Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத்தியாரின் பெருமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வாத்தியாரின் பெருமை 

கன காலத்தின் பின் 
என் பழைய நண்பன் 
வாத்தியாரை வழியில் கண்டேன் 
என்ன செய்கிறார்கள் 
பிள்ளைகள் என்றேன் 
கொச்சம் கூனை 
நிமிர்த்தியபடி சொன்னார் 
மூத்த மகள் டொக்டராம் 
இரண்டாவது மகள் 
இம்முறை டொக்டர் படிப்புக்கு 
பல்கலைக்கழகம் தெரிவாம் 
கடைசிப் பையனை பற்ரி  
கதைக்கவே இல்லை 
என்ன செய்கிறார் 
கடைசி பையன் என்றேன் 
ஓ அவனா 
சரித்திரம் சமூகக்கல்வி 
என்று  ஏதோ படிக்கிறான் 
கவிதை கத்தரிக்காய் என்று 
அது வேற அவருக்கு 
சோறு போடுமாம் 
என்ன பிரயோசனம் என்று 
எனக்கு விளங்கவில்லை என்றார் 
அப்போ இருந்த வாத்தியாராய் 
இப்போ இவர் இல்லை என்று 
எனக்குள்ளே  முழுமுணுத்தபடி 
மெல்ல நகர்ந்தேன் .


புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது .
இம்முறையும் உயர் கல்வி கற்க பெரும் தொகை தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம்  தெரிவு ஆகி இருப்பது எம் எல்லோருக்கும் பொருமை அநேகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வரவேண்டும் என்றே நினைக்கின்றனர் நல்லது தான் இருந்த போதும் சமூகம் ,சட்டம் ,அரசியல் ,மானுடவியல்,சர்வதேசஅரசியல் ,தத்துவம் ,உளவியல் போன்ற கற்கை நெறிகளையும் கற்க வேண்டும் .அப்போது தான் நாம் முழுமையான முன்னேற்ரம் கொண்ட ஓர் அறிவுசார் சமுதாயமாக [Intellectual] மாறி எல்லா அரசு சார் அல்லது தனியார் நிறுவனங்கள்  திணைக்களகள் போன்ற ஐ .நா .மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளில் ஆலோசகர்களாக அதி உயர் பதவி வகிப்பவர்களாக  வரவேண்டும் .அப்போது தான் முழுமையானா சமுதாயமாக தமிழர் சமூகம் வளர்ச்சி காணும் .
தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதார விடுதலைக்கும் வாழ்வுக்கும் இது வழி வகுக்கும் .மொழி அறிவோடு வாசிப்பு திறன் கொண்ட அறிவு சார் சமூகமாக எம்மை வளர்த்து எடுத்து சரவதேச சமுதாயதுக்கு எம்மை அடையாளப்படுத்த வேண்டும் .தனியவே பணம் சம்பாதிப்பதை மட்டும் இலக்காககொள்ளாமல் தமிழர் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் எமது விடுதலையின் சரியான பாதை பற்றியும் எமது இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும் .எமது தலை முறையின் பயணங்கள் செய்ய முடியாமல்  போனவைகளை எமது இளைய சமுதாயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை தான் எம் எல்லோரதும் எதிர் பார்ப்பாகும் .


பா .உதயகுமார் .

 

On 7/22/2019 at 11:27 AM, uthayakumar said:

நல்லது தான் இருந்த போதும் சமூகம் ,சட்டம் ,அரசியல் ,மானுடவியல்,சர்வதேசஅரசியல் ,தத்துவம் ,உளவியல் போன்ற கற்கை நெறிகளையும் கற்க வேண்டும் .அப்போது தான் நாம் முழுமையான முன்னேற்ரம் கொண்ட ஓர் அறிவுசார் சமுதாயமாக [Intellectual] மாறி எல்லா அரசு சார் அல்லது தனியார் நிறுவனங்கள்  திணைக்களகள் போன்ற ஐ .நா .மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளில் ஆலோசகர்களாக அதி உயர் பதவி வகிப்பவர்களாக  வரவேண்டும் .அப்போது தான் முழுமையானா சமுதாயமாக தமிழர் சமூகம் வளர்ச்சி காணும் .

இவ்வாறு வருவதற்கு இரட்டிப்பு திறமையும் (காரணம் எமது தோல் நிறம்), நிறைந்த பேச்சாற்றலும், மற்றையவர்களை வசீகரிக்கும் குணமும், மேலாக 'புறக்கணிக்கப்படும் பொழுது' மனத்தை தளரவிடாத முயற்சியும் கூடவே வேண்டும் என கருதுகின்றேன். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/24/2019 at 8:25 AM, ampanai said:

இவ்வாறு வருவதற்கு இரட்டிப்பு திறமையும் (காரணம் எமது தோல் நிறம்), நிறைந்த பேச்சாற்றலும், மற்றையவர்களை வசீகரிக்கும் குணமும், மேலாக 'புறக்கணிக்கப்படும் பொழுது' மனத்தை தளரவிடாத முயற்சியும் கூடவே வேண்டும் என கருதுகின்றேன். 

 

நன்றி நீங்கள் சொன்ன கருத்து மிகவும் சரியானது .

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2019 at 1:27 AM, uthayakumar said:

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது .
இம்முறையும் உயர் கல்வி கற்க பெரும் தொகை தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம்  தெரிவு ஆகி இருப்பது எம் எல்லோருக்கும் பொருமை அநேகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வரவேண்டும் என்றே நினைக்கின்றனர் நல்லது தான் இருந்த போதும் சமூகம் ,சட்டம் ,அரசியல் ,மானுடவியல்,சர்வதேசஅரசியல் ,தத்துவம் ,உளவியல் போன்ற கற்கை நெறிகளையும் கற்க வேண்டும்

எனது சில அனுபவங்களிலிருந்து இது பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் எங்களது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையிலேயே சாத்தியமாகும், ஏனெனில் முதலாவது தலைமுறை இன்னமும் அதிலிருந்து வெளிவரவில்லை அத்துடன் அவர்களது பிள்ளைகளையும்( பெரும்பாலும் ) அப்படி சொல்லி சொல்லியே வளர்ப்பதால் இரண்டாவது தலைமுறையும் அவ்வளவு இலேசில் மாறாது ..மூன்றாவது தலைமுறையிலேயே இந்த மாதிரி வேறு துறைகளில் அதிகளவு எங்களால் வேரூன்ற முடியும்.. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது சில அனுபவங்களிலிருந்து இது பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் எங்களது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையிலேயே சாத்தியமாகும், ஏனெனில் முதலாவது தலைமுறை இன்னமும் அதிலிருந்து வெளிவரவில்லை அத்துடன் அவர்களது பிள்ளைகளையும்( பெரும்பாலும் ) அப்படி சொல்லி சொல்லியே வளர்ப்பதால் இரண்டாவது தலைமுறையும் அவ்வளவு இலேசில் மாறாது ..மூன்றாவது தலைமுறையிலேயே இந்த மாதிரி வேறு துறைகளில் அதிகளவு எங்களால் வேரூன்ற முடியும்.. 

 

எந்த தலைமுறைல் இருந்தாவது மாற்றம் ஏற்படுமானால் வருவேற்கதக்கது .நன்றி பிரபா 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா கூறியதுபோல் மூன்றாவது தலைமுறையில் தான் மாற்றம் வரும். என் மூத்த மகள் இரண்டாமாண்டுடன் மருத்துவத் துறைக்கு முழுக்குப்போட்டுவிட்டு வேறு துறையைத் தெரிவு செய்தபோது அந்த அதர்ச்சி நீங்க எனக்கு மூன்று மாதங்கள் எடுத்தது. என் கடைசி மகளும் திறமைச்சித்தி கிடைத்தும் மருத்துவத்துறையை நிராகரித்துவிட்டு வேறு ஒன்றைத் தெரிவு செய்தபோதும் கூட அவர்களின் உளவியல் எனக்குப் புரியவில்லை. எமது மனங்கள் 35 ஆண்டுகள் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்தும் இன்னும் அப்படியேதான் மாறாமல் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரபா கூறியதுபோல் மூன்றாவது தலைமுறையில் தான் மாற்றம் வரும். என் மூத்த மகள் இரண்டாமாண்டுடன் மருத்துவத் துறைக்கு முழுக்குப்போட்டுவிட்டு வேறு துறையைத் தெரிவு செய்தபோது அந்த அதர்ச்சி நீங்க எனக்கு மூன்று மாதங்கள் எடுத்தது. என் கடைசி மகளும் திறமைச்சித்தி கிடைத்தும் மருத்துவத்துறையை நிராகரித்துவிட்டு வேறு ஒன்றைத் தெரிவு செய்தபோதும் கூட அவர்களின் உளவியல் எனக்குப் புரியவில்லை. எமது மனங்கள் 35 ஆண்டுகள் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்தும் இன்னும் அப்படியேதான் மாறாமல் இருக்கிறது.

சகோதரி ,நாங்கள் பலர் மாறாமல் தான் இருந்தபோதும் எமது இரண்டாம் தலை முறையிலும் மாற்றம் பல இருந்ததை யாரும் மறுக்க முடியாது அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியாகவும் அவரகள் சிந்தனையாலும் பல மாறுதல்களை நாம் கண்டிருக்கிறோம் .பலர் தனித்தே தங்கள் எதிர் காலம் பற்றி சிந்திக்கிறார்கள் .அவர்கள் தயனிவே இயந்திரங்கள் போல் இயக்கி தான் வேலை செய்யும் இயந்திரம் போல் நாம் பார்க்க முடியாது .தனித்த சிந்தனையும் மனித வேறுபாடுகளையும் அரசியல் பொருளாதார விடுதலையில் தனித்து போராடிய பல அறிவுசார் பிள்ளைகளை நாம் பார்த்திருக்கிறோம் .இவர்கள் மூலம் எமது அடையாளம் கூடவே சர்வதேசம் அறிந்து இருப்பதை மறக்கவும் முடியாது .நீங்கள் கூறுவது போல் படி படியாக பல மாறுதல்கள் வரும் என்பதில் மாற்றம் இல்லை .மாறும் விதியை யாரும் மறுக்கவும் முடியாது .எல்லோருமே இன்னும் மாறாமல் தான் இருப்பார்கள் என்றும் இல்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.