும், திருகோணமலை கடற்படை முகாமிலிருந்தும் செயற்படும் கடற்படைக் குழுவொன்றே இக்கடத்தல்கள் மற்றும் காணாமல்ப் போகச் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இக்கடத்தல்கள் தொடர்பாக முன்னால் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் தசநாயக்கா உள்ளிட்ட 9 கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களைக் கைது செய்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இக்கடத்தல்கள் தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டு வந்த குற்றப் புலநாய்வுத்துறையினர், அட்மிரல் விஜெயகுணரத்ன பலமுறை கைதுசெய்யப்படும் நிலையிலிருந்த இக்கடத்தல்களின் முக்கிய சந்தேக நபரும், கடற்படை உளவுத்துறை அதிகாரியுமான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை தொடர்ச்சியாகக் காப்பற்றி வந்ததையும், மறைந்திருக்க உதவிபுரிந்ததையும் கண்டுபிடித்தனர். 

2006 இல் கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரவிராஜின் கொலை தொடர்பாக நேவி சம்பத் எனும் இன்னொரு பெயரால் அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

இக்கடத்தல்கள் மற்றும் கொலைகளின் மிக முக்கிய சாட்சியான இன்னொரு கடற்படை அதிகாரி, லெப்டினன்ட் கொமாண்டர் லக்சிறி கலகமகே தனக்கெதிராகச் சாட்சி சொல்வதைத் தடுக்கும் நோக்கில் அவரை   கடற்படைத் தலமையகத்தில் வைத்துக் கடத்த முயன்றமை தொடர்பாக குற்றப் புலநாய்வுப் பொலிஸார் நீதிபதிக்கு முறையிட்டதையடுத்து , அட்மிரல் ரவீந்திரவுக்கான பிணை நிராகரிக்கப்பட்டது.

கொமாண்டர் லக்சிறி கல்கமகே தன்னைக் கடத்துவதற்கு அட்மிரல் ரவீந்திர முயன்றது தொடர்பான முறைப்பாடொன்றினைக் கொழும்புப் பொலீஸ் நிலையத்தைல் பதிவுசெய்திருக்கிறார்.

இக்கடத்தல்கள் மற்றும் காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டு வந்த குற்றப் புலநாய்வு அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவினை இடமாற்றும் செய்யும்படி தனது அதிகாரத்தினைப் பாவித்து பொலீஸ் மா அதிபர்மேல் அட்மிரல் ரவீந்திர கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்தபோதிலும் கூட, இடமாற்றம் இறுதியில் கைவிடப்பட்டதும் நாம் அறிந்ததே.

சிறுவர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான பூர்வாங்க விசாரணைகளுக்கென்று அட்மிரல் ரவீந்திரவுக்கு கடந்த செப்டெம்பர் மாதத்தில் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, அவர் இதிலிருந்து தப்புவதற்காக சனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைப்படி  மெக்ஸிக்கோ நாட்டின் தேசிய தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.  

  • கருத்துக்கள உறவுகள்

அட்மிரல் ரவீந்திரவுக்கெதிராக மூன்று பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தபொழுதிலும்கூட, அவர் சரணடைவதற்குத் தொடர்ச்சியாக மறுத்து வந்ததும், அவரைக் கைதுசெய்ய குற்றப் புல்நாய்வுத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாகச் சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

அதிகாரத்திலிருந்தபொழுதே சட்டத்திற்குப் புறம்பான கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டமை அல்லது ஈடுபடுவதற்கு உடந்தையாக இருந்தமை, தொடர்ந்து சரணடைவதற்கு மறுத்தமை, இன்னொரு கடற்படை அதிகாரியைக் கடத்த முயன்றமை, அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றங்களுக்காக அட்மிரல் மீது ராணுவ நீதிமன்றத்தினூடாக விசாரணைகள் நடைபெறுவதற்கும் சாத்தியப்பட்டுகள் உள்ளன. 

அட்மிரல் வழக்குத் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்தினுள் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படப் பிடிப்பாளர்களைத் தாக்கியது தொடர்பாக அட்மிரல் ரவீந்திரவின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்த இரு கடற்படைப் புலநாய்வுத்துறையினர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அட்மிரலின் மெய்ப்பாதுகாவலர் அணியினினருடன் சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய இவ்விருவரும், தமது அதிகாரியின் வழக்குத் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் செய்திசேகரிப்பதைத் தடுக்கும் முகமாக தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஐ நா பிரதிநிதி கொழும்பில் இருந்து நிலைமைகளை அவதானித்தார். இந்த விசயத்தில் ஒழுங்காக இல்லாவிடில், உள்ளக விசாரணை எவ்வாறு செய்வீர்கள் என்று கேட்ப்பார்கள் என்பதால், ஆள் உள்ளுக்கு போக்கவேண்டியதாக போய் விட்டது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.