வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை செய்து வழக்கு முடிவுறுத்தப்படவேண்டும் எனும் சட்டம் கொண்டுவரப்படவேண்டும், வழக்காளியோ எதிராளியோ இறக்கும்வரை இழுத்தடித்து, அதை அடுத்த சந்ததிக்கு திணிக்கும் வரை நீடிக்கக் கூடாது. அத்துடன் வழக்கிற்கு இவ்வளவு தொகைதான் சட்டத்தரணிகள் வசூலிக்க வேண்டுமென்கிற வரையறை கொண்டுவரப்படவேண்டும். இதனால் ஏழைமக்களும் சட்ட உதவியை பெற வாய்ப்புண்டு. சட்டத்தரணிகள் அதிக பணத்தை வசூலிப்பதும் வழக்கை இழுத்தடிப்பதும் சட்ட தர்மத்திற்கு எதிராக செயற்படுவதும் தமது வாடிக்கையாளரின் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை பணத்திற்காக எதிர்தரப்பிற்கு காட்டிக்கொடுப்பதும் விற்பதும் பின் வழக்கிலிருந்து பின்வாங்கி எதிர்தரப்பிற்கு ஆயராவதும் ஊழல் செய்வதும் வழக்குகள் குவியவும் மக்கள் நீத்துறையின்மீது நம்பிக்கை இழக்கவும் காரணமாகிறது. சட்டத்தரணிகள், போலீசாரே பகற் கொள்ளைக்காரர். சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவும் இவர்களே காரணம்.
By
satan ·
Archived
This topic is now archived and is closed to further replies.