Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் அமைச்சர் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் அமைச்சர் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை"

 

மகசீன் சிறைச்சாலையில்  உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும்  மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகினறது.

prison.jpg

முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் எனபரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

குறித்த இரு வழக்குகளிலும் இவரே தனக்காக வாதாடியிருந்தார். தனது வழக்கில் சாட்சியங்களையும்,  ஆதாரங்களையும் முன்வைப்பதற்காக தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பில்  அவர் தனது கோரிக்களை  எழுத்து மூலம் அதிகாரிகளுக்கு அறிவித்தும் அதற்கான பதில்கள் இதுவரை கிடைக்காத நிலையில் தான் நீதி அமைச்சுக்கு அனுப்பிய கடிதங்கள் சிறை அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டதா  என்பது தொடர்பிலும் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கும் கைதியின் உடல் நிலை மிகவும் மோசடைந்துள்ளது.

இதுவரை அவரை  வைத்தியர் மட்டுமே சென்று பார்வையிட்டுள்ளார். அதிகாரிகளோ , அரசியல்வாதிகளோ சென்று பார்வையிடவில்லை. எனவே அவர் சார்பில் மகசீன் சிறையில் உள்ள ஏனைய அரசியல் கைதிகள் அமைச்சர் மனோ கணேசனிடம்  தங்களது விடயத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/60819

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்கிறது தமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம்

(ஆர்.விதுஷா)

கொழும்பு - மெகசின் சிறைச்சாலையில் தடுத்து  வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதியொருவரின் உண்ணாவிரதப் போராட்டம்  நாளை செவ்வாய்க்கிழமை 9 ஆவது நாளாகவும் தொடரவுள்ளது.

நெல்லியடியை சேர்ந்த திரைப்பட கூட்டுத்தாபனத்தின்முன்னாள்  பணிப்பாரரான  கணகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய தமிழ்  அரசியல் கைதியே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில்   ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக அவரது உடல் நிலை வெகுவாக  பாதிக்கபட்டுள்ளது. இருப்பினும் தனது கோரிக்கைக்கு உடன் தீர்வை  பெற்றுத்தரக்கோரி  தொடர்ந்தும்  உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளார். 

தனக்கான வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகள்இன்றி  தாமே வாதிடுவதாகவும் அதனால் போதுமான சாட்சியத்தை திரட்ட  முடியாது போவதால் தனக்கு பிணை வழங்கக்கோரியே  இவ்வாறு  உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கோட்டை ரயில் நிலையில் குண்டுவெடிப்பு  சம்பவத்துடன்  தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/60976

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவு

J.A. George / 2019 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:09 

image_9386078c0c.jpg

 

மெகசின் சிறைச்சாலையில் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து, அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் கடந்த சில தினங்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் சாகும்வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவிந்தன் கோடிஸ்வரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.ஜனகன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் விஷ்ணுகாந்தன் ஆகியோரும் அங்கு சென்று அவரை சந்தித்தனர்.

 

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தேவதாசனின்-உண்ணாவிரதம்-நிறைவு/150-235737

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.