Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காற்றுமாசில் டெல்லியை மிஞ்சிவிட்டது சென்னை: கடந்த 24 மணி நேர சராசரி மாசு அளவு 272 என ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Featured Replies

Dkn_Tamil_News_2019_Nov_3__986690700054169.jpg

சென்னை: சென்னையில் காற்றுமாசு அளவு தொடர்ந்து மிகவும் அதிகரித்து இருப்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அமபலமாகியுள்ளது. டெல்லியை விட சென்னையில் காலை 9.30 மணி அளவில் காற்றுமாசு அதிகரித்து இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. காலையில் டெல்லியில் காற்றுமாசு குறியீட்டு எண் 254 ஆக இருந்தபோது சென்னையில் 264 வரை அதிகரித்திருந்தது. வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணாநகரில் சராசரி காற்றுமாசு 341 புள்ளிகளாக இருந்தது. கடந்த 24 மணி நேர சராசரி மாசு அளவு 272 ஆக உள்ளது. மேலும் சென்னையில் வெள்ளிக்கிழமை வரை காற்றுமாசு அதிகரித்தே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கினால் சென்னையில் காற்றுமாசு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. சுவாசிக்க தகுந்த காற்றின் மாசு அளவு 100க்குள் தான் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பின் மீதமுள்ள பயிர்களின் அடிப்பகுதி, வேரை மறுமுறை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அங்கு ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலத்தின்போது, காற்று  மாசு ஏற்படுகிறது. இப்படி எரிப்பதை தவிர்க்கும்படி பஞ்சாப், அரியானா மாநில அரசுகளை டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனாலும் அறுவடைக்குபின், காய்ந்த பயிர்களின் அடிப்பகுதியை எரிப்பது தொடர்ந்து வருகின்றன. இதனால் நவம்பர்  8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், காற்றுமாசு விவகாரம் தொடர்பாக பஞ்சாப், அரியானா தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதள பக்கத்தில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதை நேற்று உறுதிப்படுத்தியது.

அதே நேரத்தில் சென்னையில் 150க்கு கீழ் என்ற நிலையில் இருந்த காற்று மாசின் அளவு  அதிகரித்து, தற்போது சென்னையில் அதிகபட்சமாக 201 முதல் 168 வரை உள்ளது. சென்னையின் வழக்கமான காற்றுமாசின் அளவு 0-150 என்ற அளவில் இருந்ததாக தெரிவித்திருந்தது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் பரவலாக காற்று மாசு மோசமான அளவுக்கு அதிகரித்துவிட்டதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்திருந்தது. மூச்சுத் திணறல் ஏற்படும் அளவுக்கு காற்றில் கலந்துள்ள மாசுத்துகள் 224 பிபிஎம்  ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில், இன்று காலை சென்னையில் காற்றுமாசின் அளவு டெல்லியில் இருப்பதை விட அதிகரித்திருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539238

large.575F8C71-495E-43DF-8D08-9783EA9CB6BD.jpeg.84babab58f3609137fe32f8ad1349390.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

large.575F8C71-495E-43DF-8D08-9783EA9CB6BD.jpeg.84babab58f3609137fe32f8ad1349390.jpeg

இதனை செய்பவர்கள் முழு முட்டாள்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.