Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தல் ;12 நாட்களுக்குள் 1034 முறைப்பாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் ;12 நாட்களுக்குள் 1034 முறைப்பாடுகள்

(செ.தேன்மொழி)

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,034 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

election.jpg

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணிவரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு 1,034 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன்போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 992 முறைப்பாடுகளும், வெவ்வேறு தேர்தல் முரண்பாடுகளின் காரணமாக 34 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் எட்டு முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  தேர்தல்கள் ஆணையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

 

https://www.virakesari.lk/article/67237

ஜனநாயகமிக்க தேர்தல் முறையை இலங்கை பின்பற்றி வருவதால் ஜனாநாயக நாடுகள் பாராட்டு

J Anojan on 2019-10-20 14:57:09

 

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் ஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளதாக நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஸ்டீப் Stef  Blok தெரிவித்துள்ளார்.

01-4-1.jpg

இலங்கைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது கட்சி சார்பின்றி தான் செயற்படப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி , இந்த தேர்தல் அமைதியான ஜனநாயகமிக்க, ஊழல், மோசடியற்ற தேர்தலாக அமைவதற்கு தன்னால் உத்தரவாதமளிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் முப்படைகள் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் தேர்தல் காலங்களில் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து பக்கச்சார்பற்ற சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் துறையினருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளின்போது குறிப்பாக நெடுஞ்சலைகள் அபிவிருத்தி, நீர் மாசடைதலை தடுப்பதற்கான செயற்திட்டங்கள், கிராமிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்களுக்காக நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, அண்மையில் பொலன்னறுவையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில வேலைத்திட்டங்களுக்கு நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகளையும் நினைவுகூர்ந்தார்.

இலங்கையின் திரவ பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அத்துறை தொடர்பில் நிபுணத்துவமுடைய நெதர்லாந்தின் பங்களிப்பை மென்மேலும் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின்போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தேவை தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.

நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசியாவிற்கான பிரதான அதிகாரி, இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் உள்ளிட்டோரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரக்கோன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/67236

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சனநாயகம்.. சொறீலங்காவில்.. வெள்ளைப் பைத்தியங்கள் சில.. மறதி பிடித்து அலையுதுங்க..

கோத்தாவுக்கு வாக்களிக்க முன் இதனைப் பார்க்கவும். 

மேற்குலக நாடுகளை பொறுத்தவரையில் பல கட்சி அமைப்பு முறையும், சொன்ன கால கட்டத்தில் தேர்தல்களை நடாத்துவதும், சனநாயகத்தின் ஆணி வேராக பார்க்கப்படுகின்றது.

அதற்கு அப்பால், தான் மனித உரிமைகள், சம உரிமைகள், மத உரிமைகள் என பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், அவை முக்கியமாக பார்க்கப்படுவதில்லை.


 சனநாயகம் உள்ள இடங்களில் மேற்குலம் தனக்கு தேவையாவனற்றை சுரண்டவும் சந்தைப்படுத்தவும் இலகுவாக பயன்படுத்தி விடும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.