Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து ஆலயங்களை, சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் கொண்டுவர துரித நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hindu-Temples.jpg

இந்து ஆலயங்களை, சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் கொண்டுவர துரித நடவடிக்கை.

இந்து ஆலயங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை சட்ட ரீதியான நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக பிரதேசங்கள் ரீதியாகச் சென்று சேவைகளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்துள்ளார்

இந்து சமய விவகார அமைச்சின் இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பாலான இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியன இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் உரிய வகையில் பதிவு செய்யப்படவில்லை. இதனால் ஏதேனும் பிணக்குகள் – நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் சட்ட ரீதியான பாதுகாப்பை, நீதி நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டை நேரடியாக கையளிப்பது உட்பட அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனவே, மேற்படி நிறுவனங்களை ஓர் சட்ட ரீதியான நிர்வாகப் பொறிமுறைக்குள் கொண்டுவர வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

மேற்படி செயற்றிட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கும் மேலும் பல சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காகவும் “உங்கள் ஊர் தேடி வரும், இந்து–சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் துரித சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதலாவது சேவை நாளை மறுதினம் 10ஆம் திகதி வட கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. அதன்பின்னர் நாடு முழுவதிலும் கட்டங்கட்டமாக நடைபெறும்.

எனவே, இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவையில் பங்கேற்று இந்து குருமார்கள். அறங்காவலர்கள், அறநெறி ஆசிரியர்கள், இந்து மன்ற செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

இதேவேளை, இந்துக்களுக்காக தேசிய இந்து மகா சபை உருவாக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

http://athavannews.com/இந்து-ஆலயங்களை-சட்ட-ரீதி/

On 8/10/2019 at 6:54 AM, தமிழ் சிறி said:

அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பாலான இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியன இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் உரிய வகையில் பதிவு செய்யப்படவில்லை. இதனால் ஏதேனும் பிணக்குகள் – நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் சட்ட ரீதியான பாதுகாப்பை, நீதி நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

திருகோணமலை கன்னியா விவகாரத்தில் ஒரு தமிழ் பெண்மணியிடம் காணி உரித்து  சம்பந்தமான அதிகார பதிவுகள் இருந்தபடியால் வாதிக்க கூடியதாக இருந்தது. இப்படியான பதிவுகள் இல்லாத ஆலயங்கள் இலகுவாக பௌத்த விகாரைகள் அமைப்பதை இலகுவாக்கிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் சட்ட ரீதியான பாதுகாப்பை, நீதி நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்துக்கோவில்களை அழித்து அந்த இடங்களை அபகரித்தபோதும் அதற்கு மிக நெருக்கமாக அடாத்தாக புத்த விகாரைகள் புதிதாக அமைக்கப்படும் போதும் இந்த சட்டமும் நீதியும் எமது கலாச்சாரத்தை பாதுகாக்க  தவறியது யாவரும் அறிந்ததே. நீதி நிர்வாகம் சிங்கள அரசின் கையில் இருக்கும் வரை எமக்கு நீதிகிடைக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.