Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்திரிகை அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை அறிக்கை

இலங்கைத் தீவில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இனப் பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தினை முழு அளவில் ஈர்த்துள்ளது.

இனப் பிரச்சினைக்கு யுத்தம் மூலமாக அல்லாமல் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என சர்தேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது.

சர்வதேசத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாத இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவதுடன் பயங்கரவாதத்திற்கு இராணுவத் தீர்வு என்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் கூறி தமிழ் மக்களுக்கு எதிரான போரை முழு அளவில் முன்னெடுத்து வருகின்றது.

இந் நிலையில் கடந்த 30-04-2007 அன்று சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் சிங்கள ஆட்சியாளர்களினால் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, இன அழிப்பிற்கு உட்படுத்தப்பட்டவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களாவர்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவே எந்தவோரு தீர்வுத் திட்டமும் வைக்கப்படுதல் அவசியமானதாகும்.

அவ்வாறு தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படுகின்ற போது பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகள் என்ன என்பதைனை அறிந்து அதனை பூரணப்படுத்தக் கூடிய தீர்வுத் திட்டத்தினை தயாரிக்கு முகமாக பாதிக்கப்பட்ட மக்களிடம், அவர்களால் பாராளுமன்றத்திற்கு பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளிடம் அல்லது தமிழ் மக்களின் ஏகப் பிரதி நிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டது. அந்த யோசனை தயாரிக்கப்பட்ட போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுலைப் புலிகளிடமோ தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடமோ அல்லது பொது மக்களிடமிருந்தோ பொது மக்கள் அமைப்புக்களிடமிருந்தோ எவ்விதமான ஆலோசனைகளும் பெறப்படவில்லை.

மாறாக தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு எனக் கூறிவரும் அரசு அவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான இராஐதந்திர தொடர்புகளை துண்டித்துள்ளதுடன் பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்களையும் படுகொலை செய்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை படுகொலை செய்துள்ள அரசு ஏனையவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அல்லது பதவி விலகச் செய்வதற்கு முயன்று வருகினறது.

கடந்த 2001.01.17 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘’பொங்குதமிழ்’’ நிகழ்வினை தொடர்ந்து தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழ்ந்த நாடுகளிலும் தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் ஒன்று கூடி தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்தகயதொரு நிலையில் தமிழ் மக்களின் ஆலோசைனை இல்லாமல் ஓர் தீர்வுத் திட்டம் தயாரிப்பதற்கு சுதந்திரக் கட்சிக்கு சுமார் ஓராண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியல் என்ன நடைபெற்றது.

தமிழ் மக்கள் தரப்பிலிருந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்ன என்பதனை தான் வாழும் மக்கள் கூட்டம் சார்பாக வெளிப்படுத்தக் கூடிய அரசியல் தெளிவும், துணிச்சலும் சலுகைகளுக்கு விலைபோகாத மன உறுதிதியும் மிக்க சமூகத்தின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர்.

குறிப்பாக 16 - 38 வயது வரையான இளம் தலைமுறையினர் சுமார் 4000 வரையானோர் கடந்த 18 மாத காலப்பகுதியல் மகிந்த அரசினால் நன்கு திட்டமிட்ப்பட்டு இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் அவ்வாறு கொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டுமுள்ளனர்.

இவ்வாறான கொலகைள் கடத்தல்களின் மூலம் நிராயுதபாணிகளாக வாழும் எஞ்சியுள்ள தமிழ் மக்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மரண பயத்தில் உறைய வைத்து அரசு விரும்பும் தீர்வுத் திட்டத்தினை தமிழ் மக்கள் மீது திணிப்பதே நோக்கமாகும்.

அதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக உலகிற்கு காட்டி அவர்களை அழிப்பதற்கு அல்லது பலவீனப்படுத்துவதற்கு அரசு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றது. அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை அழிக்க முயல்கின்றது.

இந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாகைகளை கருத்தில் கொள்ளாத ஒற்றையாட்சி அரசியல் அமைப்பினுள் உருவாக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டத்தினை நாம் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அந்த தீர்வுத்திட்ட யோசனை என்பது தமிழ் மக்களை இழிவுபடுத்தி சீண்டி ஆத்திரப்படுத்தும் நோக்கிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்னையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிற்கு வெளியே தமிழ் மக்களின் தலை விதியை தாமே நிர்ணயித்துக் கொள்ளும் பலம் தமிழ் மக்களின் கையில் இருப்பதனை உறுதிப்படுத்துவதுடன், தமிழர் தாயகத்திலுள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம், என்பவற்றினை உள்ளடக்கிய வகையிலான தீர்வுத் திட்டம் ஒன்றினை முன்வைத்து அதனடிப்படையில் தீர்வைக்காண முயல்வதே மீண்டும் இத் தீவில் இரத்த ஆறு ஓடுவதனை தவிர்ப்பதற்கான ஒரே வழிமுறையாகும். எமது இந்த ஆலோசனையை கருத்திலெடுப்பது ஆட்சியளர்களின் நலனிற்கு உகந்ததாகும்.

செ.கஜேந்திரன்

பாராளுமனற உறுப்பினர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

- சூரியன்

பத்திரிகை அறிக்கை என்று கூறப்பட்டுள்ளது? இந்தச் செய்தி எந்தப் பத்திரிகைகளில் வந்துள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை அறிக்கை என்று கூறப்பட்டுள்ளது? இந்தச் செய்தி எந்தப் பத்திரிகைகளில் வந்துள்ளது?

**********************

சூரியன் என்று குறிப்பிட்டிருக்கின்றார், இணையத்தளமாக இருக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.