Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளும் கட்சியின் தீர்வு யோசனை தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது!

Featured Replies

ஆளும் கட்சியின் தீர்வு யோசனை தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது!

அடியோடு நிராகரித்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

கொழும்பு, மே 2

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறிக்கொண்டு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக்கும் அதிகாரப் பரவ லாக்கல் யோசனை சிங்கள ஆட்சியாளர் களின் நீண்டகால வரலாற்றுப்பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். அதனைப் பரிசீலனைக்குக் கூட தமிழர்கள் தொட்டுப்பார்க்க மாட்டார்கள். பரிசீலிப்பதற்குக் கூட அருகதையற்றது. அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கருத்தில் எடுக்கவே மாட்டாது.

இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகளை அடியோடு நிராகரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தனது இராணுவ இலக்கை அடைவதற்கான அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட காலத்தைக் கடத்திய பிறகு, ஜனாதிபதி மஹிந்தவின் கட்சி முன்வைத்திருக்கும் இந்தத் தீர்வு யோசனை இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகின்ற ஒரு நடவடிக்கையே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இனப்பிரச்சினைக்கான தனது தீர்வு யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நேற்றுமுன்தினம் நடத்திய தனது மேதினப் பொதுக்கூட்டத்தில் வெளியிட்டிருக்கிறது. மாவட்ட மட்டத்தில் மாத்திரமே அதிகாரங்களைப் பகிரும் திட்டத்தை உள்ளடக்கிய அந்த யோசனை தமிழர் தரப்புக ளில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியி ருக்கிறது.

அர்த்தமற்ற யோசனை

இது குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தவையாவது:

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றுப் பல திருப்புமுனைகளைத் தாண்டி இன்று முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றது. சுயநிர்ணய உரிமைக்கான இந்தப் போராட்டம் உலகின் மனச்சாட்சியை தொட்டு நிற்கின்றது. இந்த சமயத்தில் சர்வதேச சமுகத்தையும், அயல் நாடான இந்தியாவையும் சமாளிப்தற்கான ஒரு திட்டமாக அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளை மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக் கிறது. மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களைப் பகிரும் அர்த்தமில்லாத யோசனை அது.

மாவட்டசபைகள், கிராம சபைகள் என்பவற்றை என்றைக்கோ தமிழர்கள் நிராகரித்து ஒதுக்கிவிட்டனர். அர்த்தமில்லாத இந்த மாவட்ட மட்ட அதிகாரப் பகிர்வை தமிழர்களுக்கு உரிமை வழங்குவதற்கான தீர்வாக அக்கட்சி இப்போது முன்வைத் திருக்கிறது. தமிழ் மக்களுக்கு இதன் மூலம் பலத்த ஏமாற்றத்தை அரசு தந்திருக்கிறது. இந்த யோசனைத் திட்டம் பரிசீலனைக்கு எடுப்பதற்குக்கூட தகுதியற்றது;அருகதை யற்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைப் பரிசீலனைக்குக்கூட எடுக்கவே எடுக்காது.

இப்போது சர்வதேச சமூகம் ஒரு தெளிவான நிலைக்கு வரமுடியும். ஐக்கிய இலங் கைக்குள் தமிழர்களோடு கூடி வாழ்வதற்கு சிங்கள ஆளும் வர்க்கம் தயாராக இல்லை என்பதே தகுதியற்ற இந்த அதிகாரப்பரவலாக்கல் யோசனை மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகள்

தமிழர் போராட்டத்தை ஆரம்ப நிலைக்குத் தள்ளியுள்ளன

சங்கரி சித்தார்த்தன் பத்மநாபா அணி கருத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன் மொழிவுகள் தமிழ் மக்களின் 50 வருட காலப் போராட்டத்தை மீண்டும் தொடங் கிய இடத்திற்கே தள்ளியுள்ளன.

மூன்று தமிழ் கட்சிகள் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளன.

தமிழர் விடுதலைக் கூட்டணிஇ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதா வது:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இனப் பிரச்சினை தீர்வுக்காக வெளியிடப் பட்டிருக்கின்ற ஆலோசனைகள் எவ் விதத்திலும் தமிழ் பேசும் மக்களினுடைய அபிலாசைகளை அண்மிக்கவில்லை என் பதால் தமிழர் விடுதலைக் கூட்டணிஇ ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிஇ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் இப் பிரேரணைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை தெட்டத்தெளிவாக கூறிக்கொள்கின் றன.

இந்த பிரேரணைகள் இனப்பிரச்சினைக் கான தீர்வை எட்டமுடியாதவை என்பது மாத்திரமல்லாது சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தடையாகவே இருக்கும்.

தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள்

மேலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆளுங்கட்சிப் பிரேரணைகள் ஏனைய கட்சிகளின் பிரேரணைகளைக்கூட பின் தள்ளிவிடும் வகையில் அமைந்துள்ளன.

இன்று நடைமுறையில் இருக்கும் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத் தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங் கப்பட்டிருக்கும் அதிகாரங்களை காட்டி லும் மிகக் குறைவான அதிகாரங்களையே இப்பிரேரணைகள் கொண்டிருக்கின்றன.

இம் முன்மொழிவுகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான 50 வருட காலப் போராட்டத்தை மீண்டும் தொடங்கிய இடத்திற்கே தள்ளியுள்ளது.

பாரிய அழிவுகளுக்குப் பின்னரும் 50 ஆண்டுகளாக ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காணப்பட முடியாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டிக்கு குறைவான எத்தகைய தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும் என்றுள்ளது.

செயதி --- உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்ட யோசனைகள் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்ட யோசனை சர்வதேசத்தையும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் நடவடிக்கையாகும். சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் தீர்வாக அமையாது. மாறாக சிங்கள பேரினவாதிகளை திருப்திப்படுத்துவதாகவே இது அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள தீர்வுத் திட்ட யோசனை குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கோழிப் புரியாணி கேட்டு அழுத குழந்தைக்கு குறுணல் கஞ்சி கொடுத்த மாதிரியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்வு யோசனை அமைந்துள்ளது. இலங்கையின் சிங்களப் பெரும்பான்மையும் அரசுகள் காலத்திற்கு காலம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்கின்ற பேரில் கிளப்பிவிடும் புரளிகளும் அவற்றை புதுமையாக தமிழ் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் காட்ட முற்படும் நாடகங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே உள்ளன.

இலங்கையின் அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 13 வயது திருத்த சட்டத்திற்கு அமைவாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டபோது வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சொற்ப அதிகாரங்கள் கூட சீரியமுறையில் செயற்படுத்த முடியாமல் சிங்கள அரசத் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்ட வரலாறுகளையும் மறுப்பதற்கில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு வர்த்தமானி பிரகடனம் 1988 செப்டம்பர் திகதி 8 ஆம் திகதி 522 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 17 வருடங்களுக்கு பின் கடந்த 2006 ஆம் அக்டோபர் 16 ஆம் திகதி இலங்கை உயர் நீதிமன்றத்தினால் வடக்கு கிழக்கு இணைப்பு சட்டபூர்வமற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திமடைந்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டுமென தமிழ் அரசியல் தலைவர்கள் பலவழிகளில் பற்பல அஹிம்சைப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களின் தார்மீகக் கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டமையினால் 1976 மே 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தந்தை செல்வாவின் தலைமையில் தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்டு அதற்கான அங்கீகாரம் 1977 ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களால் வழங்கப்பட்டது.

அதன் பின்புதான் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களின் உரிமையை தட்டிக்களித்தமையினால் ஆயுதப் போராட்டத்தின் பின்பு பல இராணுவ வெற்றிகளை விடுதலைப் புலிகள் ஈட்டியதன் எதிரொலியாக 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் போர்நிறுத்த உடன்படிக்கை விடுதலைப் புலிகளுக்கும் அப்போதைய அரசõக இருந்த ரணில் விக்கிரமசிங்கவைக்கும் இடையில் கைச்சாத்தானது.

இன்றுவரை அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக புலிகளோ அரசோ அறிவிக்கவில்லை அரசு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் தீர்வுத் திட்டத்தை சர்வதேசத்திற்கு காட்ட வேண்டிய ஒரு நாடகமாகவே சிறிலங்கா சுதந்திர கட்சியால் முன்னெடுக்கப்பட்ட உப்புசப்பற்ற தீர்வு யோசனை அமைந்துள்ளது.

மாகாண சபைகளை மாவட்ட சபைகளாக மாற்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு முதலமைச்சர் நியமிப்பது என்பது உண்மையில் தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் தீர்வாக அமையாது அது சிங்கள பேரினவாதிகளை திருப்திப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. எதிர்காலத்தில் கிராமத்திற்கு ஒரு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. இந்த யோசனையை ஏனைய தமிழ் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுமா என்பது கூட கேள்விக்குறியே ஆகும்.

எனவே இந்த தீர்வுத் திட்டமானது சர்வதேசத்தையும் ஒட்டுமொத்தமான தமிழ் சமூகத்தையும் ஏமாற்றியுள்ளது என்பதை தெளிவாக அறிய முடியும்.

-வீரகேசரி

பழைய மொந்தையில் புளித்த கள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அதன் யோசனைகளை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த யோசனைகளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான விவசாய அபிவிருத்தி, கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வாசித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சி அதன் வேட்பாளருக்கு ஆதரவளித்த ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் முன்னிலையில் சமர்ப்பித்த மகிந்த சிந்தனையை மனதில் கொண்டே செயற்படுகின்றது என்பதுதான் அந்த யோசனைகள் ஆவணத்தின் முதல்வசனம். `சிக்கலான இனப் பிரச்சினையைக் கையாளுவதற்கு இதுகாலவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் சாதக, பாதகங்களை நுணுக்கமாக ஆராய்ந்து புதியதொரு அணுகு முறையை வகுப்பதே எனது உத்தேசம்' என்று மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருந்ததையும

மொத்தக் கருத்துக்களும் தெரிவிப்பது என்னவென்றால் ????????????????

தமிழீழத்தைத் தவிர வேறு தீர்வென்பதேயில்லை என்பதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.