Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெரும் தவறை செய்துவிட்டது : ட்ரம்ப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெரும் தவறை செய்துவிட்டது : ட்ரம்ப்

 

ஆழில்லா அமெரிக்க உழவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்தியது கண்டனதுக்குரியது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trumb.jpg

ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே  பதற்றம் நிலை உருவாகியுள்ளது.

இச்சம்பத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

தங்கள் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரும் தவறு செய்துவிட்டது என சமூகவலைத்தளமான  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/58718

ஈரான் மீது உடனடி தாக்குதலிற்கு உத்தரவிட்ட டிரம்ப்-பின்னர் நடந்தது என்ன?

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான  அனுமதியை வழங்கிய பின்னர் நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தரவை வாபஸ்பெற்றுள்ளார்.

படையதிகாரிகளும்  இராஜதந்திர அதிகாரிகளும் தாக்குதலை எதிர்பார்த்திருந்தனர்,என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் ஈரானின் ராடார்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தும் சாதனங்களை தாக்குதவதற்கான  அனுமதியை டிரம்ப் வழங்கியிருந்தார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

 

எனினும் பின்னர் டிரம்ப் மனமாறியதற்கான காரணம் என்னவென தகவல்கள் வெளியாகவில்லை.

இதேNவைள இந்த தகவலிற்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

;அமெரிக்காவின்  ஆளில்லாத விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதை தொடர்ந்து இரு நாடுகளிற்கும் இடையிலான பதற்றநிலை பலமடங்காக அதிகரித்துள்ளது.

ஈரானின் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் வேவுவிமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.

ஆர்கியு 4- குளோபல்ஹவ்க் ரக ஆளில்லா விமானத்தையே சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்தவேளையே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் குறிப்பிட்டுள்ளது

தனது ஆளில்லா விமானமொன்று விழுத்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்கா எனினும் சர்வதேச வான்வெளியில் பயணித்துக்கொண்டிருந்தது என தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/58721

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான தாக்குதலை இறுதி நேரத்தில் ஏன் நிறுத்தினேன் ? டிரம்ப் விளக்கம்

அமெரிக்காவின் தாக்குதலால் 150ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்படலாம் என மதிப்பிடப்பட்டதாலேயே ஈரான் மீதான தாக்குதலை இறுதிநேரத்தில் நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் வியாழக்கிழமையிரவு தாக்குதலை மேற்கொள்வதற்கான முழுமையான தயார் நிலையிலிருந்தோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் தாக்குதலால் 150 பேர் வரை கொல்லப்படுவார்கள் என எனக்கு தெரிவிக்கப்பட்டதால் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னர் அதனை நிறுத்தினேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆளில்லாத விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்காக 150 பேரை கொல்வது  பொருத்தமான நடவடிக்கையில்லை என கருதியதாலேயே தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை மேற்கொள்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்னர் படையதிகாரிகளுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்  அவ்வேளை இந்த தாக்குதல் காரணமாக எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்பது குறித்து மாத்திரமே நான் அறியவிரும்பினேன் என டிரம்ப் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் என்னிடம் 150 பேர் வரை கொல்லப்படுவார்கள் என தெரிவித்தனர்  நான் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியமைக்காக 150 பேரை கொலை செய்வது அளவுக்கதிகமான நடவடிக்கை என கருதியதால் தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

trump_june21.jpg

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான  அனுமதியை வழங்கிய பின்னர் நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தரவை வாபஸ்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/58814

சுட்டு வீழ்த்தப்பட்ட 'ட்ரொனின்' விலை 110 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். 
ஈரான் நிலத்தில் இருந்து ஆகாயத்திற்கு ஏவப்படும் ஏவுகணையால் தாக்கி அழித்தது 
பல சர்வதேச விமானங்கள் இந்த பகுதியில் தமது விமானங்கள் பறப்பதை தவிர்க்க முடிவெடுத்துள்ளன.  

150 உயிர்கள் இழக்கப்பட்டு இருக்கலாம் என்று முதலை கண்ணீர் விடுபவர்கள் இல்லை அமெரிக்கர்கள், ஆனால், ஈரானின் பலமும் உலக பொருளாதாரமும் காரணிகள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, கிருபன் said:

அமெரிக்காவின் தாக்குதலால் 150ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்படலாம் என மதிப்பிடப்பட்டதாலேயே ஈரான் மீதான தாக்குதலை இறுதிநேரத்தில் நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

oh my god wow GIF

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

 

இரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் - அதிகரிக்கும் பதற்றம்

இரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது

இந்த தாக்குதல் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணிணி அமைப்புகள் மீது நடத்தப்பட்டன என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியது மற்றும் எண்ணெய் டாங்கர்களை தாக்கியது ஆகியவற்றிற்கு பதில் நடவடிக்கை என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இரானிய கணிணி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தன்னிச்சையாக உறுதி செய்ய முடியவில்லை.

அமெரிக்கா இரான் மீது தடைகளையும் விதித்திருந்தது.

அணுஆயுதங்களை இரான் பெறுவதை நிறுத்த இந்த தடைகள் தேவை எனவும், இரான் தனது நிலையை மாற்றிக் கொள்ளாதவரை பொருளாதார அழுத்தங்கள் தொடரும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/global-48738924

ஜெருசலத்தில் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், புதிய தடைகள் குறித்தான விவரங்கள் திங்களன்று அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து கடந்த வருடம் அமெரிக்கா வெளியேறிய பிறகு அமெரிக்கா மற்றும் இரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பதற்றத்தை அது மேலும் அதிகரித்தது.

கடந்த வாரம் சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட அளவைக் காட்டிலும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அதிக அளவில் சேமித்து வைக்கப்போவதாக இரான் தெரிவித்திருந்தது.

போரை தான் விரும்பவில்லை என்றும் ஆனால் போர் தொடுத்தால் இரான் ’அழிந்துவிடும்’ என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

என்ன சொன்னார் டிரம்ப்?

இந்த சைபர் தாக்குதல் குறித்து டிரம்ப் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

வெள்ளியன்று, இரான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்ததாகவும். தன்னுடைய அனுமதிக்காக காத்திருந்ததாகவும். ஆனால், இதில் எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று ராணுவ ஜெனரல்களிடம் கேட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

"ஒரு நிமிடம் இதை பற்றி யோசித்தேன். அவர்கள் ஓர் ஆளில்லாத விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள், ஆனால் இத்தாக்குதல் நடத்த நான் அனுமதி அளித்திருந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் 150 பேர் உயிரிழந்திருப்பார்கள்" என்று என்பிசியிடம் பேசிய டிரம்ப் கூறினார்.

இரானை தாக்க ஏற்கனவே அப்போது விமானங்கள் அனுப்பபட்டது என்ற செய்திகளையும் அவர் மறுத்தார்.

என்ன நடந்தது?

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக இரான் நாட்டு பத்திரிகை கூறியுள்ளது.

இரான் நாட்டை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் உளவு பார்க்கும் நோக்கில் பறந்ததாக இரானின் ஐ.நாவுக்கான தூதர் மஜித் தக் ரவஞ்சி தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தின் ஒரு அப்பட்டமான விதிமீறல் என்றும் மஜித் அமெரிக்காவை சாடியிருந்தார்.

https://www.bbc.com/tamil/global-48738924

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.