Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் ?

 

12 ஆவது உலகக்கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடக்கிறது. இதற்கான 15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாம் இந்திய கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

world-cup-india.jpg

15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாமிற்கு தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரோகித் சர்மா, சிகர் தவான், கீதர் யாதேவ், மகேந்திரசிங் தோனி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, குல்தீப் யாதேவ், ஷால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், விஜேய் சங்கர், கே. எல். ராகுல், தினேஸ் கார்த்திக் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படடுள்ளர்.

57096909_2233598480009650_80216109515915

இதேவேளை,போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் ஆகியோரை உள்ளடக்கிய உலகக்கிண்ண அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள்  இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த குழுவில் டேவிட் வோர்ணர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஹாண்ட்ஸ்கொம் மற்றும் ஹஸில்வூட் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்கவில்லை.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் 15 பேர் கொண்ட 2019 ஆண்டுக்கான உலக்கிண்ண குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேரடங்கிய அவுஸ்திரேலிய குழாம் விபரங்கள் வருமாறு,

அவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பிஞ் தலைமை தாங்குகின்றார், அவருடன் டேவிட் வோர்ணர், ஸ்டீபன் ஸ்மித், உஷ்மன் கவாஜா, ஷோர்ன் மார்ஷ், கிளன் மெக்ஷ்வெல், மார்க்கஸ் ஸ்டெய்னிஸ், விக்கெட் காப்பாளராக அலக்ஸ் கேரி, பட் கெம்மின்ஸ், மிட்சல் ஸ்ராக், ஜெயி ரிச்சட்சன், நதன் குல்ட்லர் நில், ஜேசன் பிஹர்ன்டோர்ப், அடம் ஷம்பா, நதன் லின் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. 

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்றையதினம் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விபரம் மற்றும் இந்திய அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இலங்கை அணி வீரர்கள் குறித்து எதுவும் வெளிவராத நிலையில், அஞ்சலோ மெத்தியூஸிடம் உலகக் கிண்ண அணிக்கு தலைமை தாங்குமாறு கேட்கப்பட்டதாகவும் அதனை மெத்தியூஸ் நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும் இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிலையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/53991

  • கருத்துக்கள உறவுகள்

எங்க ஊரு வீரர்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ..? ராயுடு புறக்கணிப்பில் உள்குத்தா..? சர்ச்சையை கிளப்பிய முன்னாள் வீரர்..

ojha_1200x630xt.jpg

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நான்காம் வரிசைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் சிறப்பாக ஆடி நான்காம் இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நிதானமாக சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் அதேவேளையில், சில பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்வதாலும் இவையனைத்தையும் கருத்தில் கொண்டு விஜய் சங்கரை எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார்.

ராயுடுவின் நீக்கத்திற்கு காம்பீர் உட்பட பல முன்னாள் வீரர்கள் வருத்தம் தெரிவித்தனர். உலக கோப்பை அணியில் தன்னை ஓரங்கட்டிய கடுப்பில் இருந்த ராயுடு, விஜய் சங்கர் ஒரு 3 டைமன்ஷனல் வீரர் என்று பிரசாத் தெரிவித்திருந்ததை குறிப்பிட்டு கிண்டலாக டுவீட் செய்திருந்தார். உலக கோப்பையை காண இப்போதுதான் 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளதாக ராயுடு பதிவிட்டுள்ளார். விஜய் சங்கரின் தேர்விற்கு சொல்லப்பட்ட காரணத்தை கிண்டல் செய்யும் விதமாக இந்த பதிவை இட்டிருந்தார் ராயுடு.

ராயுடுவுக்கு ஆதரவாக அவரது டுவீட்டிற்கு பதிலளித்த முன்னாள் ஸ்பின் பவுலர் பிரக்யன் ஓஜா, தானும் இதேபோன்றதொரு சூழலை எதிர்கொண்டதாகவும் ஹைதராபாத் வீரர்கள் சிலருக்கு மட்டும் இதேபோன்று நடப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

ஹைதராபாத் வீரர்களுக்கு இதுபோன்று நடப்பதாக கூறியிருப்பதன் மூலம் அணி தேர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளதால் ஓஜாவின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

https://tamil.asianetnews.com/sports-cricket/ojha-tweet-about-team-selection-raised-controversy-pq7i01

டிஸ்கி :

தெலுங்கா என் ரோமோட்டோ  தொக்கா..? இதை இப்படியே விட பிடாது.. எல்லா இனத்துக்காரனும்  ஆளுக்கு ஒரு இடம் கிந்திய அணியில் கேளுங்கப்பா.. 😎

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை அணிக்கு தேர்வான தமிழக வீரர்: யார் இந்த விஜய் சங்கர்?

 
விஜய் சங்கர்படத்தின் காப்புரிமைFACEBOOK

உலகக் கோப்பை போட்டிகளுக்கான விராத் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மார்ச் மாதம் இந்திய அணியில் தேர்வாகியபோது பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி:

யார் இந்த விஜய் சங்கர்?

தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான 26 வயதாகும் விஜய் சங்கர், திருநெல்வேலியில் பிறந்தவர். சிறுவயது முதல் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

"சிறுவயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோதே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது'' என்று தெரிவித்தார்.

வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் பயிற்சி

இந்திய அணிக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் என்று கூறிய விஜய் சங்கர், ஐபிஎல் அணிக்காக முன்னர் தேர்வானது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ளது குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறினார்.

''என் குடும்பம்தான் சிறு வயதில் இருந்தே என்னை கிரிக்கெட்டில் ஊக்குவித்தது. எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நான் நெட் பிராக்டிஸ் செய்வதற்கு என் பெற்றோர் வசதி ஏற்படுத்தி தந்தார்கள்'' என்று விஜய் சங்கர் மேலும் கூறினார்.

விஜய் சங்கர்

தனது பயிற்சியாளர் எஸ் பாலாஜியும் தனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாக குறிப்பிட்ட விஜய் சங்கர், இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பது தனது கனவின் முதல்படிதான் என்றும் அணியில் சிறப்பாக பங்களிப்பதும், நீண்ட காலம் நீடிப்பதும்தான் தனது மிகப்பெரிய கனவு என்று மேலும் தெரிவித்தார்.

'அணிக்கு தேர்வானது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி'

விஜய் சங்கர் இந்திய அணியில் விளையாட தேர்வானது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை ஹரிஹரன் சங்கர், ''எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவும், விஜய் இந்திய அணியில் இடம்பெறுவதும், அவர் மேலும் சிறப்பாக கிரிக்கெட்டில் பங்களிப்பதும்தான்'' என்று கூறினார்.

விஜய் இந்திய அணியில் விளையாட தேர்வான செய்தி, தனது குடும்பத்தினர் அனைவருக்கும் எதிர்பாராத ஒரு செய்தி என்று குறிப்பிட்ட ஹரிஹரன் சங்கர், ''நானும் முன்பு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அக்காலகட்டத்தில் பொருளாதார வசதிகள் இல்லாததால் என்னால் தொடர்ந்து விளையாட முடியவில்லை'' என்று நினைவுகூர்ந்தார்.

''அதே நேரத்தில், விஜய் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அகாடமியில் சேர வேண்டும் என்று கூறியவுடன், நான் உடனே அதற்கு ஏற்பாடு செய்தேன்'' என்று தெரிவித்தார்.

இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ள விஜய் சங்கர்
Image captionஇந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ள விஜய் சங்கர்

சிறுவயதில் படிப்பு மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் விஜய் நன்றாக செயல்பட்டதாக தெரிவித்த ஹரிஹரன் சங்கர், ''விஜய்க்கு 17 வயதானபோது கிரிக்கெட்டா ,படிப்பா எதை தொடர விருப்பம் என்று கேட்டேன். அதற்கு விஜய் கிரிக்கெட்டை தொடரவே விருப்பம் என்று தெரிவித்தார்'' என்று நினைவுகூர்ந்தார்.

விஜய்க்கு உதவும் வகையில் எங்களால் முடிந்த அளவு உதவிகள் செய்து தந்தோம் என்று குறிப்பிட்ட அவரது தந்தை, ''பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படும் விஜய், ஃபீல்டிங்கிலும் நன்றாக செயல்படக்கூடியவர்'' என்று கூறினார்.

சுழல் பந்துவீச்சாளர் மித வேகப்பந்துவீச்சுக்கு மாறியது ஏன்?

விஜய் சங்கருக்கு 12 ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி அளித்துவரும் அவரது பயிற்சியாளர் எஸ் பாலாஜி, விஜய் சங்கரின் கிரிக்கெட் பயணம் குறித்த நினைவுகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

''உன்னிப்பாக ஆட்ட நுணுக்கங்களை கணிக்கும் ஆர்வம் மிக்க விஜய் சங்கர், ஆரம்பத்தில் சுழல் பந்துவீச்சாளராக இருந்தார். பின்னர், எனது ஆலோசனையின்பேரில் அவர் மித வேகப்பந்துவீச்சுக்கு மாறினார். மற்றவர்களுடன் தனது பேட்டிங், பந்துவீச்சு குறித்து விவாதிப்பார் விஜய். பின்னர் தேவையான மாற்றங்களை ஆலோசித்து இருவரும் மேற்கொள்வோம்'' என்று பாலாஜி தெரிவித்தார்.

பயிற்சியாளர் பாலாஜி
Image captionபயிற்சியாளர் பாலாஜி

இந்தியா ஏ சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டை தனது திறமையால் பெரிதும் ஈர்த்தார் விஜய். இவரது ஆட்ட நுணுக்கம் மற்றும் திறமைகளை தேர்வாளர்களிடம் டிராவிட் எடுத்துக் கூறியிருக்கலாம் என்று பாலாஜி குறிப்பிட்டார்.

''விஜயின் கிரிக்கெட் பயணத்தில் இது ஆரம்பம்தான். கடின உழைப்பு மற்றும் திறமையால் அவர் நீண்டதூரம் பயணிக்கமுடியும்'' என்று பாலாஜி மேலும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sport-42076009

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.