Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் தலைமையை அமைச்சர் றிஷாத் வழங்க வேண்டும் – பாஸ்டர் ஜோன் லோகநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுடைய வாழ்வையும், எதிர்காலத்தையும் கருத்திலெடுக்காமல் தங்களுடைய வாழ்வுக்காகவும், சுயநலன்களுக்காகவும் தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச்செயலாளர் பாஸ்டர் ஜோன் லோகநாதன் தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் நிர்மாணிக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் திறப்புவிழா நிகழ்வு அண்மையில் பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழுகின்றார்கள். அவர்களை தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளார்கள். இப்படிப்பட்டதொரு துர்ப்பாக்கிய நிலையில் வாழும் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நல்லதொரு அரசியல் தலைமையை எதிர்காலத்தில் நீங்கள் காண்பித்துத்தர வேண்டுமென மேடையிலிருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் பாஸ்டர் ஜோன் லோகநாதன் வேண்டிக்கொண்டார்.

இந்நாட்டிலே இருகின்ற முஸ்லிம் சமூகம் சிறப்பான அரசியல் தலைமைகளைப் பெற்றிருப்பதால் தான் இன்றைக்கு உங்களுடைய குடும்பங்களும், பிரதேசங்களும் சிறப்பான நன்மைகளைப் பெற்றிருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட நல்ல அரசியல் தலைவர்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுகின்ற போது தான் இந்நாட்டில் சந்தோஷம், நிம்மதியாக தலை நிமிர்ந்து வாழ முடியுமென்று சொல்வதில் நான் பெருமையடைகிறேன் என்றார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன், விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, கப்பல் மற்றும் துறைமுக அபிவிருத்திப் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் முதலில் மன்னார் முஸ்லீம் மக்களுக்கு ஒரு சரியான தலைமைத்துவத்தை வழங்கினாலே பெரிய விசயம். அதுக்குள்ள.. இவரொன்னு.. வாங்கிற காசுக்கு குரைக்கிற.. சாரி.. மை கைப்பிடிச்சு.. கத்துற கூட்டம்..😂

Edited by nedukkalapoovan

12 hours ago, colomban said:

தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நல்லதொரு அரசியல் தலைமையை எதிர்காலத்தில் நீங்கள் காண்பித்துத்தர வேண்டுமென மேடையிலிருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் பாஸ்டர் ஜோன் லோகநாதன் வேண்டிக்கொண்டார்.

பாஸ்டர் ஜோன் லோகநாதனுக்கு கள்ளக்காணி பிடிக்கும் ஆசை வந்துவிட்டது! அதைத்தான் மேடையில் இப்படி பகிரங்கமாக கூறிவருகிறார்!

மன்னாரிலும் இப்போது ஜோன் லோகநாதன் போன்றவர்களின் தலைமைத்துவத்தில் அதுதான் நடக்கிறது!

திருக்கேதீஸ்வரக் கோவில் காணியை திருட்டுத்தனமாக ஆக்கிரமித்து, அந்த கள்ளக் காணியில் சிறிய கிறிஸ்தவ சிலையை அமைத்து, இன்று அதை லூர்துமாதா கோவில் என்று பெரிதாக கட்டி, அதனருகில் திருக்கேதீஸ்வரக் கோவில் நிர்வாகம் ஒரு அலங்கார வளைவை அமைக்க, அதை உடைத்து தமது மதவெறிக் காடைத்தனத்தை ஒரு கள்ளக்காணி கும்பல் நடத்தியுள்ளது.

கடந்த 40 வருட வரலாற்றை அறிந்த, மனச்சாட்சி உள்ளவர்கள் இந்த திருக்கேதீஸ்வர கோவிலுக்கு சொந்தமான கள்ளக்காணியில் சர்ச் அமைத்த மதவெறிக் காடைத்தனத்தை கூறுவார்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, போல் said:

திருக்கேதீஸ்வரக் கோவில் காணியை திருட்டுத்தனமாக ஆக்கிரமித்து, அந்த கள்ளக் காணியில் சிறிய கிறிஸ்தவ சிலையை அமைத்து, இன்று அதை லூர்துமாதா கோவில் என்று பெரிதாக கட்டி, அதனருகில் திருக்கேதீஸ்வரக் கோவில் நிர்வாகம் ஒரு அலங்கார வளைவை அமைக்க, அதை உடைத்து தமது மதவெறிக் காடைத்தனத்தை ஒரு கள்ளக்காணி கும்பல் நடத்தியுள்ளது.

கடந்த 40 வருட வரலாற்றை அறிந்த, மனச்சாட்சி உள்ளவர்கள் இந்த திருக்கேதீஸ்வர கோவிலுக்கு சொந்தமான கள்ளக்காணியில் சர்ச் அமைத்த மதவெறிக் காடைத்தனத்தை கூறுவார்கள்! 

திருவாளர் போல் அவர்களே திருக்கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவை உடைத்ததை பார்த்து பொங்கும் நீங்கள் ,அங்கே இருந்து கொஞ்சம் தள்ளி கிண்ணியா வெந்நீரூற்றில் சிவ ஆலயத்தை சீர் கெடவைத்து  முழுநேர புத்தர் ஸ்தாபிக்கப்பட்டு புரியாத மொழியில் பிக்கிகள் புலம்புவதை பார்த்து பொங்காதது ஏனோ ....? அதெப்படி முடியும் சிங்களவன் வாயிலேயே குத்துவான். கிறிஸ்தவர்கள் என்றால் பிரச்சினையில்லை வரும் வாந்தி எல்லாவற்றையும் எடுக்கலாம் அப்படித்தானே ....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.