Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்?

maxresdefault-10.jpg

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது குழப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், சஜித்திற்கு பதிலாக தாம் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக ஐக்கிய தேசியின் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியுள்ள சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இன்று மாலை அல்லது நாளை மாலை சஜித் பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக ஹரீன் பெணான்டோ, அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் குழப்ப நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கொண்ட அதிருப்தி காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ரணிலை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/புதிய-பிரதமராக-இன்று-பதவ/

 

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க நான் தயார் பிரதமர் அறிவிப்பு 

(லியோ நிரோஷ தர்ஷன்)

இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிப்பதாக  ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை உருவாக்கிதாருங்கள் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார். 

ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உடனடியாக நிறைவு செய்து கையளிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவுருத்தல் வழங்கியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு  முன்னர் குறைந்தப்பட்சம் கூட்டணிக்கான யாப்பு தனக்கு கிடைக்கப்பெற வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான யாப்பு குறித்து கலந்துரையாடுகயிலேயே  பிரதமர் ரணில் விக்ரமசிங்க  இதனை தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/63180

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.