Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சிறிசேனவிற்கு வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் குறித்த கடிதம் அளிக்கப்பட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மைத்திரிபால சிறிசேனபடத்தின் காப்புரிமை Getty Images Image caption மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புலனாய்வுத்துறையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

இலங்கை புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த கடிதத்தின் பிரகாரம், வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் தொடர்பிலான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

அத்துடன், குறித்த வேட்பாளர்கள் மாவட்ட ரீதியில் எவ்வாறு முன்னிலை வகிக்கின்றார்கள் என்பது தொடர்பிலும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த கடிதம் கடந்த ஐந்தாம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் தலைமையகத்தின் பதில்

புலனாய்வுத்துறையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக உண்மைக்கு புறம்பானவை என போலீஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

போலீஸ்படத்தின் காப்புரிமை Getty Images

போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர், குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதத்தில் தேர்தல் நடவடிக்கைகளிலோ அல்லது தேர்தல் கருத்து கணிப்புகளிலோ ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும், நீதியானதுமாக அமைதியுடன் நடத்துவதே ஸ்ரீலங்கா போலீஸின் முழுமையான பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான போலி தகவல்கள் அடங்கிய கடிதத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நபர் விரைவில் அடையாளம் காணப்பட்டு, அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50432184

சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த அறிக்கை யாரிடமாவது இருக்கா?

லாரா, உங்களிடம்?

2 hours ago, நிழலி said:

சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த அறிக்கை யாரிடமாவது இருக்கா?

லாரா, உங்களிடம்?

சிங்களத்தில் உள்ளது.

EJZlWeQWoAEdOD7?format=jpg&name=medium

இது பொலிஸின் மறுப்பு கடிதம்.

EJZgB-TVAAAgApB?format=jpg&name=medium

2 hours ago, Lara said:

சிங்களத்தில் உள்ளது.

EJZlWeQWoAEdOD7?format=jpg&name=medium

இது பொலிஸின் மறுப்பு கடிதம்.

EJZgB-TVAAAgApB?format=jpg&name=medium

நன்றி லாரா

இதில் 76.24 இலட்சம் வாக்குகள் மூலம் 58.2 வீதம் பெறுவார் என்றும் சஜித் 45.46 இலட்சம் வாக்குகள் மூலம் 34.7 வீதமும் அனுர 5.7 இலட்சம் வாக்குகள் மூலம் 4.4 வீதம் பெறுவார் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றது.
அத்துடன் கோத்தா கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, அனுராதபுரம், பொலனறுவை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கேகாலை, குருணாகல், புத்தளம், மொனராகலை, பதுளை, மாத்தளை ஆகிய 16 மாவட்டங்களிலும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய 5 மாவட்டங்களில் மாத்திரம் சஜித் வெல்வார் என்றும் உள்ளது.

கோத்தா வெல்லும் 16 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட சஜித் வெல்ல மாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.

என் கணிப்பின் படி மேலே சொல்லப்பட்டவற்றில் கொழும்பு, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் கோத்தா வெல்வது கடினம் என நினைக்கின்றேன். அத்துடன் அனுர கண்டிப்பாக 7 வீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறுவார் என திடமாக நம்புகின்றேன்.

போர்க்குற்றவாளியும், மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதியுமான கோட்டாபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கைவிடவில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளதாக ஒரு வீடியோ எனக்கு கிடைத்துள்ளது.  

குடியுரிமையைக் கைவிடும் செயற்பாடு நிறைவுபெற 1 வருடம் எடுக்குமெனவும் இன்னமும் அது முடியவில்லை என அந்த வீடியோ நீள்கிறது!

ஆனால், அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

வீடியோவில் அமெரிக்க அதிகாரி கதைக்கும் விதத்தைப் பார்க்கும் போது பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.
 

1 hour ago, போல் said:

போர்க்குற்றவாளியும், மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதியுமான கோட்டாபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கைவிடவில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளதாக ஒரு வீடியோ எனக்கு கிடைத்துள்ளது.  

குடியுரிமையைக் கைவிடும் செயற்பாடு நிறைவுபெற 1 வருடம் எடுக்குமெனவும் இன்னமும் அது முடியவில்லை என அந்த வீடியோ நீள்கிறது!

ஆனால், அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

வீடியோவில் அமெரிக்க அதிகாரி கதைக்கும் விதத்தைப் பார்க்கும் போது பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.

அந்த வீடியோ போலி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.