Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய்: கொளத்தூர் தா.செ. மணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய்: கொளத்தூர் தா.செ. மணி

அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத விடுதலைப் புலிகள் புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தெரிவித்துள்ளார்.

குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிரு இதழில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ள கருத்து:

யாரோ ஓர் ஆறுபேர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் கடல்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதனை எப்படி முடிவு செய்தார்கள் என்று இதுவரை அரசுத் தரப்பு வெளியில் சொல்லவில்லை.

ஈழத்தமிழ் பேசுவதாலேயே அவர்களை புலிகள் என்று சொல்லிவிட முடியாது. விடுதலைப்புலிகள் அப்பாவி சிங்களப் பொது மக்களைக்கூட தாக்கியதாக இதுவரை வரலாறு கிடையாது.

அப்படி இருக்க.... நமது தமிழ் மீனவர்களை புலிகள் சுட்டார்கள்... கடத்தினார்கள்... என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? என்றார் அவர்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி.. இந்த கேள்வியை யாரிட்டை கேட்டவர்.. ?

பதில் சொல்லவேண்டியவர்களிட்டை எல்லோ கேட்கவேணும்?

அது சரி.. இந்த கேள்வியை யாரிட்டை கேட்டவர்.. ?

பதில் சொல்லவேண்டியவர்களிட்டை எல்லோ கேட்கவேணும்?

யாரிடம் கேட்டார் என்பது முக்கியமள்ள இது போன்ற கருத்துக்கள் பரவ வேண்டும் என்பதே முக்கியம். அதுவே அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.

நன்றி

சிவராஜா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் மீதான தமிழகத்தின் பரிவை வேரறுக்க புலிகள் மீது பொய்க் குற்றச்சாட்டு: மருத்துவர் இராமதாஸ்

ஈழத் தமிழர்கள் மீதான தமிழகத்தின் பரிவை வேரறுக்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தமிழகக் காவல்துறையினர் பொய்க்குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜுனியர் விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது குறித்து கூறியுள்ளதாவது:

தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள்தான் கடத்திக் கொன்றார்கள் என்று தமிழக டி.ஜி.பி. சொல்லியிருக்கிறாரே... இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

டி.ஜி.பி. சொல்வது எல்லாமே ஏதோ ஒரு மர்ம நாவலைப் படிப்பது போலவே இருக்கிறது. அவர் சொல்வது எதுவும் நம்பும்படியாக இல்லை. தமிழக மீனவர்களை நிச்சயமாகப் புலிகள் கடத்தியிருக்கவும் மாட்டார்கள், அவர்களைக் கொன்றிருக்கவும் மாட்டார்கள். எந்தக் காலத்திலும் புலிகள், நமது மீனவர்களைத் தாக்கியதில்லை. ஆனால், இதுவரை சிங்கள ராணுவத்தினர் சுமார் 300 தமிழக மீனவர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நாம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவோம்.

ஆட்சியில் இருக்கும் ஆளும்கட்சி பெயருக்குப் போராட்டத்தை நடத்தும். தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த வருத்தத்தோடு தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள். இப்போது டி.ஜி.பி., புலிகளைப் பற்றி சொல்லும் விவரங்களையும், தமிழக மீனவர்கள் எப்படி இறந்தார்கள் என்று அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்களையும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் செயல் இது!"

திடீரென்று புலிகள் மீது தமிழக காவல்துறை பாயக் காரணம் என்ன?

இப்போதுள்ள சூழலில் தமிழக மக்கள் ஈழத் தமிழர் களிடமும், அவர்களது பிரச்னையிலும் காட்டும் பரிவை வேரறுக்க, இதுமாதிரியான செய்திகள் கிளப்பப்படுவதாகவே நான் நினைக்கிறேன்

-புதினம்

அது சரி.. இந்த கேள்வியை யாரிட்டை கேட்டவர்.. ?

பதில் சொல்லவேண்டியவர்களிட்டை எல்லோ கேட்கவேணும்?

அன்பின் கிசான், திரு. கொளத்தூர் மணி அண்ணன் குறித்தான உங்களின் கருத்துகள் கொஞ்சம் எள்ளல் தன்மையுடனும் அவர் பற்றிய புரிதல் இல்லாமலும் இருக்கிறது. தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும், தமிழ்நாட்டுத்தமிழர்களின் உரிமைக்கும், கர்நாடக தமிழர்களின் உரிமைக்கும், ஈழத்தமிழர்களுக்காகவும் அதிக நாட்கள் சிறையில் வாடியவர். கொளத்தூர் பகுதியில் திரு.பொன்னம்மான் அவர்களுக்கு ஒரு நினைவு பேருந்து நிறுத்தம் நிறுவி இன்று வரை அதை பராமரித்து அவருடனான தன் நட்பை வெளிப்படுத்திவருகிறார். ஒரு ஈழவிடுதலைப்போராளிக்கு தமிழகத்தில் எங்குமே இது போன்ற நினைவுச்சின்னங்கள் இல்லை என்பது இன்னோரு உண்மை.

பொதுவாய் இந்திய அரசும் தமிழக அரசும் சொல்லியகுற்றச்சாட்டுக்கு எதிராய் தமிழ்நாட்டில் தமிழர்க்கு ஆதரவாய் உள்ள அனைத்து கட்சியும் ( திமுக, அ.தி.மு.க, காங்கிரஸு நீங்கலாக ) ஓரணியில் நின்று மறுத்தும் , கண்டித்தும் வருகின்றன என்பதும் இங்கு சொல்லவேண்டிய உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து எழுதுவதற்கு அனுமதி தரவும்

'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன்

[புதன்கிழமை, 9 மே 2007, 05:31 ஈழம்] [புதினம் நிருபர்]

"எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது."

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

"குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள் விடுதலப் புலிகள் என்று ஆதாரத்துடன் தமிழக காவல்துறை இயக்குநர் முகர்ஜி கூறியிருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?"

"இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும், 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் இலங்கை கடற்படைதான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதான் எங்கள் விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல். புலிகள் மீது திட்டமிட்டு பழி சுமத்துவதற்காகவே இலங்கை கடற்படை இப்படியொரு காரியத்தை செய்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதெல்லாம் விரைவில் அப்பட்டமாக வெளிஉலகுக்கு வரும்போது, புலிகள் மீது பொய்யை வாரி இறைத்திருப்பதை உலகம் உணரும். இலங்கைக் கடற்படையின் மோசமான எண்ணத்துக்கு ஈடுகொடுப்பது போல தமிழகக் காவல்துறையும் ஏன் இப்படியெல்லாம் அவதூறு சொல்கிறது என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை. தமிழக மக்கள் மீதும் மீனவர்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர்கள்தான் எமது போராளிகள். இதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. இலங்கைக் கடற்படையினர் மீனவர்களுக்கு எதிராக நடத்தும் பல்வேறு கொடுமைகளில் இருந்து மீனவர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அப்படி இருக்கும்போது, காவல்துறைத் தலைவர் முகர்ஜி சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது!"

"கடத்தப்பட்டு உங்கள் முகாமில் இருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களை மீட்க தமிழக அரசு தரப்பிலிருந்து, உங்கள் தரப்பிடம் மூன்று நாட்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இறுதிவரையில் நீங்கள் அவர்களை விடுவிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு தகவல். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ஐந்து கடற்புலிகள் ஈழத்தில் அடைத்து வைத்திருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களுக்காக அங்கிருக்கும் புலி தளபதி ஒருவரிடம் தமிழகத்தில் இருந்து வாக்கி-டாக்கி மூலமாக பேசியதாக வரும் தகவல் குறித்தெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?"

"இதுவும்கூட தவறான தகவல்தான். இலங்கைக் கடற்படையாலும் அதனோடு சேர்ந்து இயங்கும் கூலிப்படையாலும் மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற நாடகமாகவேத்தான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம். இதில் எங்களுக்கு இன்னொரு பெருத்த சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக காவல்துறையோடும் உளவுத்துறையோடும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவர்கள், புலிகளின் பெயரால் இப்படியான உரையாடல்கள நடத்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏனென்றால், இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக தமிழகக் காவல்துறையோடு எமது அமைப்பின் உறுப்பினர்களோ தளபதிகளோ நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதில்லை. அப்படி இருக்கும்போது, அவர்கள் எங்களோடு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றால் எப்படி? குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மீனவர்களை நாங்கள் கடத்தி வைத்திருக்கவில்லை என்கிறபோது, அவர்கள் ஏன் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? அப்படிப் பேசினால் அது அபத்தமாக இருக்காதா? தமிழக மக்களுக்கும் புலிகள் இயக்கத்துக்குமான அன்பை, பாசத்தை, உறவை கெடுக்கும் விதமாகவே இதெல்லாம் நடக்கிறது என்ற எங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது."

"எல்லாவற்றையும் நீங்கள் தெளிவாக மறுக்கிறீர்கள். ஆனால், உங்கள் 'மரியா' படகில் வந்த கடற்புலிகளோ மீனவர்களை சுட்டுக் கொன்றது புலிகள்தான் என்று தெளிவுபடச் சொல்கிறார்களே...?"

"ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரையில் 'மரியா' படகில் பிடிபட்டது கடற்புலிகள் என்று எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஒப்புக் கொண்டிருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது, அவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்று சொல்லி, எதையாவது தமிழகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்குமானால், அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? அப்படியே அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகச் சொன்னாலும், அந்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை யார் சோதித்தறிவது? எமது அமைப்புக்கு எதிரானவர்கள் மூலமாக திட்டமிட்டு ஏன் இப்படியொரு நாடகம் நடத்தப்படக் கூடாது? கொஞ்சம் பொறுங்கள்... எல்லா உண்மைகளும் விரைவில் வெளியே வந்துவிடும்!"

"தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக புலிகள் தரப்பில் அறிக்கை ஒன்று விடப்பட்டிருக்கிறது. அதில், 'காணாமல் போன மீனவர்கள் பற்றி அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள் என்றும் மீனவர்கள் பற்றி தகவல்கள் கிடத்தால் அவர்களை மீட்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம்...' என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே?"

"ஆமாம், பாதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள். அவர்களுக்காக நாங்கள் உதவுவோம். இந்த விஷயத்தில் எமது தலைமை கரிசனத்தோடும் அக்கறையோடும் இருக்கிறது. மீனவர்கள் கடத்தல் நாடகத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்ல நாங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்."

"ஒருவேளை மீனவர்களை மீட்கும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவைப்பட்டு, நீங்கள் தமிழக அரசோடு பேச வேண்டியிருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?"

"மீனவர்களை மீட்பதற்கும் அவர்களின் பாதுகாப்பு நிலைமைகளை உறுதிப்படுத்வதற்கும் தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உறுதுணயாக இருப்போம். சிங்கள கடற்படையாலோ கூலிப்படையாலோ நிகழ்த்தப்பட்ட இந்தச் செயலை முடிவுக்குக் கொண்டு வந்து, தமிழக மீனவர்கள் சிறுபாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இது தொடர்பாக எத்தனைமுறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்ப்பளித்து விடக்கூடாது."

"அண்டை நாட்டுப் பிரச்சினைதான் என்றாலும், ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறீர்களா?"

"நடப்பது என்னவென்று தமிழக மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும் சூழ்நிலையில் அவர்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் பரிவும் பாசமும் எப்படிக் குறையும்? அதற்கு வாய்ப்பே இல்லை! இப்படி தமிழக மக்கள் மனங்களில் இருந்து எங்களை பிரித்தெடுக்க சிங்கள அரசு போடும் நரித் திட்டங்கள் பலிக்காது. எங்களுக்கு எதிராக இந்திய அரசையும் திருப்பிவிடும் முயற்சிகளையும் சிங்கள அரசு செய்து வருகிறது. எங்களைப் பொறுத்த வரையில் பொய்கள் வேகமாகத்தான் பரவும். ஆனால், இறுதியில் அதை பரப்புகிறவர்கள் மீதே அசிங்கத்தைப் பூசும். உண்மைக்கு சோதனை வந்தால், அதனை பொறுமையாக எதிர்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. அதைத்தான் புலிகள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்."

"சமீபத்தில் மூன்றாவது முறையாக நீங்கள் கொழும்பில் வான்வழித் தாக்குதல் நடத்தினீர்கள். அதில் இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் பலவும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகிறதே..."

"சமாதான காலத்தில் நாங்கள் யுத்த தர்மப்படி எவ்வித தாக்குதலிலும் ஈடுபடாமல் இருந்தபோது, தொடர்ந்து தமிழ் மக்கள் மீது விமானத்தாக்குதல நடத்தியது சிங்கள விமானப்படை! பலமுறை எச்சரித்தோம்... உரியவர்களிடம் முறையிட்டோம். ஆனால், சிங்கள ராணுவம் வான்வழித் தாக்குதலை நிறுத்தவில்லை. அதன்பிறகுதான் புலிகள் தரப்பில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமானோம். சிங்கள ராணுவத்துகுத் தேவையான எரிபொருளைக் கொடுக்கும் கட்டுமானங்களை அழிப்பதுதான் எங்கள் விமானப்படையின் நோக்கம். வான் வழியாக நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானதுதானே தவிர, சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல. அப்படி இருக்கும் போது, நாங்கள் நல்லுறவைப் பேண விரும்பும் இந்திய அரசுக்கு எதிராக எங்களின் விமானப்படையை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்!"

"கிட்டத்தட்ட சிங்கள அரசு-புலிகள் என இரண்டு தரப்பும் முழுமையான போரில் குதித்துவிட்ட இந்த சூழ்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கிறதா?"

"இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இன அழிப்புப் போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பல லட்சம் மக்களை அகதிகளாக்கி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறார்கள். நாங்கள் நடத்துவது எமது மக்களை காக்கும் தற்காப்புப் போர்தான். மீண்டும் ஒரு சமாதானச் சூழலைக் கொண்டு வர நார்வே, பிரிட்டன் போன்ற நாடுகள் முயன்று வருகின்றன. என்றாலும், சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பு போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்காக நார்வே மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த அமைதித் தூதுவர்கள் எம்மைச் சந்திக்க எடுத்த முயற்சிகளையும் இலங்கை அரசுதான் தடுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையெல்லாம் நடக்குமா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கும்போது எங்கள் மக்களை காக்க நாங்களும் ஆயுதப்போர் நடத்தத்தானே வேண்டும்?"

நன்றி புதினம்

நன்றி ஜூனியர் விகடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.. இந்த கேள்வியை யாரிட்டை கேட்டவர்.. ?

பதில் சொல்லவேண்டியவர்களிட்டை எல்லோ கேட்கவேணும்?

ஈழத்தமிழர்களில் பலர் தான் உண்டு தனக்கும் ஈழத்துக்கும் சம்பந்தமில்லை என்ற நிலையில் இருக்கிறார்கள். ஒரு வித உதவிகளும் செய்யாமல் புலிகளும், சில ஈழத்தமிழர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் எங்களுக்காகக் குரல் கொடுப்பவர்களில் ஒருவர் கொளத்தூர் மணி அவர்கள்.

தயவு செய்து அவர்கள் போன்றவர்கள் புண் படுமாறு கருத்துக்களை பதிய வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.