Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும்

Featured Replies

போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

யுத்தக்குற்றவாளியான ஷவேந்திர சில்வாவை இலங்கை அரசாங்கம் இராணுவத்தளபதியாக நியமித்துள்ளது.இது தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

2009-ஆம் ஆண்டு நடந்த போரில் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஷவேந்திர சில்வா.இவ்வாறான ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இவரது தலைமையிலான 58-ஆவது படையணியே போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது. தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2008-ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் 58-ஆவது படையணி உருவாக்கப்பட்டது.

தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படையணியின் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில் ஷவேந்திர சில்வாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவ்வளவு மோசமான பின்னணி கொண்ட ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்து, போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மீதும், மனித உரிமைகளை வலியுறுத்தும் ஆர்வலர்கள் மீதும் அரசாங்கம் கரியைப் பூசியிருக்கிறது.

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் போரில் தமிழர்களுக்கு எதிராக ஏராளமான போர்க் குற்றங்கள் நடத்தப்பட்டதை விசாரணை மூலம் உறுதி செய்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம், அத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஷவேந்திர சில்வா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. அப்படிப்பட்டவரை தண்டிப்பதற்கு பதிலாக பதவி உயர்வு வழங்கியமை, இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படாது, போர்க்குற்ற விசாரணைகள் நியாயமாக நடைபெறாது என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது.

யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து படையினர் முற்றாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.

இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை ஈழத் தமிழர்களை அச்சுறுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களை பாதுகாப்பதும், போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதும் இந்திய அரசின் கடமை ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

http://www.thinakaran.lk/2019/08/22/இந்தியா/39074/ஷவேந்திர-சில்வாவை-இராணுவத்-தளபதியாக-நியமித்த-இலங்கை-அரசை-இந்தியா-கண்டிக்க

 

"இனப்படுகொலை குற்றவாளி இராணுவ தளபதியா..?” - வைகோ கண்டனம்

இலங்கை இராணுவத்திற்கு புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர்  வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

“மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானதாகும். அந்தப் படுகொலைகளை நடத்திய சிங்கள ராணுவத்தின் கமாண்டர் தான் சவேந்திர சில்வா.

கடந்த ஜனவரி மாதம், சிங்கள இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சவேந்திர சில்வாவை, அதிபர் மைத்ரிபால சிறிசேனா நியமித்தபோதே தமிழர்கள் தலையில் இடி விழுந்தது. இப்போது தலைமைத் தளபதியாக நியமித்துள்ளார். கொலைகார ராஜபக்ஷ அரசில் இராணுவ மந்திரியாக இருந்த சிறிசேனவும் இனப்படுகொலைக் குற்றவாளியே. இவர்கள் மூவருமே உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

சவேந்திர சில்வா நியமனத்திற்கு அமெரிக்க அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அரசு கண்டிக்கவில்லை. காலம் மாறும், ஈழத்தமிழர் பிரச்னையின் பரிமாணமும் மாறும். இனப்படுகொலை குற்றவாளிகள் தப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும்” என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/63196

மேற்குலகில் இருந்தோ ஐநா சபையில் இருந்தோ இந்த நியமனத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளித்து  ஶ்ரீ லங்கா அரசை காப்பாற்றலாம், என்று தீவிர யோசனையில் இருக்கும் இந்தியாவை Disturb  பண்ணுவதுபோல் இப்படியான கோரிக்கைகளை வைக்கும் ராம்தாஸ் மற்றும் வைகோ ஆகியோருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

மேற்குலகில் இருந்தோ ஐநா சபையில் இருந்தோ இந்த நியமனத்திற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சமாளித்து  ஶ்ரீ லங்கா அரசை காப்பாற்றலாம், என்று தீவிர யோசனையில் இருக்கும் இந்தியாவை Disturb  பண்ணுவதுபோல் இப்படியான கோரிக்கைகளை வைக்கும் ராம்தாஸ் மற்றும் வைகோ ஆகியோருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.. 

அருமையான‌ க‌ருத்து /

வைக்கோ ம‌ற்றும் ராம‌தாஸ்சுக்கு இரண்டு நாக்குக‌ள் / 

பாட்டாளி ம‌க்க‌ள் க‌ட்சியில் இருந்து வில‌கி வ‌ந்த‌ ( அண்ணன் வேல் முருக‌ன் அவ‌ர‌ ந‌ம்ப‌லாம் , ம‌றைந்த‌ மாவீர‌ன் காடு வெட்டி குருவையும் ந‌ம்ப‌லாம் , ராம‌தாஸ்சை ஒரு போதும் ந‌ம்ப‌ முடியாது / 2009ம் ஆண்டு இவ‌ரின் ந‌ரித்த‌ன‌ கூத்து பின்னாளில் தான் ப‌ல‌ருக்கு தெரிய‌ வ‌ந்த‌து /

வைக்கோ கொள்கை இல்லா ம‌னித‌ பிற‌ப்பு , எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் இன்னும் வைக்கோவை ந‌ம்புவ‌து கேக‌வ‌லத்தின் விட‌ கேவ‌ல‌ம் உற‌வே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.