Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்? - ரஜினிகாந்த் பதில்!

Featured Replies

கமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிசயம் நடக்கும் என்றும் ரஜினி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கோவாவில் நேற்று வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதுபற்றி தனது கருத்தை தெரிவித்தார். ‘'நேற்று நான் வாங்கிய விருதுக்கு தமிழக மக்கள்தான் காரணம். எனவே அந்த விருதை தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்'' என்று விருதுபற்றி ரஜினி கூறினார்.

தொடர்ந்து, ‘கமலும் நீங்களும் இணைந்து பணியாற்றுவதாக கூறினீர்கள். அப்படியென்றால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுகிறதே?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

‘தேர்தல் நேரத்தில், அப்போதைய சூழலில் எடுக்கப்பட வேண்டிய முடிவு இது. நான் கட்சி ஆரம்பிக்கும்போது, நானும் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு இது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அப்போது சொல்கிறேன். இப்போது அதுபற்றி பேச விரும்பவில்லை.' என்று பதில் அளித்தார்.

தமிழக திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, ‘2021 தேர்தலில் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள்' என்று கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 

நடிகர் ரஜினிகாந்த், தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாக 2017-ல் தனது விருப்பத்தை அறிவித்தார். இதுவரை அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. இருப்பினும், 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவது உறுதி என்று கூறியுள்ளார். இதனால் அவர் அடுத்த ஆண்டு கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ரஜினி, கமல் என இருவரையும் ஆளும் அதிமுக பொருட்படுத்தவில்லை. 2021-ல் அதிசயம் நடக்கும் என்று ரஜினி சொன்னது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டபோது, ரஜினி முதலில் கட்சியை ஆரம்பிக்கட்டும் என்று கிண்டலாக பதில் அளித்தார். 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோபி & சுதாகர் பகிடி .. 😊

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்... ரஜனி தனது  "கார் டிரைவருக்கு"  கொடுக்க வேண்டிய சம்பளத்தையும்,
அவரின் மனைவி... நடத்தும்  பள்ளிக்கூடத்தின்,
பல மாத  வாடகைப் பணத்தையும். கொடுத்தால் தான்....   
தமிழகத்தின் முதலமைச்சர் ஆக... ஆசைப் படலாம்.  :grin:

இல்லாட்டி... நாங்கள், கமலை... முதலமைச்சராக்கி  விடுவோம். 😛

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

முதலில்... ரஜனி தனது  "கார் டிரைவருக்கு"  கொடுக்க வேண்டிய சம்பளத்தையும்,
அவரின் மனைவி... நடத்தும்  பள்ளிக்கூடத்தின்,
பல மாத  வாடகைப் பணத்தையும். கொடுத்தால் தான்....   
தமிழகத்தின் முதலமைச்சர் ஆக... ஆசைப் படலாம்.  :grin:

இல்லாட்டி... நாங்கள், கமலை... முதலமைச்சராக்கி  விடுவோம். 😛

சிறித்தம்பி! இரண்டுமே ஒரு சதத்துக்கும் உதவாது. 😊

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! இரண்டுமே ஒரு சதத்துக்கும் உதவாது. 😊

குமாரசாமி அண்ணை.... இவர்களை,  "பம்பல்" அடிக்க வேண்டும்... 
என்பதற்காகவே.... இடைக்கிடை.. "உசுப்பு"  ஏத்திக் கொண்டிருக்க வேண்டும். :)

ரசனி காந்தையும்,  கமலையும்.....  தமிழகம் முதல்வர்களாக  தெரிந்து எடுத்தால்,
( அப்படி சிந்திப்பதே... மகா தவறு)
"சினிமா பைத்தியங்கள்" வாழும் நாடு, தமிழ் நாடு... என்று பெயரை மாற்ற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை காக்கா பிடிப்பதற்காக, கமலை மிக மோசமாக அசிங்கப்படுத்திய இயக்குநர்: ஆரம்பமானது ஈகோ யுத்தம்.

rajini-jpg.jpg

’தமிழகத்தின் நலனுக்காக, தேவைப்பட்டால் அரசியலில் இணைந்து இயங்க தயார்!’ என்று கமலும், ரஜினியும் சொன்ன ரயலாக்தான் இன்று இந்திய அரசியலையே அதிர வைத்துள்ளது.

கமலின் அரசியலையும், ரஜினியின் அரசியல் ஏற்பாடுகளையும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. என இரு கட்சிகளுமே கன்னாபின்னாவென திட்டி வரும் நிலையில், இருவரும் இணைந்து நிற்போம்! என கூறியுள்ளதால் திணறிக் கிடக்கின்றன திராவிடக் கட்சிகள்.

எந்த காலத்திலும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து அரசியல் செய்துவிட கூடாது என்பதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தெளிவாய் இருக்கின்றன. இதற்காக எந்த உச்சத்துக்கும் சென்று, உள்ளடி வேலை பார்த்திட தயாராய் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் ‘இணைந்த அரசியலுக்கு’ கமலும், ரஜினியும் முதல் புள்ளி வைத்த துவங்கிய நிலையிலேயே அவர்களை சார்ந்தவர்கள், ஈகோ கொண்டு மோத துவங்கியுள்ளதுதான் ஹைலைட்டே.

கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் முக்கிய நிர்வாகியும், ரஜினியுடன் பல படங்களில் ஜோடி போட்டவருமான ஸ்ரீப்ரியா “இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து அரசியல் செய்தால் வெற்றி நிச்சயம். ஆனால், முதல்வராக கமல்தான் வரவேண்டும்! இது எனது விருப்பம்.” என்று ஒரு பட்டாஸை பற்ற வைத்தார்.

இது ரஜினி தரப்பை கடும் டென்ஷனாக்கிவிட்டது. ’ஸ்ரீப்ரியாவின் வார்த்தை அவருடையதல்ல, அவரை அப்படி பேச வைத்திருக்கிறது அவரது கட்சியின் தலைமை!’ என்று ரஜினியிடம் கமலைப் பற்றி போட்டுக் கொடுத்தனர் சிலர்.

இந்த நிலையில் இதற்கு பல மடங்கு பதிலடியை தந்திருக்கிறது ரஜினியின் வட்டாரம். ரஜினியின் வெறித்தனமான ஃபேனான இயக்குநர் பிரவீன் காந்தி, சூப்பர் ஸ்டாரின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக என்ன பேசியிருக்கிறார் தெரியுமா?....... “கருப்புத் தங்கம் ரஜினி, வெள்ளைத் தங்கம் கமல் இருவரும் அரசியலில் இணைந்தால் அது திராவிடத்திற்கு முற்றுப் புள்ளிதான்.

தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கிய திராவிட கழகங்களிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க இருவரின் இணைப்பே மூலதனம். தமிழகத்துக்கு பெரிய நன்மை செய்யும் எண்ணம் ரஜினி, கமல் இருவருக்கும் வந்துவிட்டது.

ஆனால்.... கமல், சினிமா உலகில் ரஜினிக்கு முந்தி வந்தவர். ஆனால் இயற்கையோ பிந்தி வந்த ரஜினிக்கே முதலிடம் கொடுத்தது. அதேபோல் அரசியலிலும் ரஜினிக்கு முன்பே வந்துவிட்டார் கமல். ஆனால் இங்கும் கமலை விட ரஜினிக்கே மக்கள் ஆதரவு அதிகம். சினிமா, அரசியல் இரண்டிலும் ரஜினிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார் கமல். நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற  போட்டி இருந்ததால்தான் சினிமாவில் இருவரும் பிரிய வேண்டிய சூழல் வந்தது.

ஆனால் அரசியலில், கமல் நிச்சயம் ரஜினிக்காக விட்டுக் கொடுப்பார் என்று நம்புகிறேன். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் ரஜினி, கமல் இருவரும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், ரஜினிதான் நிச்சய்ம அதிக இடங்களைப் பிடிப்பார். அதனால், ஆட்சியில் அவரே முதல்வராவார், முதலமைச்சராவார். அதற்கு அடுத்த இடத்தில்தான் கமல் இருப்பார்.

இதையெல்லாம் நன்கு யோசித்துவிட்டுதான், இருவரும் ‘அரசியலில் தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம்’ எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என நினைக்கிறேன்.” என்று பட்டாஸாக வெடித்துள்ளார். ரஜினியை இம்ப்ரஸ் பண்ணவோ, அல்லது பெருமைப்படுத்தவோ வேண்டி, கமலை மிக கேவலமாக பிரவீன்காந்தி பேசியுள்ளார்! என்று அரசியல் வல்லுநர்கள் இதை பார்க்கிறார்கள்.

ரஜினியிடம் கமலை சிலர் போட்டுக் கொடுத்தது போலவே, பிரவினின் கருத்தை ரஜினியின் கருத்தாகவே கமலிடம் போட்டுக் கொடுத்துள்ளனர் அவருக்கு வேண்டிய சிலர். ஆக அமர்க்களமாக துவங்கிவிட்டது ஈகோ யுத்தம்!

https://tamil.asianetnews.com/politics/director-insults-kamal-q1f96b

டிஸ்கி :

VPVS+Template-50.jpg

ரெண்டு தங்கங்களும் ஒரு ஓரமா போய் விளையாடுக.☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.