Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வான் பலத்தை அழிக்க அரசு துரித நடவடிக்கையிலீடுபட வேண்டும்

Featured Replies

புலிகளின் வான் பலத்தை அழிக்க அரசு துரித நடவடிக்கையிலீடுபட வேண்டும்

அரசாங்கம் காலம் தாழ்த்தாது விடுதலைப்புலிகளின் விமான பலத்தை அழித்தொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென அறிவுரை வழங்கும் ஜாதிக ஹெல உறுமய இந்த நிலைக்கு புலிகள் வளரக் காரணமாக அமைந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தமது கட்சியை விட்டு வெளியேற வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஷ்ரீ வர்ணசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்;

புலிகளுக்கு விமான பலமிருந்த போதும் பலாலி இராணுவ முகாமின் முக்கியமான இடங்களை அழிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்ற போதும் இதனை நினைத்துக் கொண்டு அரசாங்கம் அமைதியாக இருக்கக் கூடாது.

உடனடியாக புலிகளின் வான் பலத்தை அழித்தொழிக்கும் தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு தேவையான நவீன ரக உபகரணங்களை உடனடியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இப் பிரச்சினை தொடர்பில் ஆழமாக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளுக்கு விமானம், அதற்கான உதிரிப்பாகங்கள் மற்றும் விமானிகளாக புலிகள் மலேஷியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்சிகளை பெறுவதற்குமான அனைத்து வசதிகளும் ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க-பிரபாகரனுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமே காரணமாக அமைந்தது.

அத்தோடு ஐ.தே.கட்சி ஆட்சியின்போது முக்கிய பதவி வகித்தவர்களும் இதற்கான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

எனவே, தேசிய பாதுகாப்பிற்கு எதிராக தேசத்துரோகத்தை மேற்கொண்டவர்கள் தாம் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்றும் நிஷாந்த ஷ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

தினக்குரல்

ஆசைக்கு கேக்கட்டும் மொட்டைகள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதை அழிக்கப்போய்

இருக்கிற கச்சயும் காணாமல் போகப்போகுது.

பார்த்துச்செய்யுங்கோ...

புலிகளை வளரவிட்ட ரணில் போக வேண்டும் என்றால் புலிகள் வளர காரனமான பேரினவாதிகளும் முன்னைய ஜனாதிபதிகள் கட்சி தலைவர்கள் எல்லோரும் அரசியலை விட்டு ஒதுங்கோனும் யார் விலகினாலும் யார் வந்தாலும் புலிகளின் வளர்சியை கட்டுபடுத்த முடியாது ஓம் பிக்குகளை விட்டால் பிச்சைபாத்திரர்த்தை எறிந்தாவது விமானத்தை விழுத்தீடுவீனம் கவனம்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மீது போர் தொடுக்க காரணம் கண்டு பிடிச்சிட்டினம்..! பாப்பம் என்ன நடக்கப் போகுதென்று..! :lol::lol:

இப்படி கோக்கரிக்கிறது இவங்களுக்கு என்ன புதுசோ

இப்படி கத்தியே வாழ்க்கையை ஓட்டட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவீர ரக ஆயுதங்களை கொள்வனவு செய்வது பிரச்சனையில்லை.. அவற்றை ஒழுங்கா பாவிப்பதற்கு இராணுவத்திற்கு துப்பிருக்கிறதா என்பதை முதலில் நினைத்துப் பார்க்கவேண்டும்

விமானப்படை இவ் வருடம் 90 தடவைகளுக்கு மேல் வன்னிப் பிரதேசத்தில் வாந்தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரு குண்டுகூட புலிகளின் வான் கலங்களிலேயோ ஓடுபாதையயிலேயோ விழுந்ததில்லை. இந்த லட்சணத்தில் புலிகளின் வான் பலத்தை எவ்வாறு ஒடுக்கப் போகிறார்கள் ?

என்ன நெடுக்ஸ் கொஞ்ச நாட்களாக ஆளைப்பார்க்க முடியவில்லை...........

  • தொடங்கியவர்

என்ன நெடுக்ஸ் கொஞ்ச நாட்களாக ஆளைப்பார்க்க முடியவில்லை...........

:D என்ன அவர் தினமும் வந்திட்டுத்தானே இருக்கிறார் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.