சர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு
By
ampanai
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
32
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
தாக்குதல் எதிலும் தான் பங்குபற்றவில்லை என்று US கூறியுள்ளதாகத் தகவல்.
-
அமெரிக்க தளத்தில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது . செய்தியின் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை.
-
சரித்திரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் என்று வர்ணிக்கப்படும் தாக்குதலில் 140 யுத்த விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை இராணுவ மையங்கள், ஏவுகணை நிலைகள், ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தயாரிக்கும் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு நிலைகள் என்பனவும் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளூர் தகவல்களின்படி ஈரானின் முக்கிய படையணியான இஸ்லாமிய புரட்சிகர ராணுவத்தின் பிரதான தலைமையகமும் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. முதலாவது தாக்குதல்கள் தலைநகர் டெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய பகுதிகளிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தன்மீது ஈரானும், அதன் முகவர்களும் கடந்த சில வருடங்களாக நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இதனை தான் நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் பைடனுக்கும், உப அதிபர் கமலா ஹரிஸிற்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
-
By ஈழப்பிரியன் · பதியப்பட்டது
இல்லையில்ல, நாங்கள் #JVP இல்ல. நாம் #NPP” என்று புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் கூச்சல் எழுப்ப தேவையில்லை. தாம் அடிப்படையில் JVP அங்கத்தவர் என்பதில் பெருமை அடைவதாக JVP தலைவர்களே கூறி வருகிறார்கள். பல போராட்டங்களை கடந்து வந்த அவர்களின் நியாமான பெருமை அதுவாகும். அதில் எமக்கு பிரச்சினை இல்லை. இன்று NPP/JVPயின் பிரச்சார அணி, தங்கள் பழைய வரலாற்றை அழிக்க அல்லது மறைக்க முயல்கிறது அல்லது தாம் தமது பழைய தவறுகளை இனி செய்ய மாட்டோம் என சொல்ல முயல்கிறது. சரி, நல்லெண்ண நோக்கில் அவற்றை ஏற்று கொண்டு, அந்த கட்சியை புதிதாக பார்த்து, அவர்களின் புதிய கருத்துகளை கேட்டு, ஒரு கட்சியாக நாம் அரசியல் பரப்பில் முன்னோக்கி நகர்வோம். இப்படி “பொசிடிவாக” NPP/JVPஐ கணிப்போம் என்றால் இவர்கள் தங்கள் தங்கள் கறுப்பு வரலாற்றை மறைக்க முயல்வதுடன் எமது வரலாற்றையும் கொச்சை படுத்த முயல்கிறார்கள். மகாவம்சத்தில் இருந்து, சமகாலத்தில் JVP உட்பட்ட பெருந்தேசியவாத சக்திகளினால், சிங்கள மக்கள் மத்தியில் 1950களில் இருந்து விதைக்க பட்டுள்ள பேரினவாத சிந்தனை என்பதை திரை போட்டு மறைத்து, மலையக அல்லது ஈழத்தமிழ் மக்களின் இன்று வரையிலான அவல நிலைமைகளுக்கு பிரதானமாக, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளுமே முற்று முழுமையான பொறுப்புகளை ஏற்க வேண்டும் என JVP பிரசாரம் செய்ய முயல்கிறது. இது ஒரு பலவீனமான பிரச்சாரம்! தமிழ் மக்கள் அரசியல் பரப்பில் முற்போக்கு அணி, பிற்போக்கு அணி என இரண்டு முகாம்கள் இருக்கின்றன என்பது ஜனாதிபதி அனுரவுக்கும், பிரதமர் ஹரிணிக்கும் மிக நன்றாகவே தெரியும். அவர்களுக்கு தெரியும் என்று #TPA தலைவர் மனோவுக்கும் தெரியும். இது, இன்றைய சில புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். இவர்களை நாம் கணக்கில் எடுப்பதில்லை. பிற்போக்கு தமிழ் அரசியல்வாதிகளை, ஏன் பிற்போக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளையும்கூட, தமிழ் பேசம் மக்களே உரிய விதத்தில் தோற்கடிப்பார்கள். அது தொடர்பில் JVPயின் தடுமாற்றம் அவசியமில்லை. முதலில், JVP சிங்கள பெருந்தேசியவாத பரப்பில் உள்ள இனவாத, கொலைக்கார, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். முதலில், JVPயின் கறுப்பு வரலாறு என்ன? இதிலும் கூட பல விஷயங்கள் விட்டு விடுகிறோம். எம்முடன் தொடர்பு பட்ட விடயங்களை மட்டும் பார்ப்போம். 1) இந்திய ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக பெருந்தோட்ட தமிழ் மக்களை சித்தரித்து காட்டினார்கள். கட்சி தொண்டர்களுக்கான JVPஇன் “பந்தி பஹா” என்ற ஐந்து வகுப்புகளில் இது இரண்டாம் வகுப்பாகும். இந்தியாவை ஏகாதிபத்தியத்தியமாக குறிப்பிடுவதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் அம்சமாக JVP பிரசாரம் செய்ததால், சிங்கள மக்கள் மனங்களில் இனவாத நஞ்சு விதைக்க பட்டது. 2) மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக ஏற்பது விஞ்ஞான பூர்வமாக சாத்தியம் அற்றது என்றார்கள். 3) ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் முன்னுக்கு பின் முரணான கருத்துகளை JVP தலைவர்கள் கூறி வந்தார்கள். 4) நாடு தழுவிய அரசியல் அதிகார பகிர்வை ஏற்க மறுத்தார்கள். இன்றுவரை அதிகார பகிர்வு தொடர்பில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள். 5) அதிகார பகிர்வின் அடையாளமான மாகாணசபைகள் முறைமையையும், சட்ட மூலத்தையும் எதிர்த்து நாடு தழுவிய பெரும் கிளர்ச்சியை செய்தார்கள். பெரும்தொகை மரணங்களை, சேதங்களை விளைவித்த கிளர்ச்சி அதுவாகும். பின்னர் மாகாணசபைகள் தேர்தல்களில் பங்கு பற்றி சபைகளில் வந்து அமர்ந்தார்கள். 6) மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பாரிய பங்காற்றி, இன்று கறுப்பு சரித்திரம் ஆகிவிட்ட மகிந்தவின் கொடூர ஆட்சிக்கு அஸ்திவாரம் போட்டார்கள். 7) யுத்தம் செய்ய தயங்கிய, ஜனாதிபதி மகிந்தவை யுத்தம் செய்தே ஆக வேண்டும் என்று நெருக்குதல்களுக்கு உள்ளாக்கி, ஒரு முட்டாள் கொலையாளி கையில் அரிவாளை கொடுத்து, இன்று கறுப்பு சரித்திரம் ஆகிவிட்ட யுத்த கொடுமைகளுக்கும், யுத்தத்தின் பக்க விளைவான, கொழும்பில் நிகழ்ந்த “வெள்ளை-வேன்” கடத்தல், படுகொலை நிகழ்வுகள் உட்பட, வரலாறு காணாத மனித உரிமை மீறல்களுக்கும் முதல் காரணமாக அமைந்து விட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் யுத்த வெற்றி பெருமையில், JVPக்கும் பங்கு இருக்கிறது, என சிங்கள மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரம் செய்தார்கள். இங்கே, முற்போக்கு பொருளாதார நகர்வுகளுக்காக உலகத்துடன் சேர்ந்து முன்நகர இலங்கை முயன்ற போதெல்லாம், “கற்காலத்தில்” இருந்த JVP எவ்வளவு தடையாக நின்றது என்பதை பற்றி எழுதவில்லை. இன்று அவர்கள் பொருளாதார கொள்கையிலும் மாறி விட்டார்கள் என்றும் நாம் நம்புவோம். (JVPயின் பொருளாதார தவறுகள் பற்றி அவசியமாயின் இன்னொரு நாள் எழுதுவோம்.) இன்று தம் பழைய வரலாற்றில் இருந்து NPP மீண்டு விட்டது என்றும், பழைய தவறுகளை அவர்கள் செய்ய மாட்டார்கள் எனவும் நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! ஆனால், பழைய வரலாறு என்று ஒன்று இருக்கவே இல்லை என்று காட்ட படும் மலின முயற்சியை கண்டு கொஞ்சம் சிரித்தும் வைப்போம்! <ADMIN-4-MG> https://www.facebook.com/ManoGanesanDPF/posts/pfbid0baz1gSgrn8NSFoCdFV2hNS9Vfn2Y96M7kBKs75vkPbqNmUtyUZQQjjPiJvkkTfeWl
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.