Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது 18 வயது மகனின் பெயரில் சாந்தி சிறிஸ்கந்தராஜா காணி கோரினார் : சிவமோகன் எம்.பி

Featured Replies

 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார். ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவில் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனது மகனுக்கு பெற்றுக் கொடுக்க சாந்தி சிறிஸ்கந்தராஜா 2016 ஆம் ஆண்டு கோரினார். அரசாங்க அதிபர் பணிமனையில் அனுமதிக்கப்பட்டு பட்டியலும் வந்தது. அதனை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் நிராகரித்து அதை நீண்டகால குத்தகையில் வழங்க முடியாது என்பதை தெளிவாக உறுதியாக கூறினோம். 

அந்த காணி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணி. எனவே அவர் ஓரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றவர். பொது மக்களுக்கு காணி இல்லை என நாம் சண்டை பிடித்துக்கொண்டு இருக்கும் போது அதை நீண்டகால குத்தகைக்கு எடுப்பதற்கு முயற்சித்தமை தவறு. அதிலும் அவரது மகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நிலையில் 18 வயதில் இருக்கும் போதே பெரிய தொழிலை செய்வதற்காக என்று காரணம் காட்டி எடுக்க முயன்றது ஓரு தவறான உதாரணம் என்பது வெளிப்படையானது. 

இந்த விடயம் தமிழரசுக் கட்சிக்கும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான பல குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் கட்சி விசாரணையை முன்னெடுக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/62094

7 hours ago, ampanai said:

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை கோரினார். ஆனால் நாம் அதனை நிராகரித்தோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்தார்.

சிங்களவனை விட மோசமான பேர்வழியா இந்த சிவமோகன் இருக்கார்!
முஸ்லீம் அல்லது பௌத்தன் கோரியிருந்தா கம்மென்டு சிவமோகன் இருந்திருப்பார்.
தமிழனுக்கு காணி கிடைக்ககூடா என்டு சிவமோகன்ட கரிசனை புல்லரிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Rajesh said:

சிங்களவனை விட மோசமான பேர்வழியா இந்த சிவமோகன் இருக்கார்!
முஸ்லீம் அல்லது பௌத்தன் கோரியிருந்தா கம்மென்டு சிவமோகன் இருந்திருப்பார்.
தமிழனுக்கு காணி கிடைக்ககூடா என்டு சிவமோகன்ட கரிசனை புல்லரிக்குது.

சபாஷ் உங்கள மாதிரி ஆட்கள் இருக்கும் மட்டும் இந்த அரசியல்வாதிகள் எந்த வித பயமில்லாமல் ஊழல் செய்யலாம் 
 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சாந்தி எம்.பியால் காணி சுவீகரிப்பு; சம்பவம் உறுதியானது

2019 ஓகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:42

-எஸ்.என்.நிபோஜன்

image_fe4fdaefc5.jpg

வவுனியா – பாலி ஆற்றின் ஒரு பகுதி காணியை, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா சுவீகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டச் செயலாளரால் ஒப்பமிட்டு வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காடழித்தல் மற்றும் பாலி ஆற்றின் ஒரு பகுதியில் காணி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பில் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரவில், காடழித்து விவசாயம் செய்யப்பட்டு வருவதுடன், பாலி ஆற்றின் ஒரு பகுதியில் அடாத்தாக காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தி, காடழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்கவில்லையென, விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எவ்வாறு காணியை சுவீகரித்தார் என்பதற்கு அப்பால், சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற்றுக்கொள்ள எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது என்பது தொடர்பில், பிரதேச மக்கள் கேள்வி எழுப்புயுள்ளனர்.

இவர் பதவியில் இருந்த காலத்தில் சுவீகரித்த காணியை 18 வயதான அவரின் மகனின் பெயரில் பதிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது தடுக்கப்பட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவால் சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற வேண்டுமெனவும் அல்லது காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், காடழிப்பில் அழிவுக்குள்ளான பெறுமதி மிக்க தாவரங்களுக்கான நட்டஈட்டையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், மக்கள் வலியறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சாந்தி-எம்-பியால்-காணி-சுவீகரிப்பு-சம்பவம்-உறுதியானது/71-237409

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.