Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னி கோசிப் 15

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவியை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது,வெஸ்டர்ன் யூனியிலோ(மார்க்ஸ் குறைந்த ஆட்கள் படிப்பது அங்கே என்று நம்மன்ட சிட்னி டமிழ்ஸ் சொல்லினம்)பிள்ளை சொன்னா சீ சீ நான் சிட்னி யூனி என்றா,என்ன கோர்ஸ் என்று பிள்ளையை கேட்டபோது அவா சொன்னா வைனல் இயர் லோ செய்யிறன் என்றா.எனக்கு நல்ல விருப்பம் கோர்ஸ் நல்ல இன்றஸ்சா இருக்கு மாஸ்டர்சும் செய்ய வேண்டும் அப்ப தான் நல்ல வேலைவாய்பு எடுக்கலாம் என்று கூறினா,நானும் ஓம் ஓம் நல்ல வேளை இங்கே எடுக்கலாம் என்று சொன்னேன்.

பிள்ளை உடனே இங்கே வேலை பார்க்க அவ்வளவு விருப்பம் இல்லை(அப்பன்மார் வெளிநாடு வாரதுக்கு எத்தனி ஏஜென்டில காசு கொடுத்து தலை மாற்றி காலை கை பிடித்து வெளிநாடு வந்த கதை இவையளுக்கு எங்கே தெறிய போகுது),ஸ்டேட் அல்லது இங்கிலாந்து தான் நல்லம் அதற்கு தான் சர்வதேச சட்டம் படிக்கிறன்,ஜக்கிய நாடுகள் சபை அல்லது தூதுவராலயங்களில் வேலை பார்க்கலாம் என்று அடுகிகிட்டே போனா.

பிள்ளையுடன் சும்மா அரசியல் கதைத்தேன் எனக்கும் நேரம் போக வேண்டும் தானே.அமெரிக்க அரசியல்.ஈராக் அரசியல்,ஆப்கானிஸ்தான் அரசியல்,அவுஸ்ரேலிய அரசியல்,பலஸ்தீனிய அரசியல் அழகா ஆங்கிலத்தில் விலாசி தள்ளினார் அத்துடன் பயங்கரவாதம்,ஜனநாயகம் என்று சகலதையும் விலாசி தள்ளினா எல்லாம் பல்கலைகலகத்தில் சொல்லி கொடுத்திருக்கினம் போல.

இவ்வளவு தெறிந்த பிள்ளை எங்கன்ட பிரச்சினையும் தெறியுமாக்கும் என்று நினைத்து எப்படி சிறிலங்கா புரோபளம் போகுது என்றேன் அதற்கு பிள்ளை உடனே எனக்கு ஒன்றும் தெறியாது இதுகளை பற்றி அப்பாட்ட தான் கேட்க வேண்டும்,ஏதோ விமானநிலையத்தில் குண்டு போட்டது என்று சொல்லி கொண்டு இருந்தார் அவருக்கு தான் இந்த அரசியல் எல்லாம் தெறியும் என்றா.சிறிலங்கா போய் இருக்கிறீங்கா என்று கேட்டேன் அதற்கு இல்லை ஒவ்வொரு வருடமும் புட்டபத்தி போறனாங்கள் கடந்த வருடம் சாய் இளைஞர் அமைப்பு மூலம் அங்கு போய் சாய் தரிசனம் கிடைத்தது,இஸ் ரியலி நைஸ் பிளேஸ்,மறந்து போனேன் எனக்கு பஜனை இருக்கு போயிற்று வாரேன் என்று ஓடி போயிட்டா.

இப்ப தான் நினைத்தேன் இவர்கள் ஜக்கியநாடுகள் சபைக்கு வந்து எங்களுக்காக குரல் கொடுக்க போவதில்லை பிள்ளையை சொல்லி குற்றமில்லை பிள்ளைக்கு அப்பா சொல்லி கொடுத்தா தானே உண்மையான எமது நிலைமை புரியும்.

தந்தை செல்வா,திருசெல்வம்,ஆனந்தகுமா

புத்து இதெல்லாம் யாருடைய தவறு...........?

பெற்றவர்களின் தவறா......? இல்லை பிள்ளைகளின் தவறா........? இல்லை எமது புலம் பெயர் சமுதாயத்தின் தவறா.........? இவர்களையெல்லாம் வழிக்குக் கொண்டுவர முடியுமா.........? எப்படி கொண்டுவருவது..........?

இவற்றிற்கெல்லாம் யாருக்காவது இங்கே பதில் தெரியுமா......?

தமிழர்கள் பொதுவாகவே எதிகாலத்தை பற்றிய பரந்த சிந்தனையோ திட்டங்களோ எதுவும் இல்லாதவர்கள். தங்கள் பிள்ளை படித்து பட்டம் பெற வேண்டும், சீதனக்காசு சேர்க்கவேண்டும் என்பதோடு எமது எதிர்காலச் சிந்தனை முடிந்துவிடுகிறது.

ஈழத்தில் எமது முன்னோர்களும் இதையேதான் செய்தார்கள்.

ம்ம்ம் இப்படி சிலர்..அப்படி சிலர்...புத்துவிடம் கதைப்பவர்கள் எல்லாரும் ஒரு மாதிரி தான்..

  • கருத்துக்கள உறவுகள்

இதில் யாரில் தப்பென்று ஆராட்ச்சி செய்வதைவிட இதை எப்படி கையாள்வது என்பது தான் முக்கியமான கேள்வி.

நான் ஒரு பிள்ளையாக இருந்திருந்தபோது இருந்த சூழ்நிலைக்கும், இப்போது பெற்றோராக இருக்கின்ற நிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவே இதிலிருந்து புரிவது என்னவென்றால் இந்த தவறுகளுக்கு முழுக்க முழுக்க சூழ்நிலைகள் தான் காரணமாக அமைகின்றன. இதில் இன்னுமொரு விடயத்தையும் நோக்கவேனும் அதாவது நாங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எங்களை சரியான முறையில் தயார்படுத்தாததும் காரணமாகவிருக்கலாம். சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அவர்களின் போக்கிலையே விடுவதும், பிள்ளைகள் அந்த நாடுகளின் கலாச்சாரம், மொழி, போன்றவற்றில் முழுசாக மூழ்கும்போது அதை தட்டிக்கொடுக்கும் பெற்றோரும், அதை பெருமையாக நினைத்துக்கொள்ளும் பெற்றோர்களும் இருக்கும்வரை இந்த பிரச்சினையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதாவது நாங்களாக திருந்த முயற்ச்சித்தாலே ஒழிய வேறு வழியில்லையென்பது தான் எனது கருத்து.

எவா அவா புத்து எனக்கு ஒருக்கா அறிமுகபடுத்திவையுங்கோ

:rolleyes:

இதில் யாரில் தப்பென்று ஆராட்ச்சி செய்வதைவிட இதை எப்படி கையாள்வது என்பது தான் முக்கியமான கேள்வி.

நான் ஒரு பிள்ளையாக இருந்திருந்தபோது இருந்த சூழ்நிலைக்கும், இப்போது பெற்றோராக இருக்கின்ற நிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவே இதிலிருந்து புரிவது என்னவென்றால் இந்த தவறுகளுக்கு முழுக்க முழுக்க சூழ்நிலைகள் தான் காரணமாக அமைகின்றன. இதில் இன்னுமொரு விடயத்தையும் நோக்கவேனும் அதாவது நாங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எங்களை சரியான முறையில் தயார்படுத்தாததும் காரணமாகவிருக்கலாம். சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அவர்களின் போக்கிலையே விடுவதும், பிள்ளைகள் அந்த நாடுகளின் கலாச்சாரம், மொழி, போன்றவற்றில் முழுசாக மூழ்கும்போது அதை தட்டிக்கொடுக்கும் பெற்றோரும், அதை பெருமையாக நினைத்துக்கொள்ளும் பெற்றோர்களும் இருக்கும்வரை இந்த பிரச்சினையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதாவது நாங்களாக திருந்த முயற்ச்சித்தாலே ஒழிய வேறு வழியில்லையென்பது தான் எனது கருத்து.

எங்கே தவறு இருக்கின்றது என்று தெரிந்தால்தனே அதை நிவர்த்தி செய்ய முடியும, பிழை எங்கே இருக்கின்றது என்று தெரியாமல் எதை போய் எங்கே கையாள்வது?

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் வானவில் அவர்களே நீங்கள் ஒரு அப்பாவா அல்லது இன்னும் தனிமனிதரா என்பது எனக்குத்தெரியாது. நீங்கள் ஒரு அப்பாவாக இருந்தால் அனுபவரீதியாகவே தப்பு யாரின் பக்கம் இதை எப்படி அனுகலாம் என்பதை புரியக்கூடியதாகவிருக்கும். உண்மையில் இந்த விடயத்தில் பெரும்பங்கு பெற்றோர்களிடமே தங்கியுள்ளது. உதாரணமாக எனக்கு எனது தாய்மண், தாய்மொழி, எம்நாட்டு மக்கள் போன்றவற்றில் எந்தவிதமான அக்கறையுமில்லையென்றால் என்னுடைய பிள்ளையிடம் இருந்து எப்படி எதிர்பார்க்க முடியும்? அதாவது பெற்றோர்களுக்கு ஆர்வமிருந்தும் பிள்ளைகள் திசை மாறுவதுதான் சிக்கலான விடயம், நாம் எமது பிள்ளைகளில் சிறு பிராயத்தில் இருந்தே விழிப்பாக இருந்தோமானால் ஓரளவு வெற்றியளிக்க சந்தர்ப்பம் இருக்கிறது. மற்றும்படி ஏனோ தானோ என்று பிள்ளைகளை அவர்களின் போக்கில் வளரவும் வாழவும் விட்டோமென்றால் அந்தோ கதிதான். அதாவது எனது கருத்தின்படி உங்கள் கேள்விக்குரிய பதில் முக்கிய பங்கு பெற்றோர்களில் தான் தங்கியுள்ளது.

புத்து எப்ப அவாவை எனக்கு அறிமுகபடுத்தி வைக்க போறீர்???

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பலபேர் புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கினம். ஈழத்தில் பிறந்த ஒருவரைச் சந்தித்தேன். வான்புலிகளின் தாக்குதல் பற்றி சொன்னபோது அவரது கருத்தினைப் பார்க்க

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=292373

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிலர் பகவத் கீதை எல்லாம் படிக்கினம். உரிமைக்காக பாண்டவர்கள் கெளரவர்களுடன் போர் புரிந்தது பற்றி எல்லாம் படிப்பினம். ஆனால் சிங்கள அரசினால் உரிமைகள் இழந்தவர்கள் அதற்கு எதிராக போராட்டம் நடாத்தும் போது கொச்சைப் படுத்துவினம். நிழல் கதா நாயகன் ரஜனிகாந்த் வில்லன்களை அடிக்கும் போது ஆ ஆ என்று பார்த்து சந்தோசப்படுவினம். ஆனால் நிஜக் கதா நாயன்கள், ஈழத்தில் எதிரிகளுடன் சண்டை பிடிக்கும் போது அதை கொச்சைப் படுத்துவினம். நெஞ்சு பொறுக்குதில்லை யே நெஞ்சு பொறுக்குதில்லையே. இந்த கேடு கெட்ட மனிதரை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே.

எனக்கு ஒரு பாட்டுத்தான் ஞாபகம் வருகுது " என்னைச்சொல்லி குற்றம் இல்லை உன்னைச்சொல்லி குற்றம் இல்லை காலம் செய்த கோலம் இது தமிழர் செய்த பாவம்" . நாங்கள் தமிழீழத்தை விட்டு வெளியேறியது தான் குற்றம். எங்களுக்கு தமிழ் போராட்டத்தையே அல்லது தமிழ் வரலாற்றையே எங்கட பெற்றேர் எங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை நாங்கள் தான் தெரிந்து கொண்டோம். நாங்கள் வாழ்ந்த காலம் அது, ஒவ்வோரு மூச்சிலும் பேச்சிலும் போராட்டம், புலி ( ரைகேஸ்) என்ற வார்த்தை கலந்து இருந்தாது. ஒவ்வோரு வீட்டிலும் வீதியிலும் போராட்ட பாட்டுகள், பிள்ளை பிறக்கும் போதே போராட்டம் என்ற உணர்வோடு தான் பிறக்கும். அந்த பிள்ளைக்கு ஒருவரும் போராட்டத்தை பற்றியோ தமிழீழத்தைப்பற்றியோ சொல்லிக்கொடுக்க தேவையில்லை.

ஆனால் தமிழீழத்தில் இருந்து நாங்கள் எங்களுடைய சுயநலத்தினாலோ அல்லது காலத்தின் கட்டாயத்தினாலோ புலம் பெயர்க்கபட்டுவிட்டோம். சில புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழ போராட்ட நிகழ்ச்சிகள் கலந்துரையாடல்கள் நடக்கின்றன ஆனால் சில நாட்டில் எல்லாமே தடை. இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு இது ஒன்ருமே தெரிவதற்கு சந்தர்ப்பம் இல்லை. தொலைக்காட்சியை பார்ப்பம் எதாவது தமிழீழ செய்தி இருந்தா கதைப்பம்.அவ்வளவு தான், கொஞ்சம் விபரம் தெரிந்த பிள்ளையெண்டால் பெற்றோர் கதைக்கிறதை கேட்கும் இல்லாவிட்டால் அதுவும் இல்லை. பெற்ரோருக்கு வேலை, வீட்டு வேலை, பிள்ளைகளுடைய படிப்பு என்று நேரமே இருக்காது. இது பெற்றோரை சொல்லி குற்றம் இல்லை. பிரச்சனை குறைந்திருந்த காலத்தில் தமிழீழ்த்திற்கு போய் இது தான் உன் பெற்றோருடைய வீடு, இது தான் நாங்கள் ஓடி விளையாடிய வயல், என்று கொஞ்சம் சொல்லி கொடுத்தார்கள் இப்போது அதுவும் இல்லை. இது யாருடைய குற்றம்???? நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும், எல்லாவற்றுக்கும் எங்கள் தலைவருடைய காலத்தில் விடை கிடைக்கும்.

புத்தன் சந்தித்த பிள்ளைக்கு எல்லா நாட்டு அரசியலும் தெரியுது ஆனால் தன் பெற்றோர் பிறந்து வளர்ந்த நாட்டு செய்தி தெரியவில்லை என்றால் வேதனைப்பட தான் வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தான் ஆத்மீகவாதிகள் நல்ல டயலக் வைத்திருக்கிறார்கள் இதோ கந்தப்பு உங்களுக்காக,இதை சொல்லி நீங்கள் மன அமைதி கொள்ளலாம்,யாழ்ரவியும் இதை கேட்டு மன அமைதி கொள்ளலாம்

"எதை சொன்னாய் அது இங்கிருந்து சொல்லபட்டது

எதை எழுதினாய் அது இங்கிருந்து எழுதபட்டது

எல்லாம் அவன் செயல்"

Edited by putthan

சகோதரன் வானவில் அவர்களே நீங்கள் ஒரு அப்பாவா அல்லது இன்னும் தனிமனிதரா என்பது எனக்குத்தெரியாது. நீங்கள் ஒரு அப்பாவாக இருந்தால் அனுபவரீதியாகவே தப்பு யாரின் பக்கம் இதை எப்படி அனுகலாம் என்பதை புரியக்கூடியதாகவிருக்கும். உண்மையில் இந்த விடயத்தில் பெரும்பங்கு பெற்றோர்களிடமே தங்கியுள்ளது. உதாரணமாக எனக்கு எனது தாய்மண், தாய்மொழி, எம்நாட்டு மக்கள் போன்றவற்றில் எந்தவிதமான அக்கறையுமில்லையென்றால் என்னுடைய பிள்ளையிடம் இருந்து எப்படி எதிர்பார்க்க முடியும்? அதாவது பெற்றோர்களுக்கு ஆர்வமிருந்தும் பிள்ளைகள் திசை மாறுவதுதான் சிக்கலான விடயம், நாம் எமது பிள்ளைகளில் சிறு பிராயத்தில் இருந்தே விழிப்பாக இருந்தோமானால் ஓரளவு வெற்றியளிக்க சந்தர்ப்பம் இருக்கிறது. மற்றும்படி ஏனோ தானோ என்று பிள்ளைகளை அவர்களின் போக்கில் வளரவும் வாழவும் விட்டோமென்றால் அந்தோ கதிதான். அதாவது எனது கருத்தின்படி உங்கள் கேள்விக்குரிய பதில் முக்கிய பங்கு பெற்றோர்களில் தான் தங்கியுள்ளது.

நான் என்னும் சமுதாயத்தில் பக்குவப் பட்ட வயசுக்கே என்னும் வரவில்லை வல்வை மைந்தன்

இது கொஞ்சம் ஒவராய் போகிற மாதிரி எனக்கு தொரிகிறது. விடுதலை போராட்டம் என்பது ஆளும் வர்க்கத்துக்கும், ஆள தூடிக்கும் வர்க்கத்துக்கும் நடக்கும் சண்டை. அதில் பொதுமக்கள் எல்லோருமோ பகடைக்காய்கள். ஜொர்ஜ் ஆர்வல் என்ற ஆங்கில எழுத்தாளர் இதனை அனிமல் பார்ம் என்ற புத்தகத்தில் தொளிவாக எழுதியுள்ளார் (எனக்கும் ஆங்கில புத்தகம் படிக்கும் வழக்கம் என்பதற்காக எழுதவில்லை). படித்து பார்க்கவும்.

புலத்தில் நடுத்தர வாழ்க்கையும், ஆங்கில காலசாரத்தில் ஆதிக்கமும் எம் சிறார்களை ஆட்டிப் படைக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. அதைச் சாமாளிக்க பொற்றொர்கள் ஆகிய நாங்கள் படும் நாய் படதா பாடையும் கொஞ்சம் யோசியுங்கோ. எல்லாத்துக்கும் நொட்டை சொல்லிக் கொண்டு இருக்கமால்.

என்ன இந்த யாழ் கவி? பிள்ளையும் கிள்ளி தொட்டிலயும் ஆட்டி விடுகிறா. என்ன புத்தன் ஒரொ யாழில் தான், வீட்டில் வோற வொலையில்லையோ என்று புத்திட்ட (திருமதி புத்தன்) அள்ளி வைச்சுப்போட்டு........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.