Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்?

Featured Replies

திருமணங்களின் நீண்ட ஆயுளுக்கு, 'அன்பு' எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு நம்பிக்கையும் அவசியம். இந்த இரண்டில், எது இல்லாமல் போனாலும் அந்தத் தாம்பத்யம் தடுமாற ஆரம்பித்துவிடுகிறது.

பெயர் வெளியிட விரும்பாத நம் வாசகர் ஒருவர், விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியொன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

"எனக்குத் திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என் மனைவிக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்பது ஒரு பரிசோதனையில் தெரியவந்தது. அதைக் கேள்விப்பட்டதும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், தனக்குக் குழந்தை பிறக்காது என்ற விஷயம், என் மனைவிக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். இப்போது நான் என்ன செய்வது..?" - இதுதான் அவரின் கேள்வி.

குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்கிற நிலை மிகவும் அரிதானது. முதலில், இருவரும் இணைந்து சென்று ஒரு மகப்பேறு மருத்துவரைப் பார்க்கவேண்டும். பிரச்னை சரி செய்யக்கூடியதா அல்லது சரி செய்ய முடியாததா என்று முதலில் பார்க்கவேண்டும். அப்படியே, குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்றாலும், 'வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளமுடியும். அதை முயற்சி செய்துபார்க்கலாம். மனமிருந்தால், ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம்.

'அந்த அளவுக்கு மனப்பக்குவம் இல்லை... சட்டப்படிதான் தீர்வு வேண்டும்' என்று நீங்கள் விரும்பினால்... அதற்கு வழிகாட்டுகிறார் வழக்கறிஞர் என்.ரமேஷ்.

'குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் விவாகரத்து கேட்கமுடியாது. இந்து திருமணச் சட்டத்தில் அதற்கு இடமில்லை. அதற்குப்பதிலாக, தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாதவர் என்கிற அடிப்படையில் விவாகரத்து கேட்கலாம். ஆனால், தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடமுடியாதவர் என்கிற (Impotence) நிலை, ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும். பெண்களுக்குப் பொருந்தாது. 'குழந்தை பிறக்க வாய்ப்பில்லாதவர்' என்பதற்கும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாதவர் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

கணவரின் பக்கமிருந்து பார்த்தால், 'திருமணத்துக்கு முன்பே, தனக்குக் குழந்தை பிறக்காது என்கிற விஷயம் என் மனைவிக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அந்த உண்மையைச் சொல்லாமல் என்னை ஏமாற்றிவிட்டார். திருமணம் முடிந்ததும் எனக்கென குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தேன். குழந்தை பெறமுடியாதவர் என்று தெரிந்திருந்தால் அவரை நான் திருமணம் செய்திருக்கவே மாட்டேன்' என்கிற தொனி அவரிடம் தெரிகிறது.

'நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்; அதனால், விவாகரத்து வேண்டும்' என்பது அவரது கோரிக்கையாக இருக்கும்பட்சத்தில், 'ஒரு உண்மையான தகவலை மறைத்து என்னைத் திருமணம் செய்துகொண்டதால், நடந்த திருமணத்துக்கு நான் கொடுத்த சம்மதம் செல்லாது. அதனால் நடந்த திருமணமும் செல்லாது. ரத்து செய்ய வேண்டும்' என்ற அடிப்படையில் விவாகரத்து கேட்கலாம்.

ஆனால் அதற்கு, திருமணம் முடிந்த ஒரு வருடத்துக்குள் வழக்கைப் பதிவு செய்திருக்கவேண்டும். இரண்டு, மூன்று வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு, 'இவளுக்கு குழந்தை பிறக்காது; விவாகரத்து செய்கிறேன்' என்று சொல்ல முடியாது'' என்கிறார் அவர்.
 
திருமணம் செய்வதற்கு முன்னால் சாதி, மதத்தில் ஆரம்பித்து பணம், படிப்பு, ஜாதகம் என்று எத்தனையோ பொருத்தங்களை வீட்டுப் பெரியவர்கள் பார்க்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களும் மனப் பொருத்தம், அழகு பொருத்தம் என்றெல்லாம்கூடப் பார்க்கிறார்கள். கூடவே மருத்துவப் பொருத்தத்தையும் பார்த்து திருமணம் செய்தால், இதுபோன்ற சங்கடங்கள் வராது இல்லையா?
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளிலை வாழுற எங்கடை இப்போதைய சமுதாயம் தாங்கள் கலியாணம் கட்டேக்கை எயிட்ஸ் செக்கப், பிள்ளைப்பாக்கியம் எல்லாம் பாத்துத்தான் ஓகே பண்ணீனம். ஒரு விதத்திலை பாக்கேக்கை சரியாத்தான் கிடக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாடுகளிலை வாழுற எங்கடை இப்போதைய சமுதாயம் தாங்கள் கலியாணம் கட்டேக்கை எயிட்ஸ் செக்கப், பிள்ளைப்பாக்கியம் எல்லாம் பாத்துத்தான் ஓகே பண்ணீனம். ஒரு விதத்திலை பாக்கேக்கை சரியாத்தான் கிடக்கு..

இதையும் மறைத்து கல்யாணம் கட்டுன ஆக்களும் உண்டல்லவே

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.