Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி?

Featured Replies

வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை.

தண்ணீரை ஃபில்டர் செய்யக் கூடாது, கேன் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது, பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைக் குடிக்கக் கூடாது... வேறு எப்படித்தான் சுத்தமான தண்ணீரைப் பெறுவது என்று உங்களுக்குத் தோன்றலாம்.

சாதாரணமாகக் குழாய்களில் வரும் நீரைப் பிடித்து, கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். அதுவே போதும். இன்னும் சில பகுதிகளில் குழாய்த் தண்ணீரை நேரடியாகவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மாசடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதைக் கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக் கூடும். இதற்காக பெரும்பாலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அப்படியென்றால் எங்கள் ஊரில் தண்ணீர் கெட்டுப்போயிருக்கிறது, இதற்காகத் தண்ணீரை அப்படியேவா குடிக்க முடியும் என்று நினைப்பது புரிகிறது. ஆனால், மாசடைந்த நீரைச் சுத்திகரிக்க சில இயற்கை முறைகளும் இருக்கின்றன.

வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை. இன்றையச் சூழலில் நோய்களிலிருந்து தப்பிக்க தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டியது மிக அவசியம். வெந்நீரைக் குடித்தாலே செரிமானத் தொந்தரவுகள், உடல் வலி போன்றவை நீங்கி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.

 

மண்பானை சுத்திகரிப்பு!

எப்போதும் குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு சேர்த்து, நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு. மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும். அதன் பின்னர் நமக்கு தூய நீரானது கிடைக்கிறது. மண்பானை இயற்கையின் ஆகச்சிறந்த வாட்டர் ஃபில்டர். 40,000 செலவு செய்து வாட்டர் ஃபில்டர் வாங்க நினைப்போர், 100 ரூபாய் செலவு செய்து வீட்டில் ஒரு மண்பானையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.

மண்பானை
 
மண்பானை

 

செம்புக் குடங்கள் மூலம் சுத்திகரிப்பு!

செம்புக் குடத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் தண்ணீரை ஊற்றி வைப்பது மூலமாகத் தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி, நுண்கிருமிகளை அழித்து தண்ணீரை சுத்தப்படுத்தலாம். மண்பானையில் செப்புக் காசுகளைப் போட்டு வைப்பதன் மூலமாகவும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம். நீரைக் கொதிக்கவைத்த பின்னர் நெல்லிக்கனிகளையும், சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து, ஊறவைத்துப் பருகலாம். தண்ணீரைக் காய்ச்சும்போதே சீரகத்தைப் போட்டும் கொதிக்க வைக்கலாம். நெல்லி ஊறிய நீர், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண்சத்துகள் தண்ணீரின் நோய் போக்கும் தன்மையை அதிகரிக்கும்.

 

தேற்றான் கொட்டை!

தேற்றான் கொட்டைகளை நீரில் போட்டுவைக்கலாம். தேற்றான் கொட்டை ஊறிய நீர், மாசுகள் அகன்று தூய நீராக மாறும். சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய தண்ணீரிலோ, குடிக்கும் தண்ணீரிலோ தேற்றான் கொட்டையைப் பொடியாக்கிப் போடலாம். தண்ணீரில் இருக்கக்கூடிய நுண்கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைத்துவிடும். கேன்வாட்டரிலும் தேற்றான் கொட்டையை பயன்படுத்தலாம். நீர்த்தேக்க தொட்டியிலும்கூட, உடைத்த தேற்றான் கொட்டையை மெல்லிய துணியில் முடிந்துபோடலாம்.

வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும், நீருக்குச் சுவையும் கூடும்.

 

சாய மரப் பட்டைகள்!

கருங்காலி வேர்ப்பட்டை, பதிமுகம் எனப்படும் சாய மரப் பட்டைகள் போன்றவற்றைத் தண்ணீரில், கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். கேரள மாநிலத்தில், பல இடங்களில் குடிநீர் இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்படுவதைப் பார்த்திருக்கலாம். அதற்குக் காரணம் பதிமுகம்தான். பதிமுகத்துக்கு தோல் நோய்களைப் போக்கும் தன்மையும், கிருமிகளை அழிக்கும் குணமும் இருக்கின்றன.

வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும், நீருக்குச் சுவையும் கூடும்.

இப்படி இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்குப் பல உத்திகள் இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு, நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு அதிக பண முதலீடு செய்து கருவிகளை வாங்க வேண்டும்? இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் ஆரோக்கியமாக!
 
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி அம்பனை. இந்த மண்பானையில் தண்ணீரை வைத்திருந்தால் அது மாசுக்களை உறிஞ்சி விடும் என்பது உண்மையா? மண்பானை அல்லது சூடாக்கிய களிமண்ணினூடாக (ceramic) தண்ணீரை வடிகட்டியெடுத்தால் அது நுண்ணுயிர்களை அகற்றும் என்பது உண்மை. சும்மா வைத்திருந்தால் உறிஞ்சிக் கொள்ளும் என்பது சந்தேகமாக உள்ளது.

  • தொடங்கியவர்
On 7/24/2019 at 10:13 AM, Justin said:

தகவலுக்கு நன்றி அம்பனை. இந்த மண்பானையில் தண்ணீரை வைத்திருந்தால் அது மாசுக்களை உறிஞ்சி விடும் என்பது உண்மையா? மண்பானை அல்லது சூடாக்கிய களிமண்ணினூடாக (ceramic) தண்ணீரை வடிகட்டியெடுத்தால் அது நுண்ணுயிர்களை அகற்றும் என்பது உண்மை. சும்மா வைத்திருந்தால் உறிஞ்சிக் கொள்ளும் என்பது சந்தேகமாக உள்ளது.

இந்த மண்பானையில் தண்ணீரை வைத்திருந்தால் அது மாசுக்களை உறிஞ்சி விடும் என்பது உண்மையா? என்பதற்கு பதில் இல்லை. ஆனால், இவ்வாறூ தாயகத்தில் கூட மக்கள் பாவிக்கிறார்கள். 

ஒரு பரிசோதனை செய்து பார்த்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும். 
அத்துடன், உப்பு நீரையும் வடிகட்டும் ஆற்றல் எவ்வளவு தூரம் மண் பானைகளுக்கு இருக்கும் என பார்க்கலாம். கிராபைன் (Graphine) என்பது உலகின் இந்த தேவைக்காக பரிசோதனை செய்யப்படுகின்றது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.