Jump to content

‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு


Recommended Posts

‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு

norway-tami-3_2019-2-300x200.jpgநோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது.

உளவளத்துணை வளவாளர் ரக்சனா சிறீஸ்கந்தராஜா, அரங்க-தொலைக்காட்சி நடிகர் கோபி பிரபாகரன், ஊடகவியலாளர் றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் ஆகிய மூன்று வெவ்வேறு துறைசார்ந்து முன்னுதாரணமாக விளங்கும் இளையவர்கள் நோர்வே தமிழ்3 வானொலியினால் வழங்கப்படும் ‘தமிழர் மூவர்’ விருதுக்கான இந்த ஆண்டிற்கான முன்மாதிரி இளையவர்களாக தெரிவாகியுள்ளனர்.

ரக்சனா சிறீஸ்கந்தராஜா – உளவியல் வளவாளர்

கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் மூலம் தமிழச் சமூகத்தின் மத்தியில் உளநல, உளவளத்துணை பற்றிய விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் சமூக அக்கறையோடு ஈடுபட்டு வருபவர். தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உளநலம் பற்றிய சரியான பார்வை இல்லாததையும் அது ஒரு பேசாப்பொருளாக இருப்பதையும் மாற்றும் நோக்குடன் தொடர்ந்து பல கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தி வருபவர்.

தமிழர்களிற்கிடையே நிலவுகின்ற உளநலம்பற்றிய விளக்கக் குறைபாட்டைப் போக்குவதற்கான அக்கறையுடன் செயற்படுபவர்.

-தமிழ் மக்கள் மத்தியில் உளநலமென்பது ஒரு பேசாப் பொருளாகவே இருக்கிறது. மனநோய் பற்றிய விளக்கக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

கோபி பிரபாகரன்: அரங்க-திரை நடிகர்

ஒரு நடிகனாக வரவேண்டும் என்ற உத்வேகத்துடன் பல தடைகளையும் கடந்து சிரத்தையுடன் உழைத்தவர். முறையாக நடிப்புத் துறையினைப் பயின்ற இவர் நடிப்புத் துறையைச் சார்ந்த பலருடனும் தொடர்பைக் கொண்டிருக்கிறார். Norsk tipping எனப்படுகின்ற NRK – நோர்வேத் தேசியத் தொலைக்காட்சியின் வாராந்த தேசிய சீட்டிழுப்பு நிகழ்ச்சியில் ஒரு அறியப்பட்ட முகமாக இருந்துள்ளார்.  இப்போது பல நாடகத் தயாரிப்புக்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார் இந்த இளைஞர்.

எமது கதைகளைச் சொல்கின்ற திரைப்படத் துறையே இவரது அடுத்த இலக்கு என்கிறார்.

– எங்கள் முகங்களையும் எங்கள் கதைகளையும் வெளியில் கொண்டுவர எனக்கு விருப்பம். அதை நாங்கள்தான் செய்ய வேண்டும் என்று தனது உள்ளக் கிடக்கையைப் பகிர்ந்து கொண்டார்.

றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் – ஊடகவியலாளர், பத்தி எழுத்தாளர்

பத்து வயதிலே நோர்வேக்கு இடம்பெயர்ந்த இந்த இளைஞன். தாயகத்தில் இடம்பெற்ற போரும் அனர்த்தங்களும் போதிய அளவு நோர்வேப் பெரும் சமூகத்து ஊடகங்களில் வெளிவராதது இவரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது . தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் நாடுபற்றிய விடயங்களை பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் எழுதிவருபவர்.

ஊடகவியலை முறையே கற்று, NRK நோர்வேத் தேசியத் தொலைக்காட்சி நிறுவனத்தில் சில வருடங்கள் பணிபுரிந்த இவர் இப்போது வேறொரு பெரும் தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழ் இளையவர்களின் சமூக ஈடுபாடு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதில் கரிசனையாக உள்ளார்.

– விமர்சனபூர்வமான பார்வை வளர வேண்டும். அதற்கு உலகத்தில் என்ன நடக்குது என்பதை அறிய வேண்டும். கருத்துரிமையும் மாறுபட்ட சிந்தனைகளும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறும் றெஜினோல்ட் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இந்தப் போக்குகளில் பெரும் குறைபாடுகள நிலவுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

norway-tami-3_2019-1.jpgnorway-tami-3_2019-2.jpgnorway-tami-3_2019-3.jpgnorway-tami-3_2019-4.jpgnorway-tami-3_2019-5.jpgnorway-tami-3_2019-6.jpgnorway-tami-3_2019-7.jpg

நோர்வே-தமிழ் இளையவர்கள் மத்தியிலிருந்து துறைசார் ஆளுமையாளர்களாகவும், “Role Models” எனப்படும் முன்மாதிரியாகவும் கொள்ளக் கூடியவர்களை அடையாளப்படுத்தி மதிப்பளிக்கும் நிகழ்வு இது

ஒவ்வோராண்டும் நாடு முழுவதிலுமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டு, சுயாதீனமான தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இவ் விருதுக்கான தெரிவு இடம்பெற்று வருகின்றது.

கல்வி மற்றும் தொழிற்தெரிவில் சமூக வழமைக்கு மாறான முன்னுதாரணமாக துறைசார்ந்து சாதிப்பவர்களை அடையாளப்படுத்துவது விருது வழங்கலின் அடிப்படை நோக்கு. அவர்களை முன்னுதாரணமாக நிறுத்துவதன் மூலம் ஏனைய இளையவர்களுக்கு உந்துதலை வழங்குதும் இவ்விருதின் சமூக விளைவு சார்ந்த நோக்கமாகும்.

இம்முறை ஊடகவியலாளர் யோகான் சண்முகரட்ணம் தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டுக்கான முன்மாதிரி ஆளுமையாளர் மூவரைத் தெரிவுசெய்தனர்.

26.05.19 இடம்பெற்ற சங்கமம் நிகழ்வில் நடுவர்குழுவின்தலைவராகக் கடமையாற்றிய ஊடகவியலாளர் யோகான் சணமுகரட்ணம் மற்றும் மருத்துவத்துறை மாணவியும் நோர்வேயின் ஐ.நா மாணவர் மையத்தின் தலைவருமான ஹம்சிகா பிரேம்குமார் ஆகியோர் இந்த விருது வழங்கலை வைபவபூர்வமாக நெறிப்படுத்தினர்.

யோகான் சண்முகரட்ணம் நோர்வேயிய ஊடக எழுத்துத்துறையில் நீண்டகால அனுபவம் உடையவர். இங்குள்ள சமூகத்தாக்கம் மிக்க முக்கிய நாளிதழ்களில் ஒன்றான Klassekampen இல் 2003 இலிருந்து ஊடகவியலாளராகப் பணிபுரிகின்றார். சில ஆண்டுகள் அதன் வெளிநாட்டுப் பகுதிக்கான ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

ஹம்சிகா பிரேம்குமார், மருத்துவக் கல்வியையும், அரசறிவியல் மற்றும் மேம்பாட்டுக் கல்வியையும் ஒரே நேரத்தில் கற்றுவருவதோடு, சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்டவராக பல்வேறு சர்வதேச தன்னார்வ நிறுவனங்களிலும் இணைந்து பணி செய்து வருபவர். கடந்த ஆண்டின் தமிழர் மூவரில் ஒருவராக மதிப்பளிக்கப்பட்டவர்.

இம்முறை தெரிவு செய்யப்பட்ட தமிழர் மூவருக்கான விருதுகளை விருதுகள் முறையே தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த சமூக, அரசியல், அரங்கியல் செயற்பாட்டாளரும் முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான பத்மினி சிதம்பரநாதன், இசைத்துறை வல்லுனரும் நோர்வேயில் பல இளைய இசைக்கலைஞர்களை உருவாக்கியவருமான சுந்தர் கணேசமூர்த்தி (குட்டி மாஸ்ரர்), மற்றும் மருத்துவரும் ஆய்வாளருமான ரவீனா மனோதீபன் ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.

-ராஜன் செல்லையா – ரூபன் சிவராஜா

http://www.puthinappalakai.net/2019/05/29/news/38206

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.