Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிலுவைகள் சுமக்கி...

Featured Replies

காற்றோடு காற்றாக

பறந்து செல்லும்

வெற்றுக் காகிதங்கள்

நாங்கள் அல்ல

எழுதப்பட வேண்டிய

புதுக்கவிதைகள் நாம்

உறவுகளை இழந்து

உணர்வுகளைப் புதைத்து

முற்களின் பாதையில்

நடக்கின்ற சிட்டுக்

குருவிகள் நாம்

`அ` எழுத வேண்டிய

பிஞ்சுக்கைகள்

பழுத்து சிவப்பாக

புத்தகம் சுமக்கும்

வயதிலே...

சிலுவைகள்

சுமக்கின்றோம்

அன்னையவள் அன்பு

முத்தம் எங்கே?

அணைத்திடும் தந்தை

கைகள் எங்கே?

கண்ணீ ர் துடைத்திடும்

தங்கை எங்கே?

அன்புக்கு ஏங்கும்

இதயங்களாக நாம்

உறங்கிட முற்றமில்லை

பசித்திடின் புசிக்கவில்லை

மானம்காகாக்க உடைகூட இல்லை

பசி எமக்கு நண்பன்

தரை எமக்கு மெத்தை

மழை எமக்கு குளியல்

எம் இருள் களைந்து

ஒளியேற்ற உதவிக்கரம் தந்திடுவீர்

இலக்கியன் உங்கள் கவிதையை

தாங்கி நிற்க்கும் உணர்வுகளின்

வலிகள் அருமை

உங்களின் மனதிலுள்ள வலிகளை காகிததில் எழுதி இணையத்தில் இனைத்துள்ளீர்கள், உங்கள் கவிப் பணி மேலும் வளர்க

  • தொடங்கியவர்

அழகான கருத்திட்ட கஜந்தி வானவில் இருவருக்கும் நன்றி

அருமையா வடித்திருக்கிறீர்கள் கவி என்னும் மதுரத்தை!

www.tamil4u.wordpress.com

மெழுகு போன்ற உணர்வை உருக்கி உருக்கி வார்த்தாலும்..ஒளி தரும் உங்கள் எழுத்துப்போல்..அழகு

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்கு ஏங்கும்

இதயங்களாக நாம்

சிலுவைகளை சுமக்கின்றோம்

உங்க கவிதை அழகு.

கவிதை தலைப்பு முற்றுப்பெறாத மாதிரி இருக்கு

அன்புக்கு ஏங்கும்

இதயங்களாக நாம்

[/quote)

அழகிய வரிகள் நல்ல கவிதை எல்லோருடைய வலிகளும் உணர்வுகளும் அன்புதான் அதை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்

  • தொடங்கியவர்

அருமையா வடித்திருக்கிறீர்கள் கவி என்னும் மதுரத்தை!

www.tamil4u.wordpress.com

கருத்துக்கு நன்றி இது கவியல்ல உணர்வு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன் உங்கள் உணர்வுகளை வடித்த விதம் அழகு

எனது மனதை கவர்ந்த வரிகள்

"அன்புக்கு ஏங்கும்

இதயங்களாக நாம்"

இந்த வரிகளை வாசித்த போது இது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது

  • தொடங்கியவர்

மெழுகு போன்ற உணர்வை உருக்கி உருக்கி வார்த்தாலும்..ஒளி தரும் உங்கள் எழுத்துப்போல்..அழகு

ஒளிதரும் மெழுகாக உவமானம் தந்தீர் நன்றி

அன்புக்கு ஏங்கும்

இதயங்களாக நாம்

சிலுவைகளை சுமக்கின்றோம்

உங்க கவிதை அழகு.

கவிதை தலைப்பு முற்றுப்பெறாத மாதிரி இருக்கு

என்வரிகள் கண்டு கருத்துதந்த கறுப்பியக்காவுக்கு நன்றி

Edited by இலக்கியன்

  • தொடங்கியவர்

இலக்கியன் உங்கள் உணர்வுகளை வடித்த விதம் அழகு

எனது மனதை கவர்ந்த வரிகள்

"அன்புக்கு ஏங்கும்

இதயங்களாக நாம்"

இந்த வரிகளை வாசித்த போது இது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது

உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி இன்னிசை

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளத்தை தொடும்வரிகள் படைத்த இலக்கியாவுக்கு வாழ்த்துக்கள்

அன்னையவள் அன்பு

முத்தம் எங்கே?

அணைத்திடும் தந்தை

கைகள் எங்கே?

கண்ணீ ர் துடைத்திடும்

தங்கை எங்கே?

மிகவும் நல்ல கவிதை அதிலும் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

:rolleyes:

இலக்கியன் உங்கள் உணர்வுகளை வடித்த விதம் அழகு

எனது மனதை கவர்ந்த வரிகள்

"அன்புக்கு ஏங்கும்

இதயங்களாக நாம்"

இந்த வரிகளை வாசித்த போது இது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது

உண்மையாவோ

:P

  • தொடங்கியவர்

உள்ளத்தை தொடும்வரிகள் படைத்த இலக்கியாவுக்கு வாழ்த்துக்கள்

கருத்துக்கு நன்றி பிரியமானவளே

மிகவும் நல்ல கவிதை அதிலும் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

:lol:

உண்மையாவோ

:P

யமுனாவின் கருத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலிகள் சுமக்கும்வரிகள் இலக்கியா உங்கள் கவிதைகள் தொடரட்டும்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வலிகள் சுமக்கும்வரிகள் இலக்கியா உங்கள் கவிதைகள் தொடரட்டும்

கருத்திட்ட தமிழன்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இது நிஜம்! நிஜத்தைத் தமிழ்பூசி உலவ விட்டிருக்கிறீர்கள். நன்று மிக நன்று.

இலக்கியன் கவிதைக்குள் உலவ விட்டிருக்கிற கருத்து நல்லாய் இருக்கு .... நீங்கள் தவறாக எண்ணாவிட்டால் ஒரு சின்னக் கருத்து ....

//

காற்றோடு காற்றாக

பறந்து செல்லும்

வெற்றுக் காகிதங்கள்

நாங்கள் அல்ல

எழுதப்பட வேண்டிய

புதுக்கவிதைகள் நாம்

உறவுகளை இழந்து

உணர்வுகளைப் புதைத்து

முற்களின் பாதையில்

நடக்கின்ற சிட்டுக்

குருவிகள் நாம்

`அ` எழுத வேண்டிய

பிஞ்சுக்கைகள்

பழுத்து சிவப்பாக

புத்தகம் சுமக்கும்

வயதிலே...

சிலுவைகள்

சுமக்கின்றோம்

//

இது வரைக்கு ஒரு நடையில் கவிதை அழகாக வருகிறது.... ஆனால் ....

//

அன்னையவள் அன்பு

முத்தம் எங்கே?

அணைத்திடும் தந்தை

கைகள் எங்கே?

கண்ணீ ர் துடைத்திடும்

தங்கை எங்கே?

//

மேற்கண்ட பகுதி அந்த முன்பாதியில் வரும் கவி நடையை உடைப்பது போல எனக்குப் படுகிறது... ஒரே நடையிலேயே சொல்லியிருந்தால் வாசிக்கும் போது நன்றாக இருக்கும் என்பது என் கருத்து... மற்றும் படி நல்லா இருக்கு ... குறிப்பாக ...

//

உறவுகளை இழந்து

உணர்வுகளைப் புதைத்து

முற்களின் பாதையில்

நடக்கின்ற சிட்டுக்

குருவிகள் நாம்

//

பிடிச்சிருக்கு....

  • தொடங்கியவர்

இது நிஜம்! நிஜத்தைத் தமிழ்பூசி உலவ விட்டிருக்கிறீர்கள். நன்று மிக நன்று.

நன்றி உங்கள் கருத்துக்கு suvy

  • தொடங்கியவர்

இலக்கியன் கவிதைக்குள் உலவ விட்டிருக்கிற கருத்து நல்லாய் இருக்கு .... நீங்கள் தவறாக எண்ணாவிட்டால் ஒரு சின்னக் கருத்து ....

//

காற்றோடு காற்றாக

பறந்து செல்லும்

வெற்றுக் காகிதங்கள்

நாங்கள் அல்ல

எழுதப்பட வேண்டிய

புதுக்கவிதைகள் நாம்

உறவுகளை இழந்து

உணர்வுகளைப் புதைத்து

முற்களின் பாதையில்

நடக்கின்ற சிட்டுக்

குருவிகள் நாம்

`அ` எழுத வேண்டிய

பிஞ்சுக்கைகள்

பழுத்து சிவப்பாக

புத்தகம் சுமக்கும்

வயதிலே...

சிலுவைகள்

சுமக்கின்றோம்

//

இது வரைக்கு ஒரு நடையில் கவிதை அழகாக வருகிறது.... ஆனால் ....

//

அன்னையவள் அன்பு

முத்தம் எங்கே?

அணைத்திடும் தந்தை

கைகள் எங்கே?

கண்ணீ ர் துடைத்திடும்

தங்கை எங்கே?

//

மேற்கண்ட பகுதி அந்த முன்பாதியில் வரும் கவி நடையை உடைப்பது போல எனக்குப் படுகிறது... ஒரே நடையிலேயே சொல்லியிருந்தால் வாசிக்கும் போது நன்றாக இருக்கும் என்பது என் கருத்து... மற்றும் படி நல்லா இருக்கு ... குறிப்பாக ...

//

உறவுகளை இழந்து

உணர்வுகளைப் புதைத்து

முற்களின் பாதையில்

நடக்கின்ற சிட்டுக்

குருவிகள் நாம்

//

பிடிச்சிருக்கு....

உங்கள் கருத்தை வெளிப்படையாக தந்தமைக்கு நன்றிகள்.

இப்படியான கருத்துக்கள்தான் எமக்கு ஆக்கபூர்வமாக அமையும்.

உணர்வுகளைக்கூட்ட வேண்டும் என்பதற்காக அவ்வாறு இணைத்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.