Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாயவின் வெள்ளை வான்களிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம்- மங்களசமரவீர

Featured Replies

கோத்தபாயராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது பொறுப்புகளை கைவிட்டுவிட்டு நாட்டைவிட்டு ஒருபோதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கியதேசிய கட்சி கோத்தபாயராஜபக்சவை தோற்கடிக்கும் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளியில்லை எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இலங்கையில் பிறந்தவராகவும் இந்தநாட்டிலிருந்து தப்பியோடி இன்னொருநாட்டிற்கு விசுவாசம் வெளியிடாதவராகவும் காணப்படுவார் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஜனநாயகம் என்ற தளத்திலிருந்து நீதித்துறை பொதுச்சேவை மற்றும் ஏனைய சுயாதீன கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டவராகவும் ஐக்கியதேசிய கட்சியினாலும்  அதன் கூட்டணிகளாலும் ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்டவராகவும் காணப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச எதிர்கட்சியில் பதவி வகித்த கடந்த நான்குவருட காலப்பகுதியில் எந்த பாடத்தையும் கற்கவில்லை,அவர் தனது குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினார் என்பதை உணரவில்லை,தான் நாட்டை அதிகளவிற்கு பயமுறுத்தினேன் என்பதை உணரவில்லை,தான் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தினேன் என கவலையடையவில்லை,எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

பிரகீத்எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்தும் லசந்தவிக்கிரமதுங்கபடுகொலை செய்யப்பட்டமை குறித்தும்  கீத் நொயார் தாக்கப்பட்டமை குறித்தும் மகிந்த ராஜபக்ச கவலைப்படவில்லை எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/62438

  • தொடங்கியவர்

கைகளில் இரத்தக்கறை படிந்த ஒருவர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது - மங்கள 

ஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

mangala19.jpg

அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட்டமையின் மூலம் மஹிந்த எதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

'இலங்கையும், அதன் மக்களும் ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து' என்பதாகவே மஹிந்தவின் மனதிலுள்ள எண்ணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டமையைத் தொடந்து அமைச்சர் மங்கள சமரவீர மிகநீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார். 

அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/62490

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது

 

chandrika-kumaratunga-Mahinda.jpg?zoom=1

ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது என, தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோத்தாபயவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பசில் கூறியது பொய். ராஜபக்சர்கள் பேச்சை எவரும் நம்பப்போவதில்லை. எனவும் தெரிவித்தார்.

மேலும், காட்சியா? நாடா என்று வரும்போது ஸ்ரீ லாங்கா சுதந்திரக் கட்சியைவிட நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், கோத்தாபய ராஜபக்ஸவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ராஜபக்சர்கள் குடும்பத்திலிருந்து வேட்பாளரை தெரிவு செய்வதற்கு, அவர்களின் அதிகார பேராசையே காரணம். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2019/128686/

  • தொடங்கியவர்

"ஊடகவியலாளர்கள் கொலை, சுற்றுலாப் பயணிகள் பாலியல் வல்லுறவு, வெள்ளை வேன் கடத்தல்களை மறந்திட முடியாது" 

ஊடகவியலாளர்கள் கொலை , சுற்றுலாப்பயணிகள் பாலியல் வல்லுறவு மற்றும் வெள்ளை வான் கடத்தல்களை மறந்து விடமுடியாது எனத் தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இன்று பொதுஜன பெரமுனவின் புகழ்பாடுபவர்கள். கடந்த அரசாங்கத்தின் முறைக்கேடுகளை மீள  நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின்  மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குடும்ப ஆட்சியினை இல்லாதொழித்து  ஜனநாயகம் மிக்க அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களின் அரசியல் தீர்வாக காணப்பட்டது. இதனை இலக்காக கொண்டே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு ஆட்சியினை கைப்பற்றி ஜனநாயகத்தை  அனைவருக்கும் பொதுவுடமையாக்கிய ஐக்கிய தேசிய கட்சி மீண்டும்  மஹிந்த ராஜபக்ஷவிடம்  ஒருபோதும் ஆட்சியினை  ஒப்படைக்காது.  நிச்சயம் மீண்டுமொரு அரசியல் பின்னடைவினை   பொதுஜன பெரமுன  எதிர்க்கொள்ளும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/62497

22 hours ago, ampanai said:

கோத்தபாயராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இப்பிடி கதைச்சால் கோத்தா உங்களையும் வெள்ளை வானில் தூக்கிட்டு போடுவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ampanai said:

கோத்தபாயராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிங்களத்தின்  அடுத்த நாடகம் அரங்கேற்றம், மங்கள, மங்கள விளக்கேற்றி ஆரம்பம்.

  • தொடங்கியவர்

மங்களவின் கருத்துக்கள் கவலையளிக்கின்றது - நாமல் 

அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார். 'காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக் கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?' 

அமைச்சரின் இப்பதிவை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்திலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

https://www.virakesari.lk/article/62508

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.