Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 ஆண்டுகளாக சிறை அருகே தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6 ஆண்டுகளாக  சிறை அருகே  தடுப்பு முகாமில் வாடும் ஆவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகள்

ஆவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

PNG_Refugee_Centre.png

இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் ஆவுஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல். 

இதற்காக ஆவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

புதிய தடுப்பு முகாமிற்கு அகதிகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக, மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அதிகாரிகளின் உத்தரவு கடிதத்தை ட்வீட்டரில் பகிர்ந்திருக்கிறார்.  

அக்கடித்தத்தில், “நீங்கள் புதிய மையத்திற்கு(முகாம்) மாற்றப்படுவதால், உங்கள் தொலைப்பேசியை ஒப்படைத்தாக வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், அறையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறையிலேயே உணவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் இம்மையம் சிறையை போன்றே செயற்படும் எனக் கருதப்படுகின்றது.  

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஆவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்திருக்கிறார். “ஆவுஸ்திரேலிய அரசுக்கும் அதன் சேவை வழங்குனர்களுக்கும் இந்த நடவடிக்கையில் எந்த பங்கும் இல்லை,” என ஆவுஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

ஆவுவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இது புதியதொரு சிக்கலாக உருவெடுக்கும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

முன்னதாக, 2016ல் இத்தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் ஆவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தானது.  இந்த ஒப்பந்தத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கும் அதிகமான அகதிகள் நிராகரிக்கப்பட்டனர். அவ்வாறு, நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்ந்து பப்பு நியூ கினியா மற்றும் நவுருவிலேயே வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

https://www.virakesari.lk/article/62680

அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற நிதி சேகரிக்கும் ஆவுஸ்திரேலியர்கள்!

மனுஸ் மற்றும் நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை கனடாவில் மீள்குடியேற்ற சிரிய அகதி  அறிமுகப்படுத்திய திட்டத்திற்கு ஆவுஸ்திரேலியர்கள் 1 இலட்சம் டொலர்களுக்கு மேல் நிதி சேகரித்திருக்கின்றனர்.

ஹசன் அல் கோண்டர் என்ற சிரிய அகதி கனடாவில் தஞ்சம் வழங்கப்படும் முன், ஏழு மாத காலம் மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்தார். பின்னர், கனடாவில் அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டு அங்கு குடியேறினார். இந்த சூழலில், ஆவுஸ்திரேலியாவின் கடுமையான அகதிகள் கொள்கை காரணமாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உதவும் விதமாக ஆப்ரேஷன் #NotForgotten என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அந்த அகதி. இதன் மூலம், அங்கு உள்ள 200க்கும் மேற்பட்ட அகதிகளை ஸ்பொன்சர் மூலம் கனடாவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு அகதிக்கும் 18,400 டொலர்கள் என 3.68 மில்லியன் டொலர்கள் திரட்டும் நோக்கத்தில் நிதி சேகரிக்கும் பணி நடந்து வருகின்றது. தற்போதைய நிலையில் 174,000 டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 111,000 டொலர்கள் ஆவுஸ்திரேலியர்களால் வழங்கப்பட்டுள்ளது என சிரிய அகதியான அல் கோண்டர் தெரிவித்திருக்கிறார்.

இந்த முன்னெடுப்பை ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் வசிக்கும் இலங்கை அகதியான சமிந்தா கணபதி வரவேற்றுள்ளார். “எந்த நம்பிக்கையுமின்றி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு சிக்கியிருக்கிறோம். மனுஸ்தீவில் உள்ள  பெரும்பாலான அகதிகள் அமெரிக்க மீள்குடியேற்ற திட்டத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள்,” எனக் கூறியிருக்கிறார்.

ஆவுஸ்திரேலியாவின் கடுமையான தடுப்பு கொள்கைகள் சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறியுள்ள சிரிய அகதி அல் கோண்டர், “தனது நோக்கம் அரசாங்கத்தை பகிரங்கமாக அவமானப்படுத்துவது அல்ல” எனத் தெரிவித்திருக்கிறார்.  இப்பிரச்னையை முடிவிற்கு கொண்டு வர அரசியல் ரீதியாக அல்லாமல் மனிதாபிமான ரீதியாக பணியாற்றுவோம் என சிரிய அகதி அழைப்பு விடுத்திருக்கிறார்.

http://eelamurasu.com.au/?p=20994

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.