Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் தாய்மொழியாக சிங்கள மொழியை ஏற்கவேண்டும் ; பேருவளை நகர சபையில் தீர்மானம் நிறையேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேருவளை நகரசபைக்கு கடும் கண்டணத்தை தெரிவிக்கிறோம்.

சிங்களமும் வேண்டாம், தமிழும் வேண்டாம். 

தாய்மொழியாக அரபியில் தான் கற்போம் என்று தானே சொல்லியிருக்கவேண்டுமே.

Edited by Nathamuni

On 12/5/2018 at 2:52 AM, போல் said:

சிங்களவர்களாக மாற்றப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாகவும் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் சிலர் இந்துக்களாகவும் உள்ளனர்.

சிலாபம் நீர்கொழும்பு பகுதிகளில் மட்டுமல்ல இதே நிலை பொலநறுவை, குருநாகல், அனுராதபுரம் பகுதிகளிலும்  நடந்துள்ளது. இப்பகுதியில் பரந்து வாழ்ந்த தமிழர்கள் கல்விக்காக போதியளவு தமிழ் மொழிப்  பாடசாலைகள் இல்லாமையும், காணி வேலைவாய்ப்பு போன்ற வசதிகளை வழங்கியமையும், இப்பகுதிகளில் தமிழர்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாமையும் சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கு கைகொடுத்துள்ளது. 

இங்கிருந்த தமிழ் மக்களை வடபகுதித் தமிழர்கள் எந்தவித மொழி கலாச்சாரத் தொடர்பையும் பேணாமல் துண்டித்துக் கொண்டதால் இம் மக்களுக்கு வேறு தெரிவு இருக்கமுடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

On 12/7/2018 at 7:47 PM, இணையவன் said:

இங்கிருந்த தமிழ் மக்களை வடபகுதித் தமிழர்கள் எந்தவித மொழி கலாச்சாரத் தொடர்பையும் பேணாமல் துண்டித்துக் கொண்டதால் இம் மக்களுக்கு வேறு தெரிவு இருக்கமுடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லை இணையவன்!

எனக்குத் தெரிந்தவரை வடபகுதி மக்கள் மாநாடு நடத்தி இப்பகுதி மக்களுடன் தொடர்புகளை துண்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக அறியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.  

தொடர்புகள் என்பது  இருபக்க முயற்சி! ஒருசாராரை மட்டும் குறை சொல்ல முடியாது! இது பொதுவான யதார்த்தம்.

ஆனால் இலங்கையில், இந்த விடயத்தில், வடபகுதி மக்களை ஒருபோதும் குறை சொல்ல முடியாது, முழுப் பொறுப்பும் குறித்த பிரதேச மக்களையே சாரும். வரலாற்றை அறிந்தால் இதை விளங்கிக்கொள்வது சுலபம்.

காலம் காலமாக வடபகுதி மக்களுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்க தமிழின விரோத சக்திகள் முழுமூச்சுடன் செயற்படத்தையும் அதற்கு அந்தந்தப் பிரதேச மக்கள் முழு உடந்தையாகவும் இருந்தது வரலாறு.

மலையக தமிழர்கள் - ஈழத்தின் பூர்வீக தமிழர்களும் இணையக் கூடாது என்பதில் சிங்கள-பௌத்த இனமத வெறியர்களும் அவர்களுக்கு உடந்தையாக ஹிந்திய வெறியர்களும் செயற்பட்டு இலங்கைத் தமிழர் - இந்திய வம்சாவழி தமிழர் எனப் பிளவை ஏற்படுத்தினார்கள். அதற்காக பல்வேறு புனை கதைகளையும், சிறு சம்பவங்களை ஊதிப் பெருபித்தும் பிளவை ஏற்படுத்தினார். சுயநலம் கொண்ட கைக்கூலி அரசியல்வாதிகள் களத்தில் இறக்கப்பட்டு குறித்த பிரதேச மக்களும் அற்ப சொற்ப சலுகைகளுக்கும் விலைபோகும் நிலைமையை ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் வடபகுதி மக்கள் வலிந்து ஒரு தொடர்பை பேணுவது சாத்தியம் இல்லை. அது முறையாகவும் இருக்காது.

கிழக்கு தமிழர்கள் - வடக்கு தமிழர்களும் இணையக் கூடாது என்பதில் சிங்கள-பௌத்த இனமத வெறியர்கள் செயற்பட்டு பிரதேசவாதத்தை வளர்த்தனர். நிலத்தொடர்பை துண்டிக்க முயற்சிகள் செய்தனர். அதற்காக பல்வேறு புனை கதைகளையும், சிறு சம்பவங்களை ஊதிப் பெருபித்தும் பிளவை ஏற்படுத்தினார். சுயநலம் கொண்ட கைக்கூலி அரசியல்வாதிகள் களத்தில் இறக்கப்பட்டு குறித்த அமைச்சர்களாக்கப்பட்டு பிரதேசவாதம் விதைக்கப்பட்டது. கருணாவரை அது தொடர்ந்தது. மக்களும் அற்ப சொற்ப சலுகைகளுக்கும் விலைபோகும் நிலைமையை ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் வடபகுதி மக்கள் வலிந்து ஒரு முழுமையான தொடர்பை பேணுவது சாத்தியம் இல்லை. அது முறையாகவும் இருக்காது.

குறிப்பாக திருகோணமலை தமிழர்கள் - வடக்கு தமிழர்களும் இணையக் கூடாது என்பதில் சிங்கள-பௌத்த இனமத வெறியர்களுடன் சம்மந்தன் உட்பட பிரதேச சுயநல தமிழ் அரசியல்வாதிகள்  செயற்பட்டு பிரதேசவாதத்தை வளர்த்தனர். சிங்களவனுக்கு நிலத்தை குறைந்த விலைக்கு விற்றாலும் வில்லுங்கள் ஆனால் வடபகுதி தமிழர்களுக்கு தப்பித்தவறியும் நிலத்தை விற்கவேண்டாம் என்று சம்மந்தன் உட்பட பலர் 50 களிலிருந்து பிரச்சாரம் செய்துவந்துள்ளனர். இவர்களால் மக்களும் அற்ப சொற்ப சலுகைகளுக்கும் விலைபோகும் நிலைமையை ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் வடபகுதி மக்கள் வலிந்து ஒரு முழுமையான தொடர்பை பேணுவது சாத்தியம் இல்லை. அது முறையாகவும் இருக்காது.

நீர்கொழும்பில் சிலாபத்தில் வாழ்ந்த தமிழர்கள் தமக்கு சொந்த நிலம், வேலைவாய்ப்பு என்பதை முதன்மையாக கருதினர். மேலும் தலைநகரை அண்மித்த பிரதேசங்களில் வாழ்ந்ததால் அவர்களுக்கு வடபகுதி தமிழர்களின் தொடர்புகள் அவசியமாக இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் வடபகுதி மக்கள் வலிந்து ஒரு முழுமையான தொடர்பை பேணுவது சாத்தியம் இல்லை. அது முறையாகவும் இருக்காது.

எனவே இந்த விடயத்தில் குறித்த பிரதேச மக்களே குறுகியகால நன்மைகளை புறக்கணித்து தமது நீண்ட கால நன்மைகளை கருதி பரந்துபட்ட தொடர்புகளைப்  பேண முன்வந்திருக்க வேண்டும். மாறாக "வலுவான மக்கள்" அப்பகுதி மக்களின் விருப்பத்தையும் மீறி வலிந்து தொடர்புகளை பேண முயன்றிருந்தால் அது ஆக்கிரமிப்பாக விளங்கப்பட்டிருக்கும்.

இது போன்ற சில யதார்த்தங்கள் / வரலாறுகள் கசப்பானவை தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.