Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலின் எண்டப்பே வானூர்தி நிலைய தாக்குதலைப் போன்றது புலிகளின் வான் தாக்குதல்: சிங்கள ஏடு.

Featured Replies

இஸ்ரேலின் எண்டப்பே வானூர்தி நிலைய தாக்குதலைப் போன்றது புலிகளின் வான் தாக்குதல்: சிங்கள ஏடு.

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல், இஸ்ரேலிய அதிரடிப்படையினர் என்டப்பே வானூர்தி நிலையம் மீது நடத்திய தாக்குதலைப் போன்றது என்று 'திவயின' சிங்கள ஏட்டின் படைத்துறை ஆய்வாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாதத்தை கக்கும் இந்த ஆய்வாளர், சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் எத்தகைய உத்தியைப் பயன்படுத்தி நடத்தினர் என்பது பற்றி எழுதிய ஆய்வில், என்டப்பே வானூர்தி நிலையத்தில் இஸ்ரேலிய அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலைப் போன்றே நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

என்டப்பேயில் இஸ்ரேலிய படையினர் இரகசியமாக வானூர்தி மூலம் சென்று தரையிறங்கி தாக்குதல் நடத்தினர். இங்கு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரகசியமாக ராடார்களுக்கு தெரியாமல் குண்டுகளை வீசிவிட்டுச்சென்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நல்ல ஆய்வு!!

:rolleyes:

(Entebbe) என்தெப்ப தாக்குதல்:

என்தெப்ப விமான நிலையம் உகண்டா நாட்டிலுள்ளது. இடி அமின் உகண்டாவின் சர்வாதிகாரியாக ஆட்சி செய்த காலக்கட்டத்தில் 27.06.1976 அன்று பிரான்ஸ் விமான சேவையின் ஏ-300 விமானமொன்று 248 பயணிகளுடனும் 12 விமான சிப்பந்திகளுடனும் இஸ்ரேலிய தலைநகர் ரெல் அவிவிலிருந்து ஏதென்ஸ் வழியாக பாரீஸ் நகரை நோக்கி பறந்துகொண்டிருந்தபோது நடுவானில் பாலஸ்தீன விடுதலை இயக்கமொன்றினால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வேறொரு புரட்சி இயக்கமொன்றின் ஆதரவுடன் கடத்திச்செல்லப்பட்டு முதலில் லிபியாவிலும் பின் உகண்டாவிலும் தரையிறக்கப்பட்டது.

இஸ்ரேலில் சிறையிலிருந்த 40 பலஸ்தீன தீவிரவாதிகளையும் கென்யா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 13 ஆதரவாளர்களையும் கடத்தல்காரர்கள் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து விமான பயணிகளை பணயம் வைத்திருந்தனர். பலஸ்தீன தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு இடி அமினும் அவனது படையும் பக்கபலமாக நின்று பலவிதத்தில் ஆதரவளித்து செயற்பட்டு வந்தனர். சில நாட்களில் படிப்படியாக விமான ஊழியர்களையும் பயணிகள் பலரையும் விடுதலை செய்ய கடத்தல்காரர்கள் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் விமான ஊழியர்கள் விமானத்தையும் பயணிகளையும் விட்டு வெளியேற மறுப்புத்தெரிவித்து பணயக் கைதிகளுடன் தாங்களும் தங்கியிருந்தனர். இறுதியில் 83 இஸ்ரேலிய பயணிகளையும் சில வேறு நாட்டு பயணிகளையும் விமான ஊழியர்களையும் கொண்ட குழுவை மட்டுமே பாலஸ்தீன கடத்தல்காரர்கள் தம்வசம் காவலில் வைத்திருந்து அவர்களை கொலை செய்யப்போவதாக அறிவித்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் தருணத்துக்காக காத்திருந்தனர். அத்தருணத்தில் பயணக் கைதிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலையத்தின் இடைநிலைத் தங்குமண்டபத்தில்(transit hall) வைக்கப்பட்டிருந்தனர்.

யூலை 3-ஆம் நாள் 29 இஸ்ரேலிய கொமாண்டோ அதிரடிப்படை வீரர்களுடன் இஸ்ரேலிலிருந்து புறப்பட்ட கெர்குலிஸ் விமானமொன்று தாழப்பறந்து எந்தெப்ப விமான நிலையத்தை இரகசியமாக சென்றடைந்ததும் அதன் சரக்கு ஏற்றும் வாயிலூடாக தரையிறக்கப்பட்ட இடி அமினின் பாவனையிலுள்ள வாகனத்தை ஒத்த ஒரு மெசடஸ் பென்ஸ் வாகனம் மற்றும் லாண்ட் ரோவர் வாகனங்கள் அடங்கிய காவல் தொடரணியில் பதுங்கியிருந்த இஸ்ரேலிய கொமாண்டோ படையின் முதல் தாக்குதல் அணி பல காவலரண்களைக் கடந்து சென்று விமான நிலைய கட்டிடத்துள் நுழைந்து தனது தாக்குதலை ஆரம்பித்தது. மேலும் மூன்று கெர்குலிஸ் விமானங்களும் படையணிகளும் கனரக ஆயதங்களுடன் தாக்குதலில் இணைந்து கொள்ள தொடர்ந்து மூண்ட சண்டையில் 3 பயணிகளும் ஒரு படை வீரனும் உயிரிழந்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளும் அதில் கொல்லப்பட்டனர். 5 இஸ்ரேலிய படையினரும் 10 பயணிகளும் காயமுற்றனர். மீட்கப்பட்ட அனைவரும் விமானங்களில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டனர். முழு தாக்குதல் மற்றும் மீட்பு நடவடிக்கை 30 நிமிடங்கள் நீடித்தது.

திறமைகளும் தகைமைகளும் தெரியாத்தனமாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். நிச்சயமாக அரசதரப்பின் கடும் கண்டனத்திற்கு உள்ளாவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.