Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

157 பேருடன் சென்ற விமானம் விபத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

157 பேருடன் சென்ற விமானம் விபத்து!

கென்யா நோக்கி புற்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து நைரோபி நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எத்தியோப்பிய நேரப்படி இன்று காலை 8.44 அளவில் புறப்பட்ட விமானம் தலைநகரில் இருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் பயணித்த 33 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 149 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன,

பிரதமர் அலுவலகத்தின் இந்த டுவிட்டர் செய்தியினால் விமானத்தில் பயணித்த பயணிகளில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

விமானம் விபத்துக்குள்ளாமையை எத்தியோப்பிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

http://athavannews.com/149-பயணிகளுடன்-சென்ற-விமானம/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

எத்தியோப்பிய விமான சேவையில் இதுபோல் பல தடவைகள் நடந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியாவில் விமான விபத்து : தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பயணி

 

201903120009227774_passenger-narrowly-es

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில், கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்பவர் பயணம் செய்ய இருந்தார். ஆனால் அவர் விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். இதனால் அவர் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை. விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. விமானம் கிளம்பிய 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.  

https://www.dailythanthi.com/News/World/2019/03/12005323/Flight-crash-in-Ethiopia-The-survivor-of-the-delayed.vpf

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் தலைகீழாக விழுந்ததை நிறுத்த இயலாத விமானிகள்

எத்தியோப்பிய விமான விபத்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த மாதம் தரையில் மோதி விபத்திற்குள்ளான எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம், தரையில் மோதுவதற்குள் பல முறை கர்ணம் அடித்து விழுந்துள்ளது என்று முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

மோதுவதற்கு முன்னர், போயிங் நிறுவனம் வழங்கிய செயல்முறைகளை விமானிகள் மீண்டும் மீண்டும் பின்பற்றியுள்ளதாக இந்த பேரிடரின் முதலாவது அதிகாரபூர்வ அறிக்கை குறிப்பிடுகிறது.

விமானிகள் முயற்சிகள் எடுத்தபோதும், விமானத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் டாக்மாவிச் மோகஸ் தெரிவித்துள்ளார்.

இடி302 விமானம் அடிஸ் அபாபாவில் இருந்து மேலேழுந்து பறந்த சற்று நேரத்தில் கீழே விழுந்து மோதியதில் அதில் பயணம் செய்த 157 பேரும் இறந்தனர்.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஐந்து மாதத்தில் சந்தித்த இரண்டாவது விபத்து இது.

போயிங் 737 Image captionஉலக அளவில் போயிங் 737 மேகஸ் ரக விமானங்கள் இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 'லயன் ஏர்' விமானம் ஜேடி 610 இந்தோனீசியாவுக்கு அருகில் கடலில் விழுந்து, அதில் பயணித்த 189 பேரும் இறந்துயினர்.

அடிஸ் அபாபாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் விமான ஊழியர் குழு நிறைவேற்றியது. ஆனாலும், அவர்களால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று டாக்மாவிச் மோகஸ் தெரிவித்தார்.

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கு பின்னர், 737 மேக்ஸ் ரக விமானங்கள் அனைத்து இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்டன. 300 விமானங்களின் பயணங்கள் இதனால் பாதிக்கப்பட்டன.

விமானம் மோதியதற்கு காரணம் என்ன?

இந்த விபத்திற்கான காணரம் எதையும் முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கவில்லை. இந்த விமானப் பயணத்தின் விவரமான ஆய்வையும் இது வழங்கவில்லை.

எத்தியோப்பிய விமான விபத்துபடத்தின் காப்புரிமைMICHAEL TEWELDE

போயிங் விமான கட்டுப்பாட்டு அமைப்பை மீளாய்வு செய்து பரிந்துரைத்துள்ள இந்த அறிக்கை, 737 மேக்ஸ் ரக விமானங்களை மீண்டும் இயங்க அனுமதிப்பதற்கு முன்னர், விமானத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது,

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் தலைமை செயலதிகாரி டிவேல்டி கெபிரமரியம் வெளியிட்ட அறிக்கையில், உயர் நிலை தொழில்முறை திறனோடு செயல்பட்டுள்ள விமானிகளை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

"இந்த விமானம் தலைகீழாக விழுந்து மோதுவதில் இருந்து மீட்டெடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இலங்கை

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் தலைமை செயலதிகாரி டிவேல்டி கெபிரமரியம் வெளியிட்ட அறிக்கையில், உயர் நிலை தொழில்முறை திறனோடு செயல்பட்டுள்ள விமானிகளை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

"இந்த விமானம் தலைகீழாக விழுந்து மோதுவதில் இருந்து மீட்டெடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/global-47818767

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.