Jump to content

கூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா?

Admin Wednesday, March 20, 2019
ஸ்டேடியா (Stadia) என்னும் க்ளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களைக் கூட சாதாரண கணினிகளில் விளையாட முடியும்.
 
கூகுள் ஸ்டேடியா google stadia


வீடியோ கேமிங் என்பது பணம் கொழிக்கும் துறைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் கணினி மற்றும் கன்சோல் (Console) கேம்களில் மட்டும் கவனம் செலுத்திய தயாரிப்பாளர்கள் தற்போது மொபைல் போன்களின் வளர்ச்சியைக் கண்டு அதன் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதில் பணம் சம்பாதிப்பது விளையாட்டை தயாரிப்பவர்கள் மட்டுமல்ல, அதனை விளையாடுபவர்களும் தான். வீடியோ கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விற்பனை செய்தும் அல்லது கேமை இலவசமாக கொடுத்து கூடுதல் வசதிகளை கேமின் உள்ளே விற்பனை செய்தும் சம்பாதிக்கிறார்கள்.

கேம் விளையாடுபவர்கள் தங்கள் விளையாடும் வீடியோவை (Gameplay) யூட்யூப், ட்விட்ச், பேஸ்புக் போன்ற தளங்களில் பதிவேற்றம் செய்து அல்லது லைவ் ஸ்ட்ரீம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

மேலும் சில கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விளம்பரப்படுத்த மிகப்பெரிய அளவில் பரிசுப்போட்டி நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு PUBG கேம் தயாரிப்பாளர்கள் இந்தியா உள்பட பல நாடுகளில் மிகப்பெரிய அளவில் போட்டிகளை நடத்துகிறார்கள். இதில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுபவர்கள் லட்சக்கணக்கில் பரிசுகளை அள்ளிச் செல்கின்றனர்.

தற்போது உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களை விளையாட உங்களிடம் ப்ளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் போன்ற கன்சோல்கள் அல்லது உயர்தொழில்நுட்ப கணினிகள் இருக்க வேண்டும். பெரும்பாலானோர் இதற்கு சக்தியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். இதற்கு  தீர்வாக வந்துள்ளது தான் கூகுள் ஸ்டேடியா.
 

கூகுள் ஸ்டேடியா

கூகுள் ஸ்டேடியா என்பது கிளவுட் கேமிங் சேவையாகும். அதாவது கேம்கள் எல்லாம் கூகுளின் சர்வர்களில் இருக்கும். அந்த கேம்களை நீங்கள் டவுன்லோட் செய்யும் அவசியமும் இல்லை. உங்கள் குறைந்த தொழில்நுட்பம் கொண்ட சாதாரணக் கணினிகளிலும் கூட க்ரோம் உலவியில் உயர்தொழில்நுட்ப கேம்களை ஒரு க்ளிக் செய்து விளையாடலாம். மேலும் மொபைல், டேப்லட், டிவிக்களிலும் நீங்கள் விளையாடலாம்.
 

கூகுள் ஸ்டேடியா வசதிகள்

பல்வேறு சாதனங்கள்

நீங்கள் மொபைலில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் மொபைலில் சார்ஜ் இல்லை என்றால் உடனடியாக உங்கள் கணினியில் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடலாம். இப்படி எந்தவொரு சாதனத்திலிருந்தும் வேறொரு சாதனத்திற்கு மாறி விளையாடலாம்.
 

கண்ட்ரோலர்

உங்களிடம் ஏற்கனவே வைஃபை வசதிக் கொண்ட ப்ளேஸ்டேஷன் அல்லது எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலர் இருந்தால் அதனையே பயன்படுத்தலாம். அல்லது கூகுள் ஸ்டேடியா கண்ட்ரோலர் விலைக்கு வாங்கி விளையாடலாம். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 

யூட்யூப்

ஸ்டேடியா சேவை யூட்யூபுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் விளையாடும் வீடியோவை நேரடியாக யூட்யூபில் ஒளிப்பரப்பலாம்(Live Stream). மேலும் யூட்யூபில் (ஸ்டேடியாவில் உள்ள) ஒரு கேம் ட்ரைலரை பார்க்கும்போது அந்த வீடியோவில் உள்ள "Play Now" பட்டனை க்ளிக் செய்து சில வினாடிகளில் அந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம்.

மேலும் ஸ்டேடியாவில் "Slate Share" என்னும் வசதி மூலம் லைவாக விளையாடிக்கொண்டிருக்கும்போதே உங்கள் நண்பர்களையோ, உங்கள் சேனல் பார்வையாளர்களையோ உங்களுடன் விளையாட அழைக்கலாம்.

மேலும் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு நிலையில் எப்படி கடப்பது? என்று தெரியாமல் இருந்தால் Google Assistant வசதி மூலம் அதனை முடிப்பதற்கு நீங்கள் கேமை விட்டு வெளியேறாமலேயே யூட்யூப் வீடியோவை பார்க்கலாம்.
 

4K HDR at 60 FPS

உங்கள் சாதாரண கணினிகளில் கூட உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து 4K HDR at 60 FPS தரத்தில் விளையாடலாம்.

கூகுள் ஸ்டேடியா சேவை இந்த வருடத்தில் அமெரிக்கா, கனடா, யுகே மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வெளியிடப்படுகிறது. இதன் விலை விபரம் மற்றும் மற்ற நாடுகளில் வெளியிடப்படும் நாள் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.

கூகுள் சொன்னபடி இது வேலை செய்தால் நிச்சயமாக இது கேமிங் உலகில் புரட்சியாக இருக்கும். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் கூகுள் ஸ்டேடியாவில் விளையாடுவதற்கு உங்களிடம் குறைந்தபட்சம் 15 எம்பிபிஎஸ் வேக இணைய வசதி இருக்க வேண்டும்.

https://www.bloggernanban.com/2019/03/google-stadia.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.