Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருகோணமலையில் பழந்தமிழர் மலை ஒன்றுக்கு வந்துள்ள ஆபத்து!

Featured Replies

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராம மக்கள் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வாருவதோடு தமது பகுதியில் உள்ள கந்தசாமி மலையையும் அங்குள்ள முருகன் ஆலயத்தையும் காப்பாற்றி தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராமத்தில் காணப்படும் தென்னன் என்ற அரசன் காலத்தில் இருந்த கந்தசாமி மலை மற்றும் அதன்மேல் உள்ள முருகன் ஆலயம் என்பன தாம் 1984 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மீண்டும் தாம் மீள்குடியேற்றம் வந்து குறித்த பகுதியில் முருகன் சிலை மற்றும் வேல் என்பவற்றை வைத்து வழிபாடுகள் மேற்கொண்டபோது அவை அனைத்தும் பெரும்பான்மை இனத்தவரால் தகர்த்தழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அதனை தொடர்ந்து குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை நிறுவுவதற்காக பௌத்த துறவிகள் வருகைதந்தபோது தாம் தடுத்து நிறுத்தியதாகவும் இதனை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு இரண்டு தரப்பினரையும் குறித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது குறித்த மலையடிவாரத்தில் தொல்பொருள் திணைக்களம் தமது பெயர்ப்பலகையை நிறுவி கட்டிடம் ஒன்றை அமைத்து வருவதாகவும் இந்த சூழலில் தொல்பொருள் திணைக்களம் அபகரித்து தம்மை மலைக்கு செல்லவிடாது தடுத்து பெரும்பான்மையினரின் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு துணைபோய் விடுவார்கள் எனவும் கூறிய மக்கள், இதனை உரியதரப்புக்கள் கருத்தில் கொண்டு தமது மலையையும் முருகன் ஆலயத்தையும் காத்து தம்மை குறித்த மலையில் உள்ள தமது ஆலயத்தை வழிபட ஆவன செய்யுமாறு கோருகின்றனர்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த மக்கள்,

1984 ம் ஆண்டு நாம் வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்து சென்றோம் அதுவரை நாங்கள் இந்த கந்தசாமி மலையில் இருந்த முருகன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்தோம். அதனை தொடர்ந்து யுத்தத்தின் அழிவுகளை சந்தித்த நாம் 2010 ம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றம் வந்து குறித்த பகுதியில் வேல் ஒன்றை வைத்து வழிபட்டோம். அதனை புடுங்கி எறிந்தனர். அதனை தொடர்ந்து ஒரு முருகன் சிலை வைத்தோம் அதனை அடித்து உடைத்து போட்டிருந்தனர். அதனை மீளவும் நிறுவினோம் அதன் பின்னர் அந்த சிலை உடைக்கப்பட்டு சிலையையே காணவில்லை. இவ்வாறு எமது ஆலயம் திட்டமிட்டு பெரும்பான்மை இனத்தாரால் உடைக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து புத்தர் சிலை வைக்கும் முயற்சியில் ஏற்ப்பட்ட குழப்பத்தில் யாரும் மலைக்கு செல்ல கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது இவ்வாறான ஒரு செயலை செய்கிறார்கள். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என வினாசித்தம்பி தம்பிஜயா என்ற மூத்தவர் தெரிவித்தார்.

இந்த விடயமாக குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க உபதலைவரான கந்தையா பரமநாதன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்,

”நான் 1952 ம் ஆண்டு பிறந்து அன்றிலிருந்து இன்று என்னுடைய 76 வயதுவரை இந்த தென்னமரவாடி கிராமத்திலேயே படித்து திருமணம் செய்து வாழ்ந்துவருகிறேன். இதுவரை எமது கிராமத்துக்கு ஒரு பௌத்த மதகுருவோ அல்லது வேறு முஸ்லிம் மதகுருவோ வந்ததில்லை. இது சேர சோழ பாண்டிய கால இற்றைக்கு சுமார் 300 வருடங்களுக்கு மேற்ப்பட்ட முருகன் கோவில். இந்த கோவிலுக்கு வரலாறு உண்டு. இது ஒரு வரலாறு படைத்த மலை 1962 ம் ஆண்டுமுதல் இந்த கோவிலில் நான் வழிபட்டு வந்திருக்கிறேன்.

இந்த இடத்தில் இந்த ஆலயத்தோடு இணைந்த எங்களது காணிகள் எல்லாம் 1803 ம் ஆண்டு பிரிட்டிஸ் காலத்து அரசினால் உறுதிகள் வழங்கப்பட்டு உள்ளது. அந்த ஆவணங்கள் எம்மிடம் உள்ளன. ஆகவே எமது இந்த பூர்விக கிராமம் நாங்கள் 1984 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற பின்னர் இது பெரும்பான்மை இனத்தவரால் சுவீகரிக்கப்பட்டது.

இந்த இடம் மாத்திரமல்ல எமது வயல் நிலங்கள் விவசாய நிலங்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டு இன்று யுத்தம் முடிந்து மீள்குடியேற்றம் வந்தும் எமது நிலங்களை மீட்க முடியாது திண்டாடுகிறோம். இந்நிலையில் எமது இந்த வரலாற்று தொன்மை மிக்க ஆலயத்தையும் அபகரிக்க இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் இவற்றை தடுத்து நிறுத்தவேண்டும்” என அவர் கோரினார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/110734

18 hours ago, போல் said:

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராமத்தில் காணப்படும் தென்னன் என்ற அரசன் காலத்தில் இருந்த கந்தசாமி மலை மற்றும் அதன்மேல் உள்ள முருகன் ஆலயம் என்பன தாம் 1984 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பந்தன் ஊர் திருகோணமலை இல்லையோ?

மக்களை படுகொலை செய்யும் ஜனநாயகத்துக்கு பாடுபடும் அந்த மனுஷனை நம்பி வேலையில்லன்னு புரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.