Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பிரிட்டன் தயாராகவுள்ளது; புலிகளை சந்திக்கவும் விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பிரிட்டன் தயாராகவுள்ளது; புலிகளை சந்திக்கவும் விருப்பம்

வீரகேசரி நாளேடு

இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு தயாராகவுள்ளது. இதற்காக அந்நாட்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு இராணுவ வழிமுறை உகந்ததல்ல என்பதை நாம் நம்புகின்றோம் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளாது. இதற்கு சட்டபூர்வமான நியாயத் தன்மையை வழங்க நாம் தயாரில்லை என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்

விடுதலைப்புலிகள் இதுவரையில் சமாதான நோக்கத்திற்கோ அல்லது தீர்வொன்றினை முதன்மையாகக் கொண்டோ ஏற்படுத்தப்பட்ட பேச்சுக்கள் எதையும் மறுத்ததில்லை. அவர்கள் பேச்சுக்களுக்கு என்றுமே தயாராக இருந்துள்ளார்கள். பிரிட்டன் இவ்வளவு காலம் வரை காத்திருந்து புதிதாகக் களமிறங்குகின்றது இந்த நோக்கத்திற்கான பின்ணணித் தயாரிப்புகள் வெறும் சமாதானத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. விடுதலைப்புலிகளின் செயற்றிட்டங்களைப் பிற்போடச் செய்வதும் அவர்களை மேலும் காலநீட்சியால் பலமிழக்கச் செய்வதும் அவர்களின் திட்டமாகவிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். இவைகளையெல்லாம் ஏற்கெனவே படித்தறிந்தவர்கள் புலிகள். இந்தத் தந்திர வழியிலேயே அவர்களுக்கும் பதில் சொல்வார்கள். இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சர்வகட்சிகளின் பிரித்தானிய அமைப்புப்பற்றி ஜே வி பி ஹெல உறுமய இன்னமும் மூச்சுக்காட்டாமல் இருப்பது அரசின் பலவீனத்தைக் காட்டுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுடன் இலங்கையில் பேசுவதற்கு பிரிட்டிஷ் அரசு விருப்பம் தெரிவித்தள்ளது

பிரிட்டிஷ் அரசு இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்ள மறுத்திருக்கிறது

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமை குறித்த விவாதம் ஒன்றின் மீது பேசிய பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் கிம் ஹொவல்ஸ் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்டு பிரிட்டிஷ் அரசு, கொலை, தற்கொலை குண்டுதாக்குதல்கள், பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டபூர்வ நியாயத்தன்மையை வழங்க அரசு தயாராக இல்லை என்று கூறினார்.

இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஒரு சமமான அணுகுமுறையை கைக்கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை வெளிக்காட்ட விடுதலைப்புலிகளை அங்கீகரிக்கவேண்டிய தேவை இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, ஹொவல்ஸ் அவர்கள், பிரிட்டிஷ் அரசு அமைதியைக்கொண்டுவர உதவ தயாராக இருப்பதாகவும், இதற்காக, இலங்கையிலேயே, விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

பிரிட்டிஷ் அரசு இந்த விடயத்தில் ஒரு முழுமையான சமநிலையை கடைப்பிடிப்பதாகவும் , விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரு தரப்புகளுடனும் தொடர்பிலிருப்பதாகவும் அவர் கூறினார்.

ராணுவத்தீர்வு இதற்கு கிடையாது என்று பிரிட்டிஷ் அரசு நம்புவதாகக் கூறிய அவர் ஒரு உடன்பாடு குறித்த நம்பகத்தன்மை மிக்க கட்டமைப்பு தேவை என்றும் அனைத்து இலங்கையர்களும் மனித உரிமைகளை மதிக்கவேண்டும் என்றும் கூறினார்.

'இலங்கையில் நிலைமை மோசமடைந்துள்ளதில் அரசிற்கும் பங்கு உண்டு'

இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த நிழல் வெளியுறவு அமைச்சர் ஜெஃப்ரி கிளிண்டன் பிரவுண் அவர்கள் இலங்கையில் வன்சூழல் அதிகரித்துள்ளதில், நிலைமை மோசமடைந்ததில் இலங்கை அரசிற்கு பங்கே இல்லை என்று கூறிவிட முடியாது எனக் கூறியுள்ளார்.

இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஏ-9 பிரதான பாதையை இலங்கை அரசு மூடியது நிலைமையை மேம்படுத்த உதவவில்லை. இது தவிர இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி அவசியமான நிலையில் சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு செல்ல அரசாங்கம் அனுமதி அளிக்காததும் ஏற்புடையதாக இல்லை என்றும் கூறினார் ஜெஃப்ரி கிளிண்டன் பிரவுண். இது குறித்து இலங்கை அரசிடம் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறுபான்மை தமிழருக்கு இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது உரையில் கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்டகால அரசியல் தீர்வு எட்ட தகுதி உள்ளதாக இலங்கை அரசு மாற வேண்டுமானால், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் வழிமுறை என்பது மிகவும் அவசியம். தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் எனபதும் அவர்களுக்கு தெளிவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் தாம் நம்புவதாக ஜெஃப்ரி கிளிண்டன் பிரவுண் மேலும் கூறினார். விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்பது தெளிவு. எனவே விடுதலைப் புலிகளுக்கு நிதி செல்வதை ஒருவேளை நாம் தடுக்க என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்க வாய்ப்புள்ளது என்பதைக் காண இந்திய அரசிடம் பிரிட்டிஷ் அதிகாரிகள் எந்த முறையில் அணுகியிருக்கிறார்கள் என்பதை தாம் அரசிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

-பிபிசி

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய அரசின் உணமையான நோக்கம் இது தான் -

இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் தாம் நம்புவதாக ஜெஃப்ரி கிளிண்டன் பிரவுண் மேலும் கூறினார். விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்பது தெளிவு. எனவே விடுதலைப் புலிகளுக்கு நிதி செல்வதை ஒருவேளை நாம் தடுக்க என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்க வாய்ப்புள்ளது என்பதைக் காண இந்திய அரசிடம் பிரிட்டிஷ் அதிகாரிகள் எந்த முறையில் அணுகியிருக்கிறார்கள் என்பதை தாம் அரசிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

-பிபிசி

பிரிட்டிஷ் அரசு இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை விலக்கிக்கொள்ள மறுத்திருக்கிறது

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமை குறித்த விவாதம் ஒன்றின் மீது பேசிய பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் கிம் ஹொவல்ஸ் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்டு பிரிட்டிஷ் அரசு, கொலை, தற்கொலை குண்டுதாக்குதல்கள், பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டபூர்வ நியாயத்தன்மையை வழங்க அரசு தயாராக இல்லை என்று கூறினார்.

தெளிவற்ற கொள்கையுடன் இருப்பதற்கு இன்னுமொரு உதாரணம். புலிகள் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள் என்று பொய்யான தகவல்களைக் கொண்டுள்ள பிரித்தானியாவா பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறது?. எரிந்த வீட்டில் களவெடுக்கவே வருகிறது பிரித்தானியா அரசு.

பிரித்தானிய அரசின் உணமையான நோக்கம் இது தான் -

தெளிவற்ற கொள்கையுடன் இருப்பதற்கு இன்னுமொரு உதாரணம். புலிகள் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள் என்று பொய்யான தகவல்களைக் கொண்டுள்ள பிரித்தானியாவா பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறது?. எரிந்த வீட்டில் களவெடுக்கவே வருகிறது பிரித்தானியா அரசு.

ம் இதனை இன்று நானும் பிபிசியில் கேட்டேன் இப்படி அரைவேக்காடுதனமாகதான் தடை செய்தவையா

அங்கு இருக்கும் கவுன்ஸிலர்கள் இதனை கண்டிக்க வேண்டும்

தீவிரவாதம் என்றால் என்ன ஒரு காரியத்தில் தீவிரமாக இருப்பதுதானே அதுக்காக இப்படி சேறை அள்ளி பூசக்கூடாது இந்த சாக்கடைகள்

சிறீலங்காவிற்கான பிரித்தானிய துணை உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம்.

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையே சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக சிறீலங்காவிற்கான பிரித்தானிய துணை உயர் ஸ்தானிகர் மிஸ்.லெஸ்லி (Ms. Leslie Craig) கிரெக் கிளிநொச்சிக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை உயர் ஸ்தானிகர் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வனையும் மற்றும் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-Pathivu-

சிங்கள அரசிற்கு அழுத்தம் கொடுத்து போர்நிறுத்த உடன்படிக்கையை செம்மையாக அமுல்படுத்த செய்யாதவரை சமாதானம் பற்றி பத்திரிகையில் தான் பேசமுடியும். :(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.