Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்:கவனத்திற்கொள்ளுமாறு பெற்றோர்கள் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்:கவனத்திற்கொள்ளுமாறு பெற்றோர்கள் தெரிவிப்பு

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்ட வாசகங்களை காணமுடிந்துள்ளது.vavuniya.jpg இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது. 

எனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளனர்.

இன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வார்த்தைகள் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது. 

இதேவேளை பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரியின் பாடசாலை மதிலில் வர்ணப்பூச்சினாலும் வெண்கட்டிகளாலும் காதலர் தினவாழ்த்துகள் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. இவ்வாறு பாடசாலையின் மதிலில் குறிப்பாக அதேபாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களினால் பாடசாலையின் மதிலினை கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதையிட்டு அவ்வீதியால் செல்லும் பெற்றோர்கள், பழைய மாணவர்களுக்கு பாடசாலை மீதுள்ள நம்பிக்கைக்கு அவ நம்பிக்கையை மேலும் ஏற்படுத்தியுள்ளது.

ஒழுக்கத்துடன் கல்வியைக்கற்பதற்காக பாடசாலை செல்லும் மாணவர்களை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது பாடசாலை சமூகத்தினால் ஒழுக்கமான மாணவ சமூதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்,எதிர்காலத்தில் இவ்வாறான சமூகச்சீரழிவுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டிய பொறுப்பு கல்வியலாளர்களிடம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://www.virakesari.lk/article/49955

 

காதலர் தினத்துக்கு இளையோர் தமக்குள் வாழ்த்துக்களை தெரிவிப்பதும் விளையாட்டாக மதில்களில் எழுதுவதும் உலகில் சாதாரண விடயம். நாமும் இந்த உலகில் வாழும் மனிதர்களில் ஒரு பகுதி தான் என்பதை மறந்துவிடக்கூடாது.  இதைப்போய்  கீழ்த்தரமனது, கலாச்சார சீரழிவு  என்று அதை செய்தியாக்கி விடுப்பு பேசும் அளவுக்கு  உலக அறிவற்ற கிணற்று தவளைகளாக எமது பத்திரிகைகள் கூட இருப்பது அவமானம். கல்விகற்கும் வயதில் காதலிப்பது சாதாரணமானது.

20 minutes ago, tulpen said:

காதலர் தினத்துக்கு இளையோர் தமக்குள் வாழ்த்துக்களை தெரிவிப்பதும் விளையாட்டாக மதில்களில் எழுதுவதும் உலகில் சாதாரண விடயம். நாமும் இந்த உலகில் வாழும் மனிதர்களில் ஒரு பகுதி தான் என்பதை மறந்துவிடக்கூடாது.  இதைப்போய்  கீழ்த்தரமனது, கலாச்சார சீரழிவு  என்று அதை செய்தியாக்கி விடுப்பு பேசும் அளவுக்கு  உலக அறிவற்ற கிணற்று தவளைகளாக எமது பத்திரிகைகள் கூட இருப்பது அவமானம். கல்விகற்கும் வயதில் காதலிப்பது சாதாரணமானது.

காதல் என்பது சாதியை, மதத்தை, பிரதேசவாதத்தை மீறச் செய்யக் கூடியது அல்லவா? எப்படி அனுமதிக்க முடியும். இவற்றை மீறச் செய்யும் ஒன்று கீழ்த்தரமானதாகத்தானே நாகரீக வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்லும் ஒரு சமூகத்துக்கு தோன்றும் ?

59 minutes ago, நிழலி said:

காதல் என்பது சாதியை, மதத்தை, பிரதேசவாதத்தை மீறச் செய்யக் கூடியது அல்லவா? எப்படி அனுமதிக்க முடியும். 

மீறச் செய்வது நல்லதுதானே!

சாதி, மதம் கடந்ததுதானே காதல் என்பது.

காதல் என்பது, அதைவிடப் புனிதமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

காதலர் தினத்துக்கு இளையோர் தமக்குள் வாழ்த்துக்களை தெரிவிப்பதும் விளையாட்டாக மதில்களில் எழுதுவதும் உலகில் சாதாரண விடயம். நாமும் இந்த உலகில் வாழும் மனிதர்களில் ஒரு பகுதி தான் என்பதை மறந்துவிடக்கூடாது.  இதைப்போய்  கீழ்த்தரமனது, கலாச்சார சீரழிவு  என்று அதை செய்தியாக்கி விடுப்பு பேசும் அளவுக்கு  உலக அறிவற்ற கிணற்று தவளைகளாக எமது பத்திரிகைகள் கூட இருப்பது அவமானம். கல்விகற்கும் வயதில் காதலிப்பது சாதாரணமானது.

4 hours ago, நிழலி said:

காதல் என்பது சாதியை, மதத்தை, பிரதேசவாதத்தை மீறச் செய்யக் கூடியது அல்லவா? எப்படி அனுமதிக்க முடியும். இவற்றை மீறச் செய்யும் ஒன்று கீழ்த்தரமானதாகத்தானே நாகரீக வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்லும் ஒரு சமூகத்துக்கு தோன்றும் ?

3 hours ago, thulasie said:

மீறச் செய்வது நல்லதுதானே!

சாதி, மதம் கடந்ததுதானே காதல் என்பது.

காதல் என்பது, அதைவிடப் புனிதமானது.

உங்களது வேதங்களும் மந்திரங்களும் எமது ஊர்களுக்கு வர யுகங்கள் செல்லும்.

அதுவரை.......

CM_zps0ffckhvd.jpg

 

6 hours ago, குமாரசாமி said:

உங்களது வேதங்களும் மந்திரங்களும் எமது ஊர்களுக்கு வர யுகங்கள் செல்லும்.

அதுவரை.......

CM_zps0ffckhvd.jpg

 

இப்படி பப்புளிகிலை கெத்தா  சொல்லிற்று ஒளிச்சு  ஒளிச்சுப் போய் ஹக் பண்ணுற போலி கலாச்சாரம் இருக்கிற நம்ம நாடுகளில் அப்படித்தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, tulpen said:

இப்படி பப்புளிகிலை கெத்தா  சொல்லிற்று ஒளிச்சு  ஒளிச்சுப் போய் ஹக் பண்ணுற போலி கலாச்சாரம் இருக்கிற நம்ம நாடுகளில் அப்படித்தான். 

உலகத்திலையே நீங்கள் சொல்லுறதுதான் நடக்குது.
இது எங்கடை நாட்டிலை மட்டும் இல்லை. 

1 hour ago, குமாரசாமி said:

உலகத்திலையே நீங்கள் சொல்லுறதுதான் நடக்குது.
இது எங்கடை நாட்டிலை மட்டும் இல்லை. 

அப்படிதானே சொல்ல வேணும். என்ர பிள்ளை அச்சாப்பிள்ளை. ஊர்பிள்ளைகள் எல்லாம் தடிமாடுகள் என்று சொல்லுற நாட்டில இருந்து தானே நாங்க வந்தோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.