Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவினால் தமிழகம் செல்ல முடியுமா?: ஐ.தே.க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவினால் தமிழகம் செல்ல முடியுமா?: ஐ.தே.க.

[வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ்நாட்டின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் முன்னணித் தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது:

இலங்கை அமைதி முயற்சிகளில் தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் பேற வேண்டும். தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறாமல் இதர நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் எதுவித பயனும் இல்லை.

இந்திய மத்திய அரசின் நிலைத்தன்மையானது தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்ததே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவும் அந்த மாநிலத்திலிருந்துதான் கிடைக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டின் அரசியல் தள ஆதரவு தேவை.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அல்லது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் நான் சவால் விடுக்கிறேன்.

மகிந்த ராஜபக்ச கடந்த முறை புதுடில்லிக்குத்தான் சென்றார். தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை ஒருபோதும் மீறிச் செயற்பட முடியாது. ஆகையால்தான் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது இலங்கைக்கும் தமிழ்நாட்டுக் இடையே பாலம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திட்டத்தால் எண்ணற்ற பயன்கள் நமக்கு உண்டு.

நன்றி - புதினம்

யோவ் என்ன இவனுக்கு லூசா சொந்த சகோதரருக்கு எதிராக தமிழக உறவுகள் திரும்புமா கேலிக்கூத்தாக இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவினால் தமிழகம் செல்ல முடியும்.

அரசியல் வளர்க்கும் கட்சிகள் இருக்கின்றதே மகிந்தாவை வரவேற்க.

  • கருத்துக்கள உறவுகள்

பிஸினஸ் பாட்னர் மணிசங்கர ஐயரும் இருக்கிறார்.

முத்தையா முரளிதரன் செய்தது போல் மகிந்துவின் மகனிற்கு தமிழ்நாட்டில் இருந்து பொண்ணு எடுத்தால் இந்தப் பிரச்சனையை இலகுவாகத் தீர்த்துவைக்க முடியம். மகிந்துவின் பிள்ளை என அறிந்தால் மணிசங்கர ஐயர் தனது மகளையே மவனுக்கு கலியாணம் கட்டிக் கொடுக்க முன்வருவார். மேலும், இப்படியான ஒரு சம்மந்தம் செய்தால் ஜெயலலிதா கூட கோடிக்கணக்கான ரூபாய்களை தனது கையால் செலவளித்து மகிந்துவின் மகனை தனது வளர்ப்பு மகனாக நினைத்து ஜாம் ஜாம் என்று திருமணம் செய்துவைத்து ஆசீர்வதிக்க முன்வரக்கூடும். மேலும், இந்த முயற்சிகள் கைகூடாவிட்டால் முத்தையா முரளிதரனிற்கு சிறீ லங்காவின் சமாதானத் தூதுவர் என்ற பட்டம் கொடுத்து தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்க முடியும். அல்லது சிறீ லங்கா அணியுடனும் இந்திய அணியுடனும் துடுப்பாட்ட சுற்றுப் போட்டி ஒன்றை தமிழ்நாட்டில் வைத்துவிட்டு இறுதி ஆட்டத்தை கண்டுகளிக்கும் சாட்டில் மகிந்து தமிழ்நாடு போகமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு காத்திருக்கிறது, சென்னையில்..! பங்கேற்பாளர்கள்..

1) தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி (புலி எதிரி என்று சட்டசபையில் பேச உதவும்)

2) முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா (ஆரிய கனெச்ஷன்)

3) கியூ பிரான்ச் பொலிஸ்

3) அலைகடலெனப் பொதுமக்கள் (பிறகு திரிசா வீட்டு விசேசத்துக்குச் செல்வார்கள்)

:lol:

மகிந்தாவுக்கும் ஆதரவு இல்லை புலிகலுக்கும் ஆதரவு இல்லை தமிழ் நாட்டில்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கும் ஆதரவு இல்லை புலிகலுக்கும் ஆதரவு இல்லை தமிழ் நாட்டில்

அப்ப வேற ஆருக்குத்தான் ஆதரவாம்? திரிசா??!! :lol:

மகிந்தாவுக்கும் ஆதரவு இல்லை புலிகலுக்கும் ஆதரவு இல்லை தமிழ் நாட்டில்

ஆமாம் நமீதாவுக்கும், மும்தாஜுக்கும் தான் நிறைய ஆதரவு இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.