Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது மகளை கருணை கொலை செய்ய கவர்னரிடம் அனுமதிக் கேட்டு கடிதம் எழுதிய தாய்..!

Featured Replies

IMAGE-MIX.png
இந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் ‘மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என,  கடிதம் எழுதியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

69349747_3695731033786094_22963480562929

இதுகுறித்து குறித்து மேலும் தெரியவருகையில், இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்வர்னலதா. என்பருக்கு, ஜான்வி எனும் ஒரு மகள் உள்ளார். ஜான்விக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சினையும், 8 வயது முதல் ஜினிக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜான்வியின் தந்தை உதவியாளராக பணிபுரிந்து வரும் வைத்தியசாலையில் ஜான்விக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையின் உளவியல் துறை புதிய தலைமை வைத்தியராக ராஜ்ய லட்சுமி என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

69682319_1801327916680066_42541808949877

ராஜ்ய லட்சுமி வந்த பிறகு, ஜான்விக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த ஸ்வர்ணலதா, தனது வேதனையை வெளிப்படுத்தி ஆந்திர மாநில கவர்னர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது; “எனது மகள் ஜான்வி 4 வயது முதலே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், என் கணவர் வைத்திய உதவியாளராக பணிபுரியும் வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக ஜான்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சமீபத்தில் அங்கு தலைமை மனநல வைத்தியராகப் பொறுப்பேற்ற வைத்தியர் ராஜ்யலட்சுமி என்பவர், எனது மகளுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என மறுத்துவிட்டார். 

69468644_391597004891364_152630674134243

என் மகள் வலியால் துன்பப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. இதனால், அந்த வைத்தியர் மீது உரிய நடவடிக்கை எடுங்கள், அல்லது எனது மகளை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்” என அதில் கூறியுள்ளார்.

முறையான சிகிச்சை மறுக்கப்பட்டதால், பெற்ற தாயே தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு கவர்னருக்கு கடிதம் அனுப்பிய சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/63780

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது மிக மிக நெகிழ்ச்சியான விடயம். நாளும் பொழுதும் பிள்ளை வளர வளர எடை அதிகமாகிக் கொண்டே இருப்பார். அதே நேரத்தில் பெற்றோர் வயதாகி வலுவிழந்து கொண்டே இருப்பார்கள்.......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.