Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிக்குகளின் அடாவடியை கண்டித்து பிரான்ஸில் ஒன்று திரண்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை புலம்பெயர் ஈழத்தமிழர்களால் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் வன்கொடுமைகளைக் குறிக்கும் பதாகைகளைம் கைகளில் தாங்கியிருந்தனர்.

கலந்துகொண்ட மக்களின் சார்பில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறிலங்காவின் இனவாதம் குறித்து சான்று பகரும் உரைகளும் இடம்பெற்றன.

போராட்டத்தின் நிறைவில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மேத்தா உரையாற்றினார். அவர் தனது உரையில் - சிறிலங்கா அரசானது தமிழின அழிப்பை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த இன அழிப்பின் பிரதிபலிப்பாக எம்மில் ஒரு பகுதியினர் தாய்த் தமிழகத்திலும் ஒருபகுதியினர் தாய்மண்ணிலும் மற்றொரு பகுதியினர் உலகம் முழுவதும் பரந்து வாழுகின்றோம். அதுமட்டுமல்லால் தமிழர்களுடைய அடுத்த தலைமுறையினரையும் விடுதலைப் பயணத்தில் பங்குகொள்ள வைத்து, அவர்களுடைய அளப்பரிய பங்கை ஏற்றும் போற்றியும் நிற்கின்றவேளை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஒரு தனிவரலாறு இருக்கின்றது என்று புத்தகங்களிலும் பெரும் காவியங்களிலும் உணர்த்திவரப்படும் அந்த விடயங்கள் இன்று கீழடி என்ற இடத்திலே மண்ணுக்குள்ளே புதைந்துபோன எமது தமிழர்களின் வரலாறு, தொன்மைமிக்க சான்றுகள் கண்முன்னாலேயே கண்டெடுக்கப்பட்டு அது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வகத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்ட துணிவோடும் நிமிர்வோடும் நிற்கின்றோம்.

தமிழினம் உலகின் மூத்த குடி என்பதைப் பறைசாற்றி நிற்கும் இந்தவேளையில், நாம் தொடர்ந்து போராடவேண்டிய தேவை எழுந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg\

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://yarl.com/forum3/forum/3-வாழும்-புலம்/?do=add

 

 

தமிழர்களான நாம்  எமது சக்தியை திரட்டி என்ன போராட்டத்தில் ஈடுபட்டாலும் எதிரியால் அதை  இலகுவாக நீர்த்து போக செய்யக் கூடிய செயலையும் நாமே அதே போராட்டத்தில்  செய்வோம் என்பதை படங்கள் உணர்ததுகின்றன. அதுவே எமது ஷபெசாலிட்டி. 

Edited by tulpen

On 10/6/2019 at 6:41 AM, colomban said:

நாம் தொடர்ந்து போராடவேண்டிய தேவை எழுந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

உண்மை. தெரிந்த வழியில் அந்த நாட்டின் சட்டத்திற்கு அமைய சாத்வீக வழியில் போராடும் உறவுகளுக்கு நன்றிகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.