Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தநிறுத்த உடன்படிக்கையை ரத்தாக்க மேன்முறையீட்டு மனு - ஜே.வி.பி., ஹெல உறுமய, சிங்கள மகா சபா உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தநிறுத்த உடன்படிக்கையை ரத்தாக்க மேன்முறையீட்டு மனு - ஜே.வி.பி., ஹெல உறுமய, சிங்கள மகா சபா உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல்

[18 - April - 2007]

-த.தர்மேந்திரா-

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக தனித்தனியாக 3 மேன்முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க, சிங்கள மகா சபையின் தலைவர் டாக்டர் பியசேன திசநாயக்க ஆகியோர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களுக்கு சட்டத் தகுதிப்பாடு கிடையாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்தே உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர்.

இவ்விசேட மனுக்களில் மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டத்தையும் நீதியையும் தவறாக கையாண்டு விட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் இம்மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

"ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானதாகும். மனுதாரர்கள் ஆரம்பத்தில் இவ்வொப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையுத்தரவு எழுத்தாணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ததுடன் இவ்வொப்பந்தத்தை முழுமையாகவோ பகுதியளவிலோ நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தனர்.

மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நான்கு வருடங்களின் பின் மேன்முறையீட்டு நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இம்மனுக்களுக்கு சட்ட தகுதிப்பாடோ சட்ட அடிப்படையோ கிடையாது என்று தீர்ப்புக் கூறி மனுக்களின் பிரதிவாதிகளுக்கு மன்றில் ஆஜராகக் கோரும் அறிவித்தலை விடுக்க மறுத்து விட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அத்தீர்ப்பில் இவ்வுடன்படிக்கை பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன் வந்துள்ள தரப்பினரிடையே பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வொப்பந்தத்தை கேள்விக்குட்படுத்தவோ மீளாய்வு செய்யவோ நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளமையும் தவறு ஆகும்.

அது மட்டுமன்றி இவ்வொப்பந்தத்தை அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானமாக கண்டு அத்தகைய தீர்மானங்கள் சட்ட விரோதத் தன்மை மற்றும் சட்டத்துக்கு முரணான தன்மை இல்லாத இடத்து நீதிமன்றங்கள் அத்தீர்மானங்களை புலனாய்வு செய்யவோ விசாரிக்கவோ செல்லாது எனத் தீர்ப்புக் கூறியுள்ளமையும் தவறானதாகும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்கிற பொதுவான சொல்லுக்கு நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான கொள்கைத் தீர்மானம் எனவும் ரணில்- பிரபா யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கான பெறுமதி வாய்ந்த தீர்மானம் எனவும் நீதிமன்றம் வரைவிலக்கணம் வழங்கியுள்ளமை பரந்துபட்ட அர்த்தத்தில் சரியானதல்ல. அதேநேரம் இவ்வொப்பந்தத்தை நீதிமன்றம் ஒரு அரசியல் விடயம் சம்பந்தப்பட்ட கொள்கை ஆவணம் என்று குறிப்பிட்டுள்ளமையும் தவறான வியாக்கியானத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

ஆகவே, பிரதிவாதிகளுக்கு மன்றில் ஆஜராகக் கோரும் அறிவித்தலை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் தவறானதென ரத்துச் செய்வதுடன் இம் மனுக்களின் பிரதி வாதிகளுக்கு மன்றில் ஆஜராகுமாறு கோரும் அறிவித்தலை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் உரிய நிவாரணங்களையும் பெற்றுத்தர வேண்டும்."

இவ்வாறு மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.பொதுச் செயலாளரின் சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகல ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஏனைய இருவரின் சார்பில் சட்டத்தரணி பண்டார தல குணே ஏனைய இரு மனுக்களையும் தாக்கல் செய்தார்.

தினக்குரல்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிக்க

மறுத்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு

ஜே.வி.பி. சார்பில் உயர்நீதிமன்றில் நேற்றுத் தாக்கல்

அரசுக்கும் புலிகளுக்கும் இடை யில் யுத்தநிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு உடன்படிக்கையை சட்டவிரோதமானது என அறிவிக் கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தற்போது மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கின்றது.

ஜே. வி. பியின் செயலாளர் ரில் வின் சில்வா சார்பில் மேற்படி மேன் முறையீட்டு மனு நேற்றுக் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டது.

முன்னாள் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபா கரன் மற்றும் தற்போதைய, முன்னைய அமைச்சரவைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் என 64 பேரின் பெயர்கள் இந்த மேன்முறையீட்டு மனுவில் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

மேற்படி யுத்த நிறுத்த உடன் படிக்கையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரும் மனுக்கள் ஜே. வி. பி. , ஜாதிக ஹெல உறு மய போன்ற கட்சிகளினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்களை விசாரித்த மேன்முறை யீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, அந்த மனுக்களை நிராகரித்து கடந்த மாத முற்பகுதி யில் தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்த மனுக்களின் மீது எதிர்மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங் களை ஏற்றுக்கொண்ட மேன்முறை யீட்டு நீதிமன்றம், எதிர்மனுதாரர் களுக்கு நோட்டீஸ் (அழைப்பாணை) விடுக்க மறுத்து, அந்த மனுக்களை நிராகரித்துத் தீர்ப்பளித்திருந்தது.

அந்தத் தீர்ப்பை ஆட்சேபித்தே தற்போது மேன்முறையீடு செய் யப்பட்டிருக்கின்றது.

சட்ட ஆய்வுக்குரிய இந்த விவ காரத்தை சம்பந்தப்பட்ட மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் வெறும் இனப்பிரச்சினையாக அரசியல் விடயமாக கருத்தில் எடுத்திருக்கிறார். அதன் காரணமாக சட்ட நுணுக்கங்களையோ அல் லது சட்ட அடிப்படைகளையோ கவனத்தில் எடுக்காமல் அவர் ஒதுக்கியிருக்கின்றார் என நேற்றுத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க மறுத்த அவ ரது தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, நோட்டீஸ் பிறப்பிக்க மேன்முறை யீட்டு நீதிமன்றுக்குப் பணிப்புரை விடுத்து, தொடர்ந்து வழக்கை விசா ரிக்க உத்தரவிடுமாறும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. (சி)

உதயன்.

இவனுகள் எத்தனை தரம் என்று சிறீ லங்கா நீதிமன்றத்தில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கேட்டு மனுத்தாக்கல் செய்வானுகள்?

யுத்த நிறுத ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்துவிட்டு ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க, சிங்கள மகா சபையின் தலைவர் டாக்டர் பியசேன திசநாயக்க, இன்னும் மிச்சம், சொச்சம் ஆட்களையும் முகமாலை முன்னிலை காவலரங்கில் கொண்டுபோய் இறக்கிவிடுங்கடாப்பா! இவங்களது ரோதனை தாங்கமுடியவில்லை!

இவனுகள் எத்தனை தரம் என்று சிறீ லங்கா நீதிமன்றத்தில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கேட்டு மனுத்தாக்கல் செய்வானுகள்?

யுத்த நிறுத ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்துவிட்டு ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க, சிங்கள மகா சபையின் தலைவர் டாக்டர் பியசேன திசநாயக்க, இன்னும் மிச்சம், சொச்சம் ஆட்களையும் முகமாலை முன்னிலை காவலரங்கில் கொண்டுபோய் இறக்கிவிடுங்கடாப்பா! இவங்களது ரோதனை தாங்கமுடியவில்லை!

இவங்களை எல்லாம் ஒண்டா விடக்கூடாது அப்புறம் சேந்து அறிக்கை விடுவாங்கள் தனித்தனிய விடனும்

முகமாலை, ஓமந்தை, நாகர் கோவில் எண்டு அதுதான் சரி :P

சுனாமி புனரமைப்பு ஒப்பந்தத்தை எந்த அடிப்படையில் மேல்நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியதோ, அதே அடிப்படையில் யுத்தநிறுத்த ஒப்பந்தமும் செல்லுபடியற்றது என்று மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.

சுனாமி பொதுக் கட்டமைப்பு ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தால் யாரும் ஒரு வார்த்தை பேசமாட்டார்கள் என்ற தைரியத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டது. நடந்ததும் அதுவே.

இபோதும் அதேபோல் தீர்ப்பு வழங்கிப் பார்க்கட்டும்.

வெறும் எழுத்தில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை எதோ வழியில் அவங்களே நிறுத்தட்டும், அதற்கு பிறகு ந் நடக்கப்போகிறதை இருந்து பாருங்கள்...

ஆனால் நீதிமன்றத்திற்கு மேன் முறையீடு செய்வதை உலக பிரச்சாரத்திற்கு கொண்டு சொல்லுங்கள்

மிகுதி உலகமும் புலிகளும் பார்ப்பார்கள்................

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி புனரமைப்பு ஒப்பந்தத்தை மேல்நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது--தமிழனுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்பதற்காக

ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது--தமிழனின் பலத்தின்பயத்தில்

எப்ப இந்த பயம் தெளிகிறதோ

அன்று இவ்வொப்பந்தம் செல்லுபடியற்றதாக்கப்படும்

சிறிலங்காவில் நீதித்துறையென்று ஒன்று இல்லை

எல்லா இடத்திலும் இனவாதம் வேர் ஊன்றியுள்ளது;

யுத்த நிறுத்த ஒப்பந்தம் மிக அதிகமாக சிங்களத்தரப்பிற்கே நன்மையைக் கொடுத்துள்ளதை நன்கு அறிந்திருந்தும் அதைப் புரிய வேண்டிய தன்மையைக் கொண்டிராத வெறும் ஜடங்களாக இருக்கின்றார்கள். தனக்குத் தீமைகள் நேர்ந்தாலும் தமிழர் தரப்பிற்கு எந்தவொரு நன்மையும் ஏற்படக் கூடாதென எண்ணுகின்றார்கள். வைக்கற் போர் நாய்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கற் போர் நாய்கள்.

இது வேறுவகை

ஏனெனில் வைக்கற் போர் நாய்கள்.

தானும் தின்னாது மற்றவனையும் தின்னவிடாது

ஆனால் இது நல்லாத்தின்னும்

ஆனால் தமிழன் தின்னக்கூடாது.

அப்படியென்றால் யார் இவர்கள். குள்ள நரிக் கூட்டங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.