Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி

Featured Replies

கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் மிகப் பலம் பெற்றிருப்பதாக, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் தெரிவித்துள்ளார்.

கடற் புலிகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அண்மையிலுள்ள சீனக் கடற் படையும் பலமடைந்து வருவதாகவும், இதனால் இந்தியா போன்ற அண்மையிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் கூறியிருக்கின்றார்.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி, ஊடகர் மத்தியில் பேசும்போது இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

இந்தியாவில் 4 நாட்கள் தங்கியிருக்கும் அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளார்

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்ன செய்யலாம்?

1. அந்தமான் தீவில் இப்போது உள்ள இந்தியத் தளத்தைத் தூக்கி விட்டு ஒரு அமெரிக்கக் கடற்படைத்தளம் அமைக்கலாம்.

2.திபெத் பக்கமிருந்து அச்சுறுத்தல் வராதிருக்க சிக்கிம் மாநிலத்தில் ஒரு "அமெரிக்கக்குரல்" வானொலி நிலையம் அமைக்கலாம்.

3. மன்னார் கடல் எண்ணைப் படிவுகளை அமெரிக்காவும் பகிர்ந்து கொள்ளலாம்.

எல்லாவற்றையும் விடப் புத்தியானது எது தெரியுமோ?

பேசாமல் அந்தப் பலமான கடற்படையை அங்கீகரித்து ஒப்பந்தம் செய்து கொள்வது. இது அனேகமாக சிறி லங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதையும் நிறுத்தக் கூடும்!

இந்திய அரசுக்கு இன்னும் தெரியாதாம் எமக்கு அதாவது இலங்கைத்தமிழர்களுக்கு தலைவர் அதாவது தேசியத்தலைவர் ஒருவர் இருக்கின்றாரா இல்லையா என்று ? பிபிசியில் இருந்து?

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முழு வீச்சில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும், திபெத்தியர்களுக்கு தலாய் லாமா இருப்பது போல இலங்கை அகதிகளுக்கு ஒரு தலைவர் இல்லாத நிலையுமே, ஒப்பீட்டளவில் இந்திய அரசிடம் இருந்து அவர்களால் அரசியல் உரிமைகளை கோரிப் பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் என்றும் கூறுகிறார் பி இராமன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா அரசாங்கத்திற்கு நவீனரக ஆயுதங்கள்

தமிழக அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முரணாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு நவீனரக ஆயுதங்களை இந்தியா வழங்கிவருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை பாகிஸ்தான் இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. சிறீலங்கா படைகளின் பாவனைக்கென அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களையும் நாற்பது மில்லிமீற்றர் உந்;துகணை செலுத்திகளையும் ரிரிபி ரக ரவைகளையும் மத்திய அரசாங்ம் வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

மேலும் இதுதவிர இந்திய மத்திய அரசாங்கம் சிறீலங்கா அரசிற்கு முப்பது கண்ணிவெடி எதிர்ப்பு வாகனங்கள்இ பத்து குண்டு துளைக்காத வாகனங்கள்இ மூவாயிரம் வரையான ஆயுதங்களுக்கான வெடிபொருட்கள்இ நவீன தொலைதொடர்பு சாதனங்கள் என பலதரப்பட்ட ஆயுதங்களை வழங்கியுள்ளது.

« முன்னைய பக்கம்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

நன்றி பதிவு

வடக்கை கைப்பற்ற முனைந்தால்இ விளைவு பாரதூரமாக இருக்கும் - சு.ப. தமிழ்ச்செல்வன்

சிறீலங்கா இராணுவம் வட பகுதியிலுள்ள முக்கிய தளங்களைக் கைப்பற்ற முனைந்தால்இ அதன் விளைவு பார தூரமாக அமையும் எனஇ தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறீலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தமது முழுமையான பலத்தையும் பிரயோகிக்க நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும்இ அதன் வினைத்திறன் பாரதூரமாக அமையும் எனவும்இ தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார்.

நேற்று அமெரிக்காவின் ஏ.பி என்றழைக்கப்படும் அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறையாகக் கடைப்பிடிக்காத நிலையில்இ இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்ட இராணுவ வெறிகொண்ட அரசுஇ விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிக்க முடியும் என எண்ணுவது பாரிய தவறு என்பதைஇ விரைவில் புரிந்து கொள்ளும் என்றும் தமிழ்ச்செல்வன் கூறினார்.

அனைத்துலக சமூகத்தின் அணுசரணையுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் ஊடாகஇ இனப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை எட்ட முடியும் என்பதில் விடுதலைப் புலிகள் தற்பொழுதும் உறுதியாக இருப்பதாகவும் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

சிறீலங்கா அரசின் கொடுமையான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்ற போதிலும்இ விடுதலைப் புலிகள் தொடர்ந்து பொறுமையைக் கடைப்பிடித்து வருவதாகவும்இ அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் மேலும் கூறியுள்ளார்.

நன்றி பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசுக்கு இன்னும் தெரியாதாம் எமக்கு அதாவது இலங்கைத்தமிழர்களுக்கு தலைவர் அதாவது தேசியத்தலைவர் ஒருவர் இருக்கின்றாரா இல்லையா என்று ? பிபிசியில் இருந்து?

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முழு வீச்சில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும், திபெத்தியர்களுக்கு தலாய் லாமா இருப்பது போல இலங்கை அகதிகளுக்கு ஒரு தலைவர் இல்லாத நிலையுமே, ஒப்பீட்டளவில் இந்திய அரசிடம் இருந்து அவர்களால் அரசியல் உரிமைகளை கோரிப் பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் என்றும் கூறுகிறார் பி இராமன்.

பாவம் பி.ராமன். ஆயுதப் போராட்டங்களையே ஆராய்ந்து பழகியதால் திபெத்தில் என்ன ஆனது என்று அறியாமல் போனார். திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது சிறிய ஆயுதக்கிளர்ச்சி உருவானது உண்மை. தலாய்லாமாவின் வழி நடத்தல் காரணமாக அகிம்சை வழியே மேலோங்கியது. ஆனாலும் சீனர்கள் விடாமல் தலாய்லாமாவை அச்சுறுத்தவே அவர் இந்தியாவில் அடைக்கலம் தேட வேண்டியதாயிற்று. அங்கிருந்து அந்த அன்புருவான மகான் நடத்திய அகிம்சைப் போராட்டங்களும் மேற்கு நாட்டுப் பயணங்களும் சீனா திபெத்தை தனது இன்னுமொரு மாகாணமாக இணைப்பதை எவ்வகையிலும் தடை செய்யவில்லை. இந்தியாவுக்கு இராணுவக் கேந்திர ரீதியாக பெரிய முக்கியத்துவம் திபெத்தில் இருந்த போதும் இந்தியா மூச்சு விடாமல் இருந்து விட்டது.இன்றும் வட-கிழக்கு எல்லையில் வாழ்கிற சில இந்தியக் கிராம வாசிகளுக்கு தாம் இந்தியரா சீனரா என்ற தெளிவில்லை. திபெத்தியர்கள் சட்டரீதியாக இப்போது சீனர்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பி.ராமன் ஒரு தேவ.....

பி.ராமன் ஒரு தேவ.....

ராஜா சொல்ல வந்தத சொல்லிடனும்

சரி நானே சொல்லுறேன்

பி.ராமன் ஒரு தேவா.....ங்கு

இது அமெரிக்கா இந்தியாவ தூண்டிவிடுரதுக்கான பேச்சா இருக்கலாம், சீனா தலை தூக்குவது அமெரிக்காவிக்கு உள்ள பெரிய தலையிடி, இந்தியாவ சீண்டிவிட்டு தான் குளிர் காயுர ஐடியா :P

Edited by வானவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.