Jump to content

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணம்!


Recommended Posts

57 வயதான சந்திரசேகர் தமிழக அணியின் கேப்டனாகவும், தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி.சந்திரசேகரின் திடீர் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 57 வயதான சந்திரசேகர் தமிழக அணியின் கேப்டனாகவும், தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர்.

மாரடைப்பால் சந்திரசேகர் இறந்ததாக தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக இருந்தவர் சந்திரசேகர். இவர்தான் தோனியை அணிக்குள் கொண்டுவரும் யோசனையை அளித்தவர். மாரடைப்பால் சந்திரசேகர் இறந்ததாக தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1987-88ல் தமிழக அணி ரஞ்சி கோப்பையை வென்றபோது அதில் மிக முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர். இந்தத் தொடரின் கால் இறுதிப்போட்டியில் 160 ரன்களும், இறுதிப்போட்டியில் ரயிவேஸ் அணிக்கு எதிராக 89 ரன்களும் அடித்து தமிழகம் வெற்றிபெற காரணமாக இருந்தவர் சந்திரசேகர்.

இராணி கோப்பையில் 56 பந்துகளில் இவஎ அடித்த சதம் இந்திய அணிக்குள் அழைத்து வந்தது. முதல் தர கிரிக்கெட்டில் இதுதான் அப்போது குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம்.

v b chandrasekhar
 
v b chandrasekhar

தமிழக அணிக்காக சிறப்பாக விளையாடிய சந்திரசேகர் இந்திய அணியில் பெரிதாகத் தடம் பதிக்கவில்லை. 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாட மட்டுமே அவருக்கு வாய்பளிக்கப்பட்டது. அதில் நியூசிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்தார் சந்திரசேகர். 2004-2006ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் சந்திரசேகர்.

https://www.vikatan.com/sports/cricket/former-india-cricketer-vb-chandrasekhar-passes-away

 

Link to comment
Share on other sites

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழக ரஞ்சி அணி கேப்டனுமான வி.பி.சந்திரசேகர் நேற்று சென்னையில் மரணமடைந்தார். மயிலாப்பூர் இல்லத்தில் அவர் நேற்று மாலை தற்கொலை செய்துகொண்டார். முதலில் சந்திரசேகர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் போலீஸ் தற்கொலை என்பதை உறுதிசெய்தது. சந்திரசேகர் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் கடிதம் எதுவும் எழுதவில்லை என்கிறது போலீஸ்.

 

57 வயதான சந்திரசேகர், தமிழக அணியின் கேப்டனாகவும் தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக இருந்தார். இவர்தான் தோனியை சென்னை அணிக்குள் கொண்டுவரும் யோசனையை அளித்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனையாளராக இருந்துவந்த சந்திரசேகர், தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் விபி காஞ்சி வீரன்ஸ் என்கிற பெயரில் அணி ஒன்றை நடத்திவந்தார். தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டித் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணி முக்கிய அணிகளில் ஒன்று.

தற்போது நடைபெற்று முடிந்த 2019 டிஎன்பிஎல் சீசனில் எலிமினேட்டர் சுற்றுவரை முன்னேறியது விபி காஞ்சி வீரன்ஸ் அணி. எலிமினேட்டரில் மதுரை அணியிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. இந்த நிலையில்தான் நேற்று டிஎன்பில் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன், வீட்டில் தனது அறைக்குள் போன சந்திரசேகர் வெளியேவரவில்லை. நீண்டநேரமாக சந்திரசேகர் கதவைத் திறக்காததால் குடும்பத்தினருக்குச் சந்தேகம் ஏற்பட்டு ஜன்னல் வழியாகப்பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறார்.

போலீஸ் வரவழைக்கப்பட்டு உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. நேற்று மாலையே சந்திரசேகர் மரணமடைந்தாலும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. முதலில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக உறவினர்கள் மூலம் சொல்லப்பட்டது. ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை போலீஸ் உறுதி செய்தது.

காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர் வி.பி.சந்திரசேகர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அணியை நடத்திவந்ததில் 3 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குடும்பத்தினர் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இதை மறுக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

"இந்த டிஎன்பில் தொடர் முழுக்க சந்திரசேகர் கமென்ட்ரி டீமில் இருந்தார். கிட்டத்தட்ட 50 நாள்கள் எங்களோடுதான் இருந்தார். கடந்த 11-ம் தேதி நெல்லையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டிக்குக் கூட வந்திருந்தார். அணிக்கு ஆலோசனைகள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார் என்பது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழக அணிக்காகப் பல சாதனைகள் செய்தவர் சந்திரசேகர்.
 
காஞ்சி அணியால் 3 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு நஷ்டமா என்று எங்களுக்குத் தெரியாது. இந்த ஆண்டு அந்த அணிக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் வரும். மேலும் அணியில் நஷ்டம் என்பது உண்மையாக இருந்தால் அந்த டீமை விற்றுவிட்டாலே 5 கோடி ரூபாய் அவருக்குக் கிடைக்கும். 2 கோடி ரூபாய் லாபம். மேலும் சந்திரசேகருக்கு 7 ஏக்கரில் `விபி நெஸ்ட்’ என்கிற பெயரில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் உள்ளது. அதன் மதிப்பே 50 கோடி ரூபாயைத்தாண்டும். அதனால் அவர் பணக்கஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்று நம்பமுடியவில்லை'' என்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர்.

தமிழக அணிக்காகச் சிறப்பாக விளையாடிய சந்திரசேகர். இந்திய அணியில் பெரிதாகத் தடம் பதிக்கவில்லை. 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாட மட்டுமே அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், நியூசிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்தார். 2004-2006-ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினராகவும் சந்திரசேகர் இருந்தார்.

வி.பி.சந்திரசேகரின் திடீர் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. தற்கொலைக்கான காரணமும் மர்மமாகவே இருக்கிறது!

https://www.vikatan.com/sports/sports-news/what-is-the-reason-behind-vb-chandrasekars-death

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.