Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள்': நிமால் சிறீபால டீ சில்வா

Featured Replies

'ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள்': நிமால் சிறீபால டீ சில்வா

"ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர் நாய் தடுப்பூசி போட வேண்டும்" என சிறீலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறீபால டீ சில்வா தெரிவித்த கருத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம், சிறிலங்கா ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன தமது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்புச் சலுகைகளை பெறுவதற்கு ஏதுவாக அமைச்சரினால் ஊடகத்துறையினருக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கருத்தும் கண்டனத்துக்குரியது.

சுகாதார சேவைகள் பிரிவில் ஏற்பட்ட சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியதனால் தான் எம்மை அவர் விசர் நாய் என அழைத்துள்ளார். ஊடகத்துறையினரும் சாதாரண குடிமக்களே எனவே அவர்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகள் தேவையில்லை.

இந்த சிறப்பு சலுகையும் ஒரு இலஞ்சமே, எங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதனை விட ஊடகத்துறையின் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பதுடன், அனைத்துலகத்தின் தரத்திற்கு ஊடகத்துறையினர் மதிக்கப்பட வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/

ஒரு சொறி பிடிச்ச சேத்து பண்ணி இதெல்லாம் பேசக்கூடாது........................ சொறி நாய் :angry::angry::angry::angry::angry:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் குரைக்கக்க மட்டும் வாலாட்டிலால் போதும் என்கின்றாரா???

ஏனுங்கண்ணா பன்னி , சொறி நாய் இதெல்லாம் தெரு நாய் வண்டி வந்து கொண்று போறதில்லையா????

ஏனுங்கண்ணா பன்னி , சொறி நாய் இதெல்லாம் தெரு நாய் வண்டி வந்து கொண்று போறதில்லையா????

நம்மட நாட்டில வெள்ளை வான்தான் இருக்குதுங்கோ.

உது தெரு நாய் வண்டி காரனையும் விட்டுவைக்கலை!!!

  • தொடங்கியவர்

ஊடகவியலாளர்களை விமர்சித்துள்ள அமைச்சர் நிமல் சிறிபாலவுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

ஊடகவியலாள்ர்களை விசர் நாய்கள் போல் நடந்து கொள்கின்றனர் என அமைச்சர் நிமல் சிறிப்பாலடி சில்வா தெரிவித்த கருத்துகளை பல ஊடக வியலாளர்கள் உட்பட சுதந்திர ஊடக செயலகம் ஏனைய ஊடக இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் Mad Dogs and Minister என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள்: நிமால் சிறீபால டீ சில்வா

"ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர் நாய் தடுப்பூசி போட வேண்டும்" என சிறீலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறீபால டீ சில்வா தெரிவித்த கருத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம், சிறிலங்கா ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன தமது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்புச் சலுகைகளை பெறுவதற்கு ஏதுவாக அமைச்சரினால் ஊடகத்துறையினருக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கருத்தும் கண்டனத்துக்குரியது.

சுகாதார சேவைகள் பிரிவில் ஏற்பட்ட சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியதனால் தான் எம்மை அவர் விசர் நாய் என அழைத்துள்ளார். ஊடகத்துறையினரும் சாதாரண குடிமக்களே எனவே அவர்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகள் தேவையில்லை.

இந்த சிறப்பு சலுகையும் ஒரு இலஞ்சமே, எங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதனை விட ஊடகத்துறையின் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பதுடன், அனைத்துலகத்தின் தரத்திற்கு ஊடகத்துறையினர் மதிக்கப்பட வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/

ஊடகங்களை ஒடுக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துகிறது சிறிலங்கா அரசு: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

ஊடகங்களை ஒடுக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய ஆய்வு மையத்தின் இயக்குநர் சாம் ஜாரிப் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள முன்னணி வார இதழான 'மெளபிம' மற்றும் ஆங்கில வார இதழான ஸ்டாண்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் ஆகியவற்றை வெளியிடுவதை நிறுத்துவதாக கடந்த மார்ச் 29 ஆம் நாள் ஸ்டாண்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு 16 நாட்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அந்நிறுவனத்துக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி அதன் சொத்துகளை சிறிலங்கா அரசாங்கம் முடக்கியது.

சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அந்நிறுவனத்தின் பேச்சாளரும் நிதி இயக்குநருமான துஸ்யந்த பஸ்நாயக்கவை பெப்ரவரி 27 ஆம் நாள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது கைது செய்யப்பட்ட நபரை எதுவித விசாரணையுமின்றி 12 மாதங்கள் தடுத்து வைக்கும் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளது.

ஊடகங்களை ஒடுக்குவதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முறைகேடாகப் பயன்படுத்துகிறது.

இலங்கையில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்குத் தமிழ் ஊடகங்கள் அடிக்கடி இலக்காகி வரும் நிலையில் 30 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக ஒரு சிங்கள ஊடகம் மூடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை 'மெளபிம' ஊடகம் அம்பலப்படுத்தியது. அதேபோல் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்தின் பங்கு குறித்தும் அந்த ஊடகம் கேள்வி எழுப்பியிருந்தது.

ஸ்டான்டர்ட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான டிரான் அல்லெஸ், மகிந்தவினால் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியராச்சி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கத்தை விமர்சித்தமையால் கடந்த பெப்ரவரியில் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

'மெளபிம' வார இதழின் மூலமாக தனக்கு எதிராக இரு அமைச்சர்களும் சதித் திட்டம் தீட்டியதாக மகிந்த ராஜபக்ச குற்றம் பெப்ருவரி 11 ஆம் நாள் குற்றம் சாட்டியிருந்தார். பெப்ரவரி 13 ஆம் நாள் அந்நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன.

கடந்த நவம்பர் 22 ஆம் நாள் மெளபிமவின் செய்தியாளர் முனுசாமி பரமேஸ்வரியை, விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர் என்றும் மனித வெடிகுண்டு என்றும் கூறி சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். ஆனால் கடந்த மார்ச் 22 ஆம் நாள் முனுசாமி பரமேஸ்வரியை தடுத்து வைப்பதற்கு எதுவித காரணமும் இல்லை என்று சிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. அரசாங்கத்தை விமர்சிப்போரை துரோகிகளாகவும் அரசாங்கத்தின் எதிரிகளாகவும் சிறிலங்கா சித்தரிக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எக்ஸ்குளூசிவ்

-------------------

மகிந்த பாப்பரசரை பார்க்க உடனடியாக வாற கிழமை போறார். ஈஸ்டரின் போது பாப்பரசர் வெளியிட்ட பேச்சுவார்த்தை கோரிக்கையின் பின் அவரின் பிரத்தேக அழைப்பையேற்று தனது வழமையான பரிவாரங்களான பொல்லகொல்ல, ஜெயராஜ் மற்றும் அனைவரையும் கட்டியணைத்தபடி செல்கிறார்.

மூலம்: http://www.dailymirror.lk/2007/04/13/front/01.asp

இதை விரும்பினால் செய்திக்குழு புதிய திரியில் ஆரம்பிக்கலாம்.

நன்றி

  • தொடங்கியவர்

dogyministerks2.jpg

நாய்த் தோல் போர்த்த நிமல் சிறிபால டீ சில்வா.

நாய்த் தோல் போர்த்த நிமல் சிறிபால டீ சில்வா.

இல்லை இல்லை மனித தோல் போர்த்திய நாய் நிமல் ஸ்றீபால டிஸில்வா.என்பதே சரி.............. எசமான் மகிந்தனுக்கு விசுவாசமாக குரைக்கிறது

மாப்பு உண்மையிலேயே உம்மிடம் நல்ல கிராபிக்ஸ் கலை உள்ளது பாராட்டுக்கள்

Edited by வேலவன்

ஒரு நாய் இன்னொரு நாய பற்றி பேசகுடாது..

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பாவம் என்ன செய்வார்!!

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். ஹி, ஹி :P :P

  • கருத்துக்கள உறவுகள்

நிமல்சிறிபால டீ சில்வாவின் கூற்றுக்கு சுகந்திரஊடகஇயக்கம் கண்டனம்.

- பண்டார வன்னியன் Sunday, 15 April 2007 10:02

ஊடகவியலாளர்கள் விசர்நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர்நாய் தடுப்பூசி போடவேண்டும் என சிறிலங்காவின் மூத்த அமைச்சரான நிமல்சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ள கருத்து சுதந்திர ஊடகஇயக்கம், சிறிலங்கா ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன தமது கடும்கண்டன அறிக்கையில் வெளியிட்டுள்ளன.

அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்புச் சலுகைகளைப் பெறுவதற்கு ஏதுவாக அமைச்சரினால் ஊடகத்துறையினருக்கு சிறப்பு அடையாளஅட்டைகள் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்ட கருத்தும் கண்டனத்துக்குரியது. சுகாதாரசேவைகள் பிரிவில் ஏற்பட்ட சிலகுறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதனால் தான் எம்மை அவர் விசர்நாய்கள் என அழைத்துள்ளார்.

ஊடகத்துறையினரும் சாதாரண குடிமக்களே எனவே அவர்களுக்கு அரசாங்கத்தின் சிறப்புச்சலுகைகள் தேவையில்லை. இந்தச்சிறப்புச் சலுகைகள் அளிப்பதனைவிட ஊடகத்துறையின் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பதுடன், அனைத்துலகத்தின் தரத்திற்கு ஊடகத்துறையினர் மதிக்கப்படவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் - சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.