Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் பதவிக்கு ஏங்கும் ஜெயலலிதா

Featured Replies

பிரதமர் பதவிக்கு ஏங்கும் ஜெயலலிதா; மூன்றாவது அணிக்கனவு நனவாகுமா?

தமிழக முதல்வர் கதிரையில் அனாயாசமாக உட்கார்ந்த ஜெயலலிதா, அத்துடன் திருப்தி அடையத் தயாரில்லை. நெடுகாலமாகவே அவர் மனதிலுள்ள கனவு நாட்டின் பிரதமராவது என்பதாகும்.

அவரது முக்கிய குணாம்சங்களில் ஒன்றான பழி தீர்க்கும் பழக்கத்துடன் தொடர்புடையதே அவரது பிரதமர் கனவும். அதாவது மாநில மட்டத்தில் தன்னை சிறை அனுப்பிய கருணாநிதியை பழி தீர்க்க நள்ளிரவில் அவரை கைது செய்து நடுத்தெருவில் இழுத்துச் சென்றார். அவ்வாறே தேசிய அளவில் தன்னை எடுத்தெறியும் பி.ஜே.பி. யையும் காங்கிரஸையும் பழி தீர்க்க இந்த இரு தரப்பையும் சாராத மூன்றாவது அணியை உருவாக்கி அதன் மூலம் பிரதமராக நெடுநாட்களாக கனவு காண்கிறார்.

தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் நிரந்தர பகையாளிகள், அவர்களால் ஒரு காலத்திலும் இணைய முடியாது என நம்பினார் ஜெயலலிதா. குறிப்பாக ராஜீவ் கொலையில் தி.மு.க. குற்றவாளி என முன்பு கருதப்பட்டதால் சோனியா காந்தியின் காங்கிரஸுடன் தி.மு.க. கை கோர்ப்பது கடினமென கருதப்பட்டது. ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதாவின் இந்த எண்ணத்தில் மண் விழுந்தது.

காங்கிரஸுக்கு அ.தி.மு.க. வைவிட்டால் வேறுகதி கிடையாது என இறுமாந்திருந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு தி.மு.க.- காங்கிரஸ் நட்பு பெரும் இழப்பாயிற்று. லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தலில் அடுத்தடுத்து தி.மு.க.- காங்கிரஸ் அணி வெற்றிக் கொடி நாட்டியது. ராஜீவ் கொலையாளிகளுடன் சோனியா சேர்வதாக ஜெயலலிதா வசை பாடியதும் எடுபடவில்லை. தனிப்பட்ட விதமாக சோனியா மீது தாக்கிய ஜெயலலிதாவை சோனியா காந்தி மறந்துவிடவில்லை. காங்கிரஸை கவர ஜெயலலிதா விடுத்த சமிக்ஞைகள் காங்கிரஸ் தலைமையினால் உதாசீனப்படுத்தப்பட்டன.

சமீபத்தில் பாராளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தியை ஜெயலலிதா அழைத்தும் அவர் வரவில்லை. பழைய கோபதாபம் சோனியாவால் மறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்திருக்கும் ஜெயலலிதா என்ன விலை கொடுத்தாவது காங்கிரஸ் ஆட்சியை அகற்றியே தீருவேன் என சபதமிட்டுள்ளார். ஆனால், இதற்காக பி.ஜே.பி. யுடன் இணைய அவர் தயாரில்லை. காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்தபோது பி.ஜே.பி. காட்டிய எதிர்ப்புத்தான் அதற்கு காரணம். அது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் வாஜ்பாய் கருணாநிதியை மதித்த அளவு ஜெயலலிதாவை மதிக்கவில்லை. பி.ஜே.பி. யுடன் சேராமல் தேசிய அரசியலில் ஒரு சக்தியாக பரிணமிக்க முடியும் என்பது ஜெயலலிதாவின் நம்பிக்கை. அதற்காக அவர் தீட்டும் திட்டமே மூன்றாவது அணி.

ஆந்திர முன்னாள் முதல்வர் நாயுடு, ஹரியானா முன்னாள் முதல்வர் சௌத்தாலா, அஸாமில் ஏ.ஜி.பி. என்ற பிராந்திய கட்சி, உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் முலாயம் சிங் ஆகிய சக்திகளை ஒன்றிணைக்க ஜெயலலிதா முயல்வதாகத் தெரிகிறது.

கலைஞர் கருணாநிதி திராவிட இயக்கத்தின் கால்கோள்களில் ஒருவராவார். எனவே, தமிழுக்கு முதன்மை ஸ்தானத்தை வெல்வதில் முனைப்பு காட்டுவது இயற்கை. இந்த ஆட்சியில் தான் தி.மு.க. வின் அழுத்தத்தால் மத்திய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது. திராவிட இயக்கமே இந்தி எதிர்ப்பில் வளர்ந்த ஒன்று. அப்படிப்பட்ட திராவிட பாரம்பரிய கட்சியான அ.தி.மு.க. தலைவர் சமீபத்தில் உத்தரப் பிரதேச தேர்தல் மேடைகளில் சாட்சாத் அதே ஹிந்தியில் உரையாற்றியது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. ஜெயலலிதா ஆங்கிலத்தில் அற்புதமாக உரையாற்றக் கூடிய `கொன்வென்ட்' படிப்பாளி என்பது தெரிந்த விடயம். ஆங்கிலத்தையும் தாண்டி ஹிந்தியில் பேச இறங்குகின்றார் என்பது புது விடயம்.

இங்கு ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். கலைஞர் திராவிட பாரம்பரியத்தை போற்றி தமிழுடனும் தமிழ்நாட்டுடனும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள ஜெயலலிதா இந்திய தேசியம் என்ற போர்வைக்குள் தன்னைப் புகுத்தும் முயற்சியில் விடாது தொடர்ந்து வருகிறார். கலைஞரும் தேசிய அரசியலில் ஈடுபடாதவர் அல்ல, வி.பி. சிங் பிரதமராகுவதற்கு பிள்ளையார் சுழியிட்ட தேசிய முன்னணியின் கலைஞர் வகித்த பாத்திரம் முக்கியமானது. ஆனால், வடநாட்டு தேர்தல் மேடைகளில் அதுவும் ஹிந்தியிலேயே முழங்கித் தீர்க்குமளவுக்கு கலைஞர் துணியவில்லை. காரணம் பிரதமர் பதவி மீது ஒருபோதும் கலைஞர் கண் வைத்தவரல்ல. பிரதமர் பதவி மோகம் மட்டுமன்றி, தன்னை எடுத்தெறிந்தவர்களை பழி தீர்ப்பதும் கூட ஜெயலலிதாவின் சமீப காய் நகர்த்தல்களின் நோக்கமாகும். நடிகையாக வாழ்வை தொடங்கியபோது பல வகையிலும் ஆண்களால் இம்சைப்பட்ட ஜெயலலிதா தான் முதல்வரான பிறகு தனது அமைச்சரவையின் ஆண் அமைச்சர்களை தனது காலில் சாஷ்டாங்கமாக விழ வைத்து திருப்திப்பட்டுக் கொண்டார். அத்தகைய உளவியல் அவருடையது. தேசிய அரசியலில் தன்னை அலட்சியப்படுத்திய வாஜ்பாய்க்கும் சோனியாவுக்கும் ஒரு பாடம் புகட்டுவதே அவர் நோக்கமாகும்.

பெருத்த ஆரவாரத்துடன் இவ்வாறு தொடங்கப்படும் 3 ஆவது அணி சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராத கதையாகவே முடிய வாய்ப்புண்டு. காரணம் எந்த இரு சக்திகளுக்கு மாற்றாக 3 ஆவது அணி அமைக்கப்படுகிறதோ அவ்விரு சக்திகளும் லோக்சபாவில் கணிசமான எம்.பி.க்களை கொண்டிருப்பதே. 542 எம்.பி.க்களில் காங்கிரஸுக்கு 147 பேரும் பி.ஜே.பி. க்கு 130 பேரும் உள்ளனர். ஆக, 3 ஆவது அணிக்கு உச்சபட்சம் 265 எம்.பி.க்களின் ஆதரவு தான் கிடைக்கும். ஆனால், இந்த 265 இல் காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கட்சிகளான லல்லு பிரசாத் யாதவின் கட்சிக்கு 22 பேரும் தி.மு.க. வுக்கு 17 பேரும் உள்ளனர். இதுதவிர, மூன்றாவது அணியில் மூலைக்குத் தலைக்கல்லாக உள்ள முலாயமின் எதிரியான மாயாவதிக்கு 25 எம்.பி.க்கள் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் 63 இடங்களை கொண்டுள்ளன. ஆக, 3 ஆவது அணி மொத்தம் 100 எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே திரட்ட முடியும். சமீபத்தில் ஜெயலலிதா உத்தரப் பிரதேசத்தில் உரையாற்றிய கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய எம்.பி.க்களே உள்ளனர். ஆந்திராவில் நாயுடுவுக்கு 5 பேர், ஏ.ஜி.பி. கட்சிக்கு ஒருவர் என இருக்கையில், ஜெயலலிதாவுக்கு லோக்சபாவில் ஒரு எம்.பி. தானும் கிடையாது என்பது தான் வேடிக்கை. இத்தகைய ஜெயலலிதாவால் வெறும் விளம்பரத்தையும் வசீகரிப்பையும் தர முடியுமேயன்றி மாற்று அரசு அமைக்கத் தேவையான எண்ணிக்கை எம்.பி.க்களைத் தரவே முடியாது. முலாயம் சிங் யாதவுக்கு 36 எம்.பி.க்கள் உள்ளனர். அதனால் தான் அவரை சுற்றி கூட்டம் மொய்க்கிறது.

மூன்றாவது அணி தனித்து ஆள முடியாவிட்டாலும் பி.ஜே.பி. ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். காங்கிரஸை அகற்றுவதற்காக பி.ஜே.பி. யும் 3 ஆவது அணிக்கு ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால், பி.ஜே.பி. யும் மூன்றாவது அணியும் சேர்ந்தாலும் 272 என்ற பெரும்பான்மையை எட்ட 30- 40 எம்.பி.க்கள் தேவைப்படும். கம்யூனிஸ்ட் கட்சிகளோ தி.மு.க.- லல்லு பிரசாத் கூட்டணியோ காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முன்வந்தால் தான் காரியம் ஈடேறும். கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச்சார்பற்ற நேர்மையாளர்கள். அவர்கள் பி.ஜே.பி. ஆதரவைப் பெற்ற ஒரு அரசை ஆதரிக்க முன்வரமாட்டார்கள். லல்லு பிரசாத் பி.ஜே.பி. யின் பரமவைரி. அவரும் பி.ஜே.பி. யுடன் சேர அரசில் இருக்க முடியாது. தி.மு.க. வோ கூட்டாளியான பா.ம.க. வுடனான மோதலால் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் தயவில் தங்கியுள்ளது. எனவே மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசை விட்டு தானாக ஒருபோதும் வெளியேற முடியாதபடி பொறிக்குள் அகப்பட்ட நிலை இருக்கிறது. மொத்தத்தில் 3 ஆவது அணி உண்டாகலாம். ஆனால், அது மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதே யதார்த்தம். இங்கு 3 ஆவது அணியில் சேர்வதற்கு சரத்பவார் தயார் என்று கருதினாலும் கூட பெரும்பான்மை போதாது. சரத்பவாருக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். சரத்பவார் பிரதமராவதற்கு அவரது பரமவைரியான சிவசேனா தலைவர் பால்தக்கரே கூட ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் 3 ஆவது அணியின் பிரதமர் முலாயம் சிங்கோ அல்லது சரத்பவாராகவோ தான் இருக்க முடியும். ஜெயலலிதா கனவு காண்பது போல் 3 ஆவது அணியின் பிரதமராக வேண்டுமானால் அவர் கையில் கணிசமான எம்.பி.க்கள் இருக்க வேண்டும். இல்லாவிடின் பிரதமர் கதிரை பகற்கனவு தான்.

அரசியல் கணக்கு வழக்கில் காங்கிரஸின் அரசு விழ வாய்ப்பில்லை. என்றாலும், கொள்கையை உதறிவிட்டு கூட்டணி சேர்வது இந்திய தேசத்தில் சர்வசாதாரணம் .

தினக்குரல்

கன்னடக்காரிக்கு தமிழருக்கு எந்த நலனிலும் ஆசையில்லை இவரின் ஆட்சி தமிழகத்தவருக்குநட்டமே அன்றி இலாபம் இல்லை இவரின் ஆட்சியை விட கலிஞரின் ஆட்சி சிறந்தது என்பது என் கணிப்பு தமிழக உறவுகள் இதை பற்றி என்ன நினைகின்றீர்கள்

84 வயதில் எனக்கு இது தேவையா? கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை

ஏப்ரல் 29, 2007

சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கருணாநிதி பேசுகையில், தோழை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்று கூறியுள்ளார். என்னெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது முதல்வரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

முதல்வர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

thatstamil one India

இவர் பயங்கர நடிப்பு தன்ரை குடும்பத்தையும் சொத்துக்களையும் பதவிகளையும் காக்க.

அப்படி அவமானமாக இருந்தால் முதல்வர் பதவியை விட்டு ஒதுங்கி நல்ல தமிழ் சேவைகளை செய்ய வேண்டுயது தானே .

பெண்கள் போல் நடித்து கண் கலங்குவது ஆண்தமிழ் மகனுக்கே இழுக்கு............

வாழ்க கலைஞரின் தந்திரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலகட்டில் களுக்கு வாழைஇலையாய் இருந்த ஜே,

தமிழ்நாட்டின் சிங்காசனத்துக்குள் நுளைந்த போதே

காலம் கட்டிக்காத்த தமிழ்நாட்டின் மானம் மூக்குடைந்து போனது.

மீண்டும் அதற்க்கு வரலாறு கொடுத்தால்,

அது ஜனனாயகத்தின் பெருமைக்குக் கிடைத்த மிகக் கேவலமான பரிசு என்று ஆகிவிடப் போகிறது.

இவர் பயங்கர நடிப்பு தன்ரை குடும்பத்தையும் சொத்துக்களையும் பதவிகளையும் காக்க.

அப்படி அவமானமாக இருந்தால் முதல்வர் பதவியை விட்டு ஒதுங்கி நல்ல தமிழ் சேவைகளை செய்ய வேண்டுயது தானே .

பெண்கள் போல் நடித்து கண் கலங்குவது ஆண்தமிழ் மகனுக்கே இழுக்கு............

வாழ்க கலைஞரின் தந்திரம்

உண்மை நேசன்.. ஜெய(லைலா)வும் இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சொத்துச் சேர்ப்பதுதான் இவர்கள் நோக்கம்.. தமிழ் நாடு மக்கள் எக்கேடு கெட்டால் என்ன.. இவர் பேசியதை கவனியுங்கள்.. நான் காமராஜரை பேசாத பேச்சா..பக்தவத்சலத்தை பேசாத பேச்சா பிறகு அவர்கள் என்னிடம் அன்பு காட்டவில்லையா என்று சொல்லியிருக்கிறார். நாளைக்கு தேவை வந்தால் ஜெயலைலா என்னை பேசாத பேச்சா என்றும் அறிக்கை விடுவார்.

:angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.