Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`தமிழ்நாடு என்ன அடிமை தேசமா?

Featured Replies

`தமிழ்நாடு என்ன அடிமை தேசமா?' - - அஞ்சல்துறை தேர்வில் தமிழ் ரத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தேர்தல் முடிந்து நாளை அஞ்சல்துறை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இரண்டு நாள் முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சல்துறை

அஞ்சல்துறை

இந்திய அஞ்சல்துறை தொடர்பாக போஸ்ட்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாது என்று நேற்று முன்தினம் மத்திய அரசு தபால்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அஞ்சல்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான முதல்தாளுக்கான தேர்வு இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்த வேண்டும். இரண்டாம் தாளுக்கான தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அஞ்சல்துறை
 
அஞ்சல்துறை

முன்னதாக மக்களவை தேர்தலுக்கு முன்பு கடந்த மே மாதம் இதே பணியிடங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டபோது, தமிழ் மொழியில் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தேர்தல் முடிந்துள்ளநிலையில், நாளை அஞ்சல்துறை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இரண்டு நாள் முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஓரவஞ்சகத்தின் வெளிப்பாடு - ஸ்டாலின்!

தி.மு.க தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள கண்டனத்தில், ``மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தபால்துறை தேர்வுகள் இதுவரை மாநில மொழிகளில் நடந்துவந்த நிலையில், இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என திடீரென அறிவித்துள்ளது. மத்திய அரசுப் பணிகளில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ளவர்கள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்று சதி எண்ணத்துடன் திட்டமிட்டு இதைச் செயல்படுத்தியுள்ளது. மாநில மொழிகளை அலட்சியம் செய்யும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழக மின்வாரியத்தில் வட மாநிலத்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அதிமுக அரசைக் கட்டாயப்படுத்தி விதிகளை மாற்ற வைத்த பா.ஜ.க இப்போது மத்திய அரசுத் துறைகளில் தமிழக இளைஞர்களுக்கு மொழி உரிமையின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பையும் தட்டிப்பறிப்பது ஓரவஞ்சகத்தின் ஒட்டு மொத்த வெளிப்பாடு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழக மாணவர்களுக்கு எதிரானது - ராமதாஸ்!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும். இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்?" எனக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

 

மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் - திருமாவளவன்!

திருமாவளவன்,``இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை மானியக் கோரிக்கைமீது பேசும்போது ரயில்வே துறை வேலைகளில் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தினோம். இப்போது அஞ்சல்துறையில் இந்த அநீதி இழைக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டும். இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அடிமை தேசமா? - வேல்முருகன்!

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ``மோடி அரசு திணிக்கும் சட்டங்கள், திட்டங்கள், நடைமுறைகள் எல்லாம் தமிழகத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குபவை. அதனால் தொடர்ந்து நாம் எதிர்த்துவருகிறோம். ஆனால் அந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வேண்டுமென்றே வலிந்து மேலும் தன் சதிச்செயலைத் தொடர்கிறார் மோடி. தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்ற அடையாளத்தையே இல்லாமல் செய்வதுதான் மோடியின் நோக்கம் என்பது தெரிந்துதான் அவரிடம் கேள்வி எழுப்புகிறோம். தமிழ்நாடு என்ன பாஜக மோடி படையெடுத்து வென்று கைப்பற்றிக் கொண்ட அடிமை தேசமா? அஞ்சல் துறைப் பணித் தேர்விலிருந்து தமிழை நீக்குவதென்பது இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழகத்தை நீக்குவதற்கே சமம்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/government-and-politics/politics/tn-political-leaders-condemns-centres-announcement-over-postal-exams?fbclid=IwAR3Aeo4w9TWp9Q_qSWcCKeDXzBOE7QbqgQ5YgwQRk7L7TRqCgDH96AGuixA

  • தொடங்கியவர்

தபால் துறை பணி: தேர்வு நடத்துங்கள்; முடிவுகளை வெளியிடாதீர்கள்

- சென்னை உயர்நீதிமன்றம்

தபால்துறை வேலைகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தாமல், இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தபால் துறையில் அஞ்சலர் உள்பட நான்கு வகையான பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெறுகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூலை 11ஆம் தேதி தபால் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதமுடியும் என்ற விதிமுறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வழக்கு

மதுரையில் இயங்கும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர், தபால்துறை தேர்வில் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் மகாதேவன் ஆகியோர் சனிக்கிழமை இரவு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தனர்.

தேர்வை நடத்த தடையில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், மாநில மொழி அல்லாமல் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும் என்ற புதிய விதிமுறைக்கான காரணம் என்ன என்று மத்திய அரசு விளக்கம் கொடுக்கவேண்டும் எனக் கூறி ஜூலை 19ம்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளது.

வழக்கில் ஆஜரான சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தேர்வை உடனடியாக நிறுத்த முடியாததால், தேர்வு முடிவுகள் வெளியாவதை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது என்பது மகிழ்ச்சி என்றார். ''தமிழகத்தில், தாய்மொழியில் தேர்வு எழுத முடியாதது என்பது அநீதி. உயர்நீதிமன்றம் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது எனக் கூறியுள்ளது. இந்தத் தேர்வில், மாநில மொழியை விட ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி ஏன் அவசியம் என மத்திய அரசு விளக்கவேண்டும்,'' என்றார்.

https://www.bbc.com/tamil/india-48978859

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தபால்துறை தேர்வு முடிவை வெளியிடத் தடை

July 14, 2019

postal-exam.jpg?resize=750%2C543தபால்துறை வேலைகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தாமல், இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தபால் துறையில் அஞ்சலர் உள்பட நான்கு வகையான பணியிடங்களுக்கான தேர்வு இந்தியா முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தநிலையில் கடந்த ஜூலை 11ஆம் திகதி மத்திய தபால் துறை வெளியிட்ட அறிவிப்பில் தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதமுடியும் என்ற விதிமுறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்தநிலையில் மதுரையில் இயங்கும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்த புதிய விதிமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு தேர்வு முடிவை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

அத்துடன் மாநில மொழி அல்லாமல் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும் என்ற புதிய விதிமுறைக்கான காரணம் என்ன என மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமம் எனவும் தெரிவித்து வழக்கினை ஜூலை 19ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்  #தமிழகத்தில்  #தபால்துறை தேர்வு #முடிவை #வெளியிடத் தடை

 

http://globaltamilnews.net/2019/126519/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.