Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

90 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழுவை -விரட்டியடித்த கொக்குவில் இளைஞர்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

90 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழுவை -விரட்டியடித்த கொக்குவில் இளைஞர்கள்!!

பதிவேற்றிய காலம்: Jan 1, 2019

வன்முறைகளில் ஈடுபடும் நோக்குடன் மோட்டார் சைக்கிள்களில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதிக்கு வருகை தந்த இளைஞர்கள் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக நடந்துள்ளது.

சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் 90 பேர் கொண்ட குழு, வாள்களுடன் வருகை தந்ததை அவதானித்த சிலர் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டனர்.

சுதாகரித்துக் கொண்ட குழுவினர் அங்கும் இங்கும் சிறதி ஓடினர். அவர்கள் 4 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். 7 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.

குறித்த நபர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

49576580_334059597195112_72046171014058449485899_298842717437066_43458885442254949671197_271827180172718_578708535893190

 

 

https://newuthayan.com/story/14/90-பேர்-கொண்ட-வாள்வெட்டுக்-குழுவை-விரட்டியடித்த-கொக்குவில்-இளைஞர்கள்.html

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குவிலில் மோட்டார்சைக்கிள் படையணியாக வந்த 90 ரௌடிகள்: சுற்றிவளைத்த கிராம மக்கள்; நால்வர் சிக்கினர்!

By admin -
images-1-660x768.jpeg

யாழ்.கொக்குவில் பகுதியில் 90 பேரைக் கொண்ட ரௌடிக் கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். இதன்போது நான்கு ரௌடிகள் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். ஏனையோர் தலைதெறிக்க தப்பியோடி விட்டனர்.

கொக்குவில் காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த கும்பலை அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் மடக்கி பிடித்தனர்.

சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் 90 பேர் கொண்ட கும்பல், வாள்களுடன் வந்தது.

அதன் போது அங்கு கூடிய அந்தப் பகுதி பொதுமக்கள் தாக்குதல் மேற்கொள்ள வந்த கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது கும்பல் தப்பி செல்ல முயன்றது. தமது 7 மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு சிலர் தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடிய நான்கு ரௌடிகளை ஊரவர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.

தம்மால் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த நால்வரையும் , மீட்கப்பட்ட 07 மோட்டார் சைக்கிள்களையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் அந்தப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.

நால்வரையும் கைது செய்ய பொலிஸார் ,பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், தப்பி சென்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

kok-300x276.jpg kok1-300x276.jpg kok2-300x276.jpg kok3-300x300.png images-2-660x768-258x300.jpeghttp://www.pagetamil.com/30531/

இவ்வளவு பேர் எங்கிருந்த்து வந்தனர் .... எங்களுடைய சமூகம் எங்கே போகிறது .....

கேவலம

 

 இவர்களை பொலீசிடம் ஒப்படைக்காது மக்களே கட்டி வைத்து விசாரிக்க வேண்டும், பகிரங்கமாக விசாரிக்க வேண்டும், இவர்களை இயக்குபவர்கள் யார் இவர்கள் ஏன் இப்படியாயன ஈன செயல்களில் ஈடுபடுகீனம் என ஆதி முதல் அந்தம் வரை அறியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Dash said:

இவ்வளவு பேர் எங்கிருந்த்து வந்தனர் .... எங்களுடைய சமூகம் எங்கே போகிறது .....

கேவலம

 

 இவர்களை பொலீசிடம் ஒப்படைக்காது மக்களே கட்டி வைத்து விசாரிக்க வேண்டும், பகிரங்கமாக விசாரிக்க வேண்டும், இவர்களை இயக்குபவர்கள் யார் இவர்கள் ஏன் இப்படியாயன ஈன செயல்களில் ஈடுபடுகீனம் என ஆதி முதல் அந்தம் வரை அறியலாம்.

ஒதுங்கி போகாமல் எத்தனை பேர் வந்தாலும் துணிந்து பொதுமக்கள் இந்த சம்பவத்தில் நடந்து கொண்டதே பெரிய காரியம் .

24 minutes ago, பெருமாள் said:

ஒதுங்கி போகாமல் எத்தனை பேர் வந்தாலும் துணிந்து பொதுமக்கள் இந்த சம்பவத்தில் நடந்து கொண்டதே பெரிய காரியம் .

ஆனால் பொலீஸ்காரனிடம் ஒப்படைத்து விட்டார்களே அவனும் இவங்களை ரெண்டு சாத்து சாத்தி விட்டு அடுத்தமுறை பிடிபடாமல் செய்யுங்கடா , ஏண்டா எக்களை மாட்டி விடுறிய்லெ என்று அட்வைஸ் பண்ணுவானே

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Dash said:

ஆனால் பொலீஸ்காரனிடம் ஒப்படைத்து விட்டார்களே அவனும் இவங்களை ரெண்டு சாத்து சாத்தி விட்டு அடுத்தமுறை பிடிபடாமல் செய்யுங்கடா , ஏண்டா எக்களை மாட்டி விடுறிய்லெ என்று அட்வைஸ் பண்ணுவானே

நீங்கள் சொல்வது சரி இப்ப கதையை மாத்தி போட்டு விட்டாங்கள் கீழே செய்தி இணைப்பு .

கொக்குவிலில் மடக்கிப்பிடிக்கப்பட்ட ரௌடிக்கும்பல் மாபிள் விளையாட போனதாம்!

By admin -
kok3.png

யாழ்ப்பாணம், கொக்குவில் காந்திஜி சனச சமூகப் பகுதியில் நேற்று பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த ஐந்து பேரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார்.

“சந்தேநபர்கள் நால்வருக்கு எந்தத் தொடர்புமில்லை. இருவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பவர்கள். அவர்கள் மாபிள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த வேளை சிறப்பு அதிரடிப்படையினர் வந்து அவர்களைக் கைது செய்தனர்.

மற்றொருவர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் வசிப்பவர். அவர் வெற்றிலை வாங்குவதற்காக கடைக்குச் சென்றுவிட்டு வந்தார். அடாவடியில் ஈடுபட வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். அப்பாவிகளையே பொலிஸார் கைது செய்துள்ளனர். எனவே சந்தேகநபர்களுக்கு மன்று பிணை வழங்கவேண்டும்” என்று சந்தேகநபர்கள் நால்வர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“புத்தாண்டு தினத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். பொது மக்கள் ஒன்றுதிரண்டதால்தான் சந்தேகநபர்களும் அவர்களுடன் வந்தவர்களும் அடாவடியில் ஈடுபடவில்லை. இரண்டு பேர் பொது மக்களால் பிடிக்கப்பட்டவர்கள். மேலும் இருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர்” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் , பிணை விண்ணப்பத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

வழக்கை ஆராய்ந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபர்கள் ஐவரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

http://www.pagetamil.com/30664/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடபகுதி அசிங்கம் அட்டகாசம் என ஒரு தனித்திரி திறந்தால் நிறைய எழுதலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.